Jump to content

சிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் போயிங் விமான நிறுவனம்


ampanai

Recommended Posts

கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு விற்கப்படாத போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் எரிபொருள் தொட்டியில் கழிவுப்பொருள்கள் காணப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு நடந்ததாக கூறப்படும் இரண்டு விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்த அமெரிக்க விமானப்போக்குவரத்து துறை மற்றும் நாடாளுமன்ற குழு நடத்தும் விசாரணை முடிந்து ஏப்ரல் மாத வாக்கில் மீண்டும் பறப்பதற்கான அனுமதி கிடைக்கும் என போயிங் எதிர்பார்க்கிறது.

அதே சமயம் சியாட்டில் (Seattle) நகருக்கு அருகே உள்ள உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் தொழில்நுட்பக் குறைபாடு ஏதும் இல்லை என்று விசாரணைக் குழுவினர் கூறியுள்ளனர்.

ஆனால் சவுத் கரோலினாவில் (South Carolina) உருவாக்கப்பட்ட போயிங் 787 டிரீம்லைனர் (Dreamliner) உள்ளிட்ட விமானங்களில் கழிவுப் பொருள்கள் அகற்றப்படாமல் அலட்சியமாக போடப்பட்டது என்று வெளியான தகவல் போயிங் நிறுவனத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

https://www.polimernews.com/dnews/101023/சிக்கலுக்கு-மேல்-சிக்கலில்சிக்கித்-தவிக்கும்-போயிங்விமான-நிறுவனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகல வீழ்ச்சியையும் 777X   காப்பாற்றும்.இறக்கிய உடனேயே 8 நாடுகள் ஓடர் கொடுத்துட்டார்களாமே.

15 minutes ago, ampanai said:

 

Link to comment
Share on other sites

13 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல வீழ்ச்சியையும் 777X   காப்பாற்றும்.இறக்கிய உடனேயே 8 நாடுகள் ஓடர் கொடுத்துட்டார்களாமே.

ஒரு காரணம் இதை விட்டால் எயர் பஸ். அங்கும் நீண்ட காலம், 5 வருடங்களுக்கு மேலாக  காத்திருக்கவேண்டும்.

அடுத்தது, பலரும் பழைய, அதிகம் எரிபொருளை உள்வாங்கும் விமானத்தை பயன்படுத்தி இலாபத்தை அது குறைத்தும் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சகல வீழ்ச்சியையும் 777X   காப்பாற்றும்.இறக்கிய உடனேயே 8 நாடுகள் ஓடர் கொடுத்துட்டார்களாமே.

 

இனி சனம் பயமில்லாமல் ஏற வேணுமே? :grin:

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

இனி சனம் பயமில்லாமல் ஏற வேணுமே? :grin:

ஒரு மூன்று மாதங்களுக்கு 'மது இலவசம்' என்றால் பயம் பறந்து விடும் 🙂 

இல்லை, உண்மையில் பாதுகாப்பாக இருக்கும்.

காரணம், அமெரிக்க அரசு ஆறுதலாக, எல்லாவற்றையும் பரிசோதனை செய்து தான் பறக்க விடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.