Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சிக்குள் கோடி கோடியாக வெளிநாட்டுப் பணம்! வெடித்தது சர்ச்சை: குழப்பத்தில் பலர்..

Featured Replies

தேர்தல்களின் போது செலவிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கான ரூபா பணம் கொட்டுகின்றது.

அக்கட்சியின் பொறுப்புள்ள பிரமுகர்களே இந்த தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த நிதி வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு வந்து சேருகின்றதா? அது உரிய முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பது பற்றிய விசாரணைகளை அதிகார வர்க்கம் ஆரம்பிக்கும் சூழல் இருப்பதாக அறிய வருகின்றது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தற்போதைய தலைவர் கதிரவேலு குகதாசன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை கனடாவில் உயர்பதவியில் இருந்தவர்.

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் உட்படப் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவர். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வலதுகரமாக திருகோணமலையில் செயற்படுபவர்.

அவர் 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்காகத் தானே சில கோடி ரூபாக்களை கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

அதில் அவர் 2009இற்குப் பின்னர் நடந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்கள், மாகாணத் தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒவ்வொன்றிற்கும் அனைத்துத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேர்தல் செலவுகளுக்காக சில கோடி ரூபாக்கள் நிதியை வழங்கியுள்ளேன் என்று கூறியிருந்தார்.

இதே சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான புதிய சுதந்திரன் இந்தத் தகவலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

அதில் குகதாசன் சொல்லியது போல 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகர சபை போன்றவற்றுக்கு நடந்த தேர்தல் தொடங்கி இற்றைவரை நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில கோடிகளைக் கொடுத்து உதவியிருக்கின்றது . அதில் குகதாசனின் முற்சி அளப்பரியது.

தேர்தலுக்கு மட்டுமல்ல வட, கிழக்கில் வாழும் தமிழ் மக்களது பொருளாதார மேம்பாட்டுக்கும் சில கோடிகளை இது வரை கனடா த.தே.கூ திரட்டிக் கொடுத்துள்ளது என்று கட்சியின் பிரமுகர் நக்கீரன் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேசமயம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தையொட்டிப் பேசப்பட்ட விவகாரங்களை இணையத்தளம் ஒன்று விளாவாரியாக வெளியிட்டது.

அதன் விபரங்களாவன,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்படும் நிதி தொடர்பாக மத்திய செயற்குழு கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தனது மகன் கலையமுதனை நோக்கி “உன்னை வெளியாலே கலைப்பேன்” என எச்சரித்த சுவாரஷ்ய சம்பவமும் இடம்பெற்றதை குறித்த இணையம் அறிந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த சம்பவத்தைக் குறிப்பிட முன்னர் ஒரு பின்னணித் தகவல்... கனடாவிலுள் சில நபர்கள் பணத்தை வீசியெறிந்து இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்ய முனைவது தொடர்பாக குறித்த இணைய பக்கத்தில் ஏற்கனவே பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல புலம்பெயர் அமைப்புக்கள் பணத்தை வீசியெறிந்து பல குழுக்களை இயக்குவதை போல கனடாவிலுள்ள சிறிய குழுவொன்றும் தமிழ் அரசுக் கட்சியின் ஒரு சிறிய குழுவிற்குப் பணத்தை வீசியெறிந்து இயக்க வருவதைப் பற்றிய பல தகவல்களை குறித்த இணையம் பல முறை சுட்டிக்காட்டியிருந்தது.

அந்தக் குழுவின் அனுசரணையிலேயே வடமாகாணசபையில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு விக்னேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அஸ்மின், சயந்தன், ஆர்னோல்ட், சத்தியலிங்கம், சாணக்கியன் ஆகியோரை அந்த குழு போஷித்து பலப்படுத்த முயற்சித்து வருகின்றது.

தேர்தல் காலத்தில் இந்த குழு கனடாவில் பணம் சேகரித்து சுளையாக அனுப்புவது வழக்கம். அந்த குழுவின் கனடா செயற்பாட்டாளராக இருந்த குகதாசன் என்பவர் இறக்குமதியாகி தற்போது திருகோணமலை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

பணம் பாதாளம் வரை பாயுமென்ற நம்பிக்கையில் திருகோணமலையில் பழைய கட்சி செயற்பாட்டாளர்களையெல்லாம் தூக்கி வீசிவிட்டு தனித்து வில் வாசிக்க முயன்று தற்போது சிக்கிப் போயுள்ளார்.

அவருக்கும் திருகோணமலையில் கட்சி செயற்பாட்டாளர்களுக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் சந்திப்பு சம்பந்தன் தலைமையில் இன்று நடக்கவுள்ளது.

அவர் அண்மையில், தானே கேள்வியெழுப்பி தானே விடையளித்து ஒரு கேள்வி பதில் அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். அதில் நான் சில கோடி ரூபாயை கட்சிக்காக வழங்கியிருக்கின்றேன் என குறிப்பிட்டுமிருக்கின்றார்.

இந்த அறிக்கையை படித்த கட்சியின் நிர்வாகிககள் அப்படி சில கோடி ரூபாக்கள் அவரால் கட்சிக்கு வழங்கப்பட்டதா என வினவியுள்ளனர்.

இந்த விவகாரம் கட்சியின் பொருளாளர் வரைப் போனது. குகதாசனிடமிருந்து ஒரு சதமும் கட்சியின் பொருளாளரிடம் வரவில்லை. பொருளாளரிற்கு வராமல் கட்சிக்குப் பணம் வர சாத்தியமில்லையே.

இதையடுத்து கட்சியின் செயலாளர் மற்றும் பல பிரமுகர்களிற்கு பொருளாளர் தரப்பிலிருந்து இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

கட்சி செயலாளரும் கனடா குரூப் ஆள்தான். கடிதத்தைப் பார்த்து விட்டு அவரும் கப்சிப்பாக இருந்து விட்டார். இதையடுத்தே இந்த விவகாரம் நேற்று கட்சியின் மத்திய செயற்குழுவில் எழுப்பப்ட்டது.

கட்சியின் பொருளாளர் கனகசபாபதி இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி அப்படி கட்சிக்கு பணம் வழங்கினீர்களா? யாரிடம் வழங்கினீர்கள் எனக் கேட்டார்.

நான் பணம் வழங்கினேன் என சுயதம்பட்டம் அடித்தே தேர்தலில் வெற்றிப் பெறலாமென நினைத்தோ என்னவோ குகதாசன் சொன்னது இப்படி மாறுமென அவர் எதிர்பார்க்கவில்லை. விக்கித்துப் போனார்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாட சுமந்திரன் அவருக்கு ஆதரவாக களமிறங்கி அந்த பணத்தை நான்தான் வாங்கினேன் என்றார்.

அப்படியென்றால் அந்த பணம் எங்கே, அதற்கான கணக்கு என்ன? என கூட்டத்திலிருந்த பலரும் கேள்வியெழுப்பினர். கட்சியின் பொருளாளர் இருக்க தனிநபர்கள் ஊடாக இப்படியான பணக் கொடுக்கல் வாங்கலின் தேவை என்ன, இதன் நேர்மைத் தன்மையை எப்படி ஏற்றுக் அகொள்வது என கேள்வி எழுப்பினார்.

கனேடிய தமிழ் காங்கிரஸ் வழங்கிய பணத்தை தான் வழங்கியதாக குகதாசன் பாவனை பன்னுகிறார், பகிரங்க அறிக்கை விடுகின்றார், அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

முறையற்ற நிதி பரிமாற்றத்திற்கு மாவை சோனாதிராசாவின் மகன் கலையமுதன் கடும் எதிர்ப்பை தெரிவித்து அனைத்தும் முறைப்படி கணக்கு நடவடிக்கைக்கு ஊடாக நடைபெற வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரனுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அது நாங்கள் கனடாவில் திரட்டிய பணம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.

தர்க்கம் பலமடைய கலையமுதனை உட்காரும்படி மாவை சேனாதிராசா பலமுறை குறிப்பிட்டார். எனினும் கலையமுதன் உட்காராமல் நியாயத்தை சுட்டிக்காட்டியபடி இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாவை சேனாதிராசா நீ இப்பொழுது இருக்காவிட்டால் உன்னை வெளியில் அனுப்புவேன் என எச்சித்தார்.

அந்தப் பணத்தில் மாகாண சபை தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 6 இலட்சம் படி வழங்கியதாகவும் பங்காளிக் கட்சிகளிற்கும் வழங்கியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இறுதியில் ஏனையவர்கள் தலையிட்டு பழைய கதையை விடுவோம். இதை கிளறினால் கட்சிக்குத் தான் பாதிப்பு எனக் கூறி சமரசப்படுத்தி அந்தவிவகாரத்தை மூடி வைத்தனர்.

இதேபோல முல்லைத்தீவு இளைஞரணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் நீதி விவகாரம் தொடர்பில் பேசி கட்சியின் வேட்புமனுக் குழுவிலுள்ள குறைப்பாட்டை சுட்டிக்காட்டினார்.

அனைத்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் வேட்புமனு குழுவில் உள்வாங்கப்பட்டிருக்க மன்னார் மாவட்டத்தின் சார்ள்ஸ் நிர்மலநாதனை இணைக்காதமை தவறு, மன்னாரில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் அந்த பிரசேதத்தின் பிரதிநிதியும் குழுவில் இணைக்கப்பட வேண்டுமென அவர் கருத்து தெரிவித்த போது, நீ இரு. பேஸ்புக்கில் எல்லாம் கட்சியைப் பற்றி எழுதுகிறாய். உனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இருக்கிறது என மாவை குறிப்பிட, பீற்றர் இளஞ்செழியன் பொங்கியெழுந்தார்.

அவர் சரமாரியாக பேசியதில் மாவை திண்டாடி தனது 10 தம்பிகளையும் துணைக்கழைத்தும் பலன் கிட்டவில்லை.

இறுதியில் ஏனையவர்கள் தலையிட்டு பீற்றர் இளஞ்செழியனை சமரசப்படுத்தி உட்கார வைத்தனர்.

இதேவேளை வடமராட்சியை சேர்ந்த தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் ஒருவர் சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

கடந்த வாரம் திருகோணமலைக்கு தாம் பயணம் மேற்கொண்டதாகவும் இதன்போது 221 மில்லியன் ரூபா கனடாக் கிளை ஊடாக வழங்கப்பட்டதாக சில ஆவணங்களை பிரமுகர் ஒருவர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/politics/01/239473?ref=home-feed

On 2/26/2020 at 1:10 AM, போல் said:

அவர் 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்காகத் தானே சில கோடி ரூபாக்களை கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

இவர் தன்ர சொந்த கோடிக்கணக்கான காசை கொடுத்தாரோ அல்லது கனடால சேகரித்த கோடிக்கணக்கான காசை தன்ர சொந்த காசு என்டு கொடுத்தாரோ?

உண்மை தெரிஞ்சாகனும்!

On 2/26/2020 at 1:10 AM, போல் said:

கடந்த வாரம் திருகோணமலைக்கு தாம் பயணம் மேற்கொண்டதாகவும் இதன்போது 221 மில்லியன் ரூபா கனடாக் கிளை ஊடாக வழங்கப்பட்டதாக சில ஆவணங்களை பிரமுகர் ஒருவர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

குகதாசன் தனக்கு இந்தமுறை எப்பிடியாவது சீட் கிடைக்கோனும் என்டு ஒற்றைக் காலில நிக்கிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

சம் / சும்முக்கு...  சரியான... பங்கு வராவிட்டால்...
மாவை... போராட்டம்  செய்வாரா? 

On 2/29/2020 at 7:23 AM, தமிழ் சிறி said:

சம் / சும்முக்கு...  சரியான... பங்கு வராவிட்டால்...
மாவை... போராட்டம்  செய்வாரா? 

மாவை தன்ர மகனை பாராளுமன்றத்துக்கு அனுப்ப ரெடி ஆகிறார். அதால இப்ப வாய் திறக்க மாட்டார்.

பணமே எங்கே ?

  • உனக்கு நான் அனுப்பிய பணம் எங்கே?  
  • நிதி திரட்டியவருக்கு  கொடுத்த பணம் எங்கே ?
  • கட்சிக்கு  கொடுத்த பணம் எங்கே ?  

இவ்வாறு பணம் சம்பந்தப்பட்ட பல நியாயமான கேள்விகள் உள்ளன எமது சமூகத்தில். 

சில இடங்களில் பற்றுச்சீட்டை வாங்க முடியாது / கேட்க முடியாது. மற்றைய இடங்களில் நாம் கேட்க மறந்து விடுவோம். சில இடங்களில் பணத்தை வேண்டுபவர்கள்  பற்றுச்சீட்டை தராமல் விட்டுவிடுவார்கள். 

அவதானம், பணம் கொடுப்போரிலும் அதை பெறுவோரிலும் இருக்க வேண்டும். அப்பொழுதான் அந்த பணம் பயனாக மாறும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.