Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனங்கள் இரத்து

Featured Replies

பட்டதாரிகளுக்கான நிய மனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்து மாறு தேர்தல் ஆணைக் குழு உத்தரவிட்டுள் ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முடிவுறும் வரை அனைத்து அரச நியமனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுத்தப்படு வதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.
 
வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப் பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறி விப்பை விடுத்துள்ளது.
 
பெறப்பட்ட மொத்தம் 70 ஆயிரம் விண்ணப்பங்களில் 56,000 விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதிலும் 45,585 பேர் மட்டுமே நியமிக்க தகுதியுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.       
 
 

 

  • தொடங்கியவர்

 

பட்டதாரிகளின் நியமனங்களை நிறுத்தியதில் உடன்பாடில்லை

பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச சேவைக்குள் இணைக்கும் நியமனங்கள் மார்ச் முதலாம் இரண்டாம் திகதிகளில் வழங்கப் பட்ட நிலையில் அவற்றை தேர் தல்கள் ஆணைக்குழுவின் தலை வர் மகிந்த தேசப்பிரிய இடை நிறுத்தியமை தொடர்பில் ஜனா திபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உடன்பாடில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
 
பட்டதாரிகளின் பயிலுநர் நிய மனத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஏன் நிறுத்தியது என்று எமக்குப் புரியவில்லை என்று 
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
 
நியமனங்கள் ஏற்கெனவே செய் யப்பட்டுள்ளன, நாங்கள் பட்டதாரிகளை பயிலுநர்களாகவே அழைத்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, பொதுச் சேவையில் அனைத்துப் பயிற்சியும் இந்த சூழ்நிலையில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
 
எனவே இந்த விடயம் தொடர்பில் நாம் தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்களை நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
 

 

  • தொடங்கியவர்

 

பட்டதாரிகளை அரசு ஏமாற்றியுள்ளது ஆட்சியமைத்தால் 3 மாதத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம்

வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றி இருக்கின்றது. நியமனம் வழங்கு வதை தேர்தல்கள் ஆணையாளர் இடை நிறுத்துவார் என தெரிந்தே அரசாங்கம் பாராளுமன்றம் கலைப்பதற்கு 
இரண்டு தினங்களுக்கு முன்னர் நியமனக்கடிதங்களை அனுப்பியிருந்தது. அரசாங்கம் வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார்.
 
அத்துடன் பாராளுமன்ற தேர் தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங் கப்பட்டால் அனைத்து பட்டதாரி களையும் 3மாதத்துக்குள் அரசதுறையில் நிரந்தர நியமனம் வழங்கு வேன் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  
 
12 hours ago, ampanai said:

பட்டதாரிகளுக்கான நிய மனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்து மாறு தேர்தல் ஆணைக் குழு உத்தரவிட்டுள் ளது.

இது போர்க்குற்றவாளிகளின், தமிழினப்படுகொலைகாரர்களினது அரசினால் அரங்கேற்றப்படும் திட்டமிட்ட நாடகமாக கருதப்படுகிறது.

பட்டதாரிகள் வேலை கேட்டு பிச்சைக்காரர்களாக அலையும் வரையில் இவ்வாறான ஏமாற்றல்கள் தொடரவே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

பட்டதாரிகளின் பயிலுநர் நிய மனத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஏன் நிறுத்தியது என்று எமக்குப் புரியவில்லை என்று 

இதுகூட புரியாதவர் நாட்டின் ஜனாதிபதி ஆகும் அவலம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதுகூட புரியாதவர் நாட்டின் ஜனாதிபதி ஆகும் அவலம். 

இது நடிப்பு தேர்தலின் பின் வரும் அறுவடையை நினைத்து சதுரங்கத்தில் நகர்த்தப்பட்ட  குதிரைக்கு ஒப்பான நிலை  தேர்தல் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்தாலும் நன்மை இல்லையென்றாலும் நன்மை மறுப்பு தெரிவிக்காவிடின் கோத்தாவுக்கு இப்போதைய பொருளாதர நெருக்கடியில் தேவையற்ற சிலவுகளை கொண்டுவரும்.

பட்டதாரிகளும் உச்சு கொட்டிக்கொண்டு கோத்தாவின் பக்கமே நிப்பினம் தேர்தலின் பின் பார்த்து கொள்ளலாம் இப்பவே மீடியா எல்லாம் கோர்னோவை வென்ற கோத்தா என்று தமிழ்வின் கூட புகழ் பாடுகிறது .

  • தொடங்கியவர்

பாடசாலைகளில் பொதுவாகா நன்றாக படித்து A எடுத்தவன் வேலை எடுப்பது தனியார் நிறுவனங்களில்.  அங்கு நிறைவேற்று மற்றும் முகாமைத்துவ பொறுப்பில்  இருப்பது பாடசாலையில் C எடுத்தவன். 


ஆக, இரண்டாம் தரத்தில் படித்தவன், B,  பொதுவாக அரச வேலையில் இணைவான். 
அங்கே, அவனை நேர்முக பரீட்சைக்கு உள்ளாக்கும் பொறுப்பில் பாடசாலையில் சித்தி பெறாதவனும் ( இலஞ்சம் கொடுத்து வந்தவன் ) மற்றும் இராணுவ வீரன் இருப்பான் . 

  • கருத்துக்கள உறவுகள்

 இப்பவே மீடியா எல்லாம் கோர்னோவை வென்ற கோத்தா என்று தமிழ்வின் கூட புகழ் பாடுகிறது .

கோத்தாவாலேயே உலகம் சுற்றுது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கோத்தா தெரிந்துதான் நியமனங்களை வழங்கினார். ஆனால் தேர்தல் ஆணைக்குழு ஏன் நிறுத்தியது என்று தெரியவில்லை என்ற நடிப்பின் மூலம் நாட்டின் அரசியல் நிலை தெரியாதவர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பது மக்களின் பரிதாப நிலை. மக்கள் அந்த அளவுக்கு ஏமாற்றப்படுகிறார்களா? அல்லது எதையாவது 
 நம்பித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. எல்லாம் போலி. வெற்று வாக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.