Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டோம் ; உரிமை கோரியது ஆவா குழு

Featured Replies

பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.

ava.jpg

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின்  வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர்.

அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் "தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்பாண பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும் அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது.

ராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பச்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் என பதிவிட்டுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/75499

 

பகிடிவதைக் குற்றச்சாட்டு; மாணவனின் வீட்டில் தாக்குதல்

image_27a90862aa.jpgபகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்று இரவு  10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீடே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பகிடிவதைக்-குற்றச்சாட்டு-மாணவனின்-வீட்டில்-தாக்குதல்/71-245363

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஆவாவும்  ஆவன்னாவும்  சமூக சேவை செய்வதாக நாம் எண்ண  வேண்டும்?
இதுதானே மாட்டர்? 
 

இது போன்ற தாக்குதல்கள் தவறானது.

சந்தர்ப்பத்தைப் பயன்டுத்தி தீய சக்திகள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்க முற்படுவதாக தெரிகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது பொறுப்பற்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒருபிரிவினர்  தமது சமூக விரோத நடவடிக்கைகளை தொடர, ஏனைய மாணவர்கள் அவற்றைக் கண்டும் காணாத மாதிரி இருந்ததன் மூலம் தான் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காவாலி மாணவன் நல்ல வசதியான வீட்டு பிள்ளை போல

4 hours ago, சுவைப்பிரியன் said:

அந்த காவாலி மாணவன் நல்ல வசதியான வீட்டு பிள்ளை போல

அவன்  காவலியாக இருந்தாலும் இந்த ஆவா கூடடம் அதைவிட கேடு கெடட காவலிகள்।  தங்களது முன்னைய காவலித்தனத்தை இதை சாடடக வைத்து சடடவிரோத நடவடிக்கைக்கு அனுமதிக்க முடியாது। காவல்துறை எல்லா காவலிகள் மீதும் சரியான சடடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்। பொது மக்கள் தாக்குதல் நடத்துவது வேறு இந்த காவலிகள் தாக்குதல் நடத்துவது வேறு।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.