Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு சுமந்திரனே காரணம் - மிதுலா விசனம்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்தான் பண்பில்லாது, ஜனநாயகமில்லாது செயற்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு இவரே காரணமாக இருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் உபதலைவி மிதுலா சிறிபத்மநாதன்தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது கட்சியில் இல்லாத ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் நாம் வினவியபோது அவர் தெரிவிக்கையில்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான உங்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்சி தலைவர் மற்றும் செயலாளருக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ள நிலையில் அதனைப் பரிசீலிக்கவில்லை என்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக மட்டுமன்றி கட்சியின் கொழும்புக் கிளையின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகின்றேன். அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான எனது விருப்பத்தைத் தெரிவித்து கட்சித் தலைவருடன் கதைத்து எனது விண்ணப்பத்தினை கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோருக்கு அனுப்பியதுடன் அதன் பிரதியைத் தமிழ்த் தோசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவிற்கும் ஊடகப் பேச்சாளர் சுமந்திரனுக்கும் அனுப்பிவைத்திருந்தேன்.

fish-Recovered.jpg

அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக அவர்களுடனும் ஏனைய ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தேன். அவ்வாறான நிலையில் கட்சியின் தெரிவுக்குழு கூடியபொழுது எனது பெயர் சிபாரிசில் இருப்பதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஊடாகவும், வெளிநாட்டில் உள்ள கிளைகளினூடாகவும் எனக்கு வாழ்த்துக்கள் வந்தவண்ணமிருந்தது.

நானும் உத்தியோகப்பூர்வமான முடிவு வரும்வரை காத்திருந்தேன். எனினும் என்னுடைய பெயருக்குப் பதிலாக வேறொரு பெண்ணின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.

இ.த.அ. கட்சியின் கொழும்புக் கிளையின் உபதலைவராக இருக்கின்ற உங்களுடைய பெயரைப் பரிசீலிக்காமல் கட்சியில் இல்லாத ஒருவரைக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது யார்?

இதற்கான முழுக்காரணமும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனையே சாரும். அவர்தான் கட்சியில் இல்லாத ஒருவரை அதுவும் கட்சித் தலைமைக்கு மட்டுமன்றி மக்களுக்கே தெரியாத ஒருவரை பின் கதவால் கொண்டுவந்துள்ளார்.

அவர்தான் கொண்டுவந்துள்ளார் என்று எவ்வாறு தெரியும்?

நான் கட்சித்தலைமையுடன் கலந்துரையாடினேன். அதுமட்டுமன்றி சுமந்திரனையும் அவரது யாழ் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் என்னுடன் மரியாதையற்ற வகையில் நடந்துகொண்டார்.

குறிப்பாக நான் கட்சியிடம் எனது விண்ணப்பத்தை அனுப்பியிருந்த போதும் எவ்வாறு வேறு ஒருவரை அதுவும் மக்களுக்குத் தெரியாத ஒருவரை, கட்சியுடன் தொடர்பில்லாத ஒருவரை பின் கதவால் எவ்வாறு நீங்கள் சிபாரிசு செய்ய முடியும் எனக் கேட்டதற்கு உமக்குத்தான் தெரியாது எனக்குத் தெரியும் எனக் கூறியதுடன் நாங்கள் எவரிடமும் விண்ணப்பம் கோரவில்லை, யாரைக் கேட்டு அதை அனுப்பினீர் என வினவியதுடன் கட்சியில் கேள்வி கேட்பவர்களை வைத்திருக்கக் கூடாது விலக்க வேண்டும் எனத் தெரிவித்து என்னை அலட்சியப்படுத்தி வேகமாக வாகனத்திலேறிச் சென்றுவிட்டார்.

உங்களது அடுத்த கட்டச் செயற்பாடு எவ்வாறு இருக்கப்போகின்றது? இது தொடர்பில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

நான் மக்களுக்காகவே சேவை செய்கின்றேன். இங்கு எனக்கு நடந்தது பற்றி கேள்வி கேட்பேன். இத்தகைய சம்பவம் நடைபெற்றதற்காகக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரது கட்சி இல்லை.

இது மக்களின் கட்சி. மூத்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அறிவாற்றல் உள்ளவர்களாலும், பண்பானவர்களாலும் உருவாக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியில் இருக்கின்ற ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தான் பண்பில்லாது,  ஜனநாயகமில்லாது செயற்படுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு இவரே காரணமாக இருக்கின்றார் என்பதை நான் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன். தமிழ் மக்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்லா தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ் மக்களையும் சுமந்திரனிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/77748

  • தொடங்கியவர்

’அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்த ஒரே எதிர்கட்சியே கூட்டமைப்பு’

யுத்தம் முடிந்த கடந்த 10 வருடங்களில், தமிழரசுக் கட்சியின் தலைமை, தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுத்தந்துள்ளதென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூட, இந்த தலைமையால் முடியவில்லை. பிரதான எதிர்க் கட்சியாக அமர்ந்துகொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததைத் தவிர, வேறேதுவும் செய்யவில்லை. வருடா வருடம், உலகிலேயே வரவு - செலவு திட்டத்துக்கு ஆளும் அரசாங்கத்துக்கும் ஆதரவு கொடுத்த ஒரே எதிர்க்கட்சியாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்துள்ளது. இதன் மூலம் பேசப்பட்ட பேரங்கள், தங்கள் சொந்த நலன்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன.

“விடுதலைப் புலிகளின் நண்பர்களாக நடித்து, விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்தை அழித்தமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்கள். தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், புலிகளை அழித்தமைக்காக அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவும் தெரிவித்து, பட்ட நன்றிக்கடனைத் தீர்த்துக்கொண்டார்கள்.

“அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் இதுவரையும் தங்கள் விருப்பத்தின் பெயரில் வேட்பாளர்களை நியமனம் செய்தார்கள். ஆனால், கடந்த 10 வருடங்களாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் இருப்பு பறிபோவதை வேடிக்கைப் பார்த்ததைத் தவிர, வெறேதுவும் செய்யவில்லை.

“ஆகவே தமிழ் மக்கள் இந்த தேர்தலிலாவது சிந்தித்து, புதிய அரசியல் அணுகுமுறையில் களமிறங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை, புதிய மாற்றத்துக்கான தெரிவாகத் தேர்ந்தெடுத்து வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்” என, ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அரசஙகததகக-ஆதரவ-கடதத-ஒர-எதரகடசய-கடடமபப/71-246832

  • தொடங்கியவர்

’தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிக்கிறார்’

-எஸ்.நிதர்ஷன்

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கருணா அம்மான் அழித்தது போல, தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அக்கட்சியின் மகளிர் அணியினர், சுமந்திரன் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

தமிழரசின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலைச் செல்வி ஸ்ரீபத்மநாதன் மற்றும் தமிழரசின் யாழ். மாவட்ட மகளிர் அணியின் செயலாளர் சி.விமலேஸ்வரி ஆகியோர், தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் வைத்து மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழரசில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் தொடர்பில் தமக்கு அநீதி இழைகப்பட்டிருப்பதால், அதற்கு நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரி வருகின்ற நிலையில், தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில், மேற்படி இருவரும் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மிதுலைச் செல்வி, “யாழ். மாவட்டத்தில், படித்த திறமையான உணர்வுள்ள பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைப் போடாமல், எதற்கு வேறு ஒருவரைக் கொண்டுவர வேண்டும்? அவரை இங்குள்ள பலருக்கும் தெரியாது. ஆகையால், அவரை ஏன் போட்டார்களென்று, பலரிடமும் நாங்கள் கேட்டோம்.

“அவ்வாறு சுமந்திரனிடம் கேட்டதற்கு நான் கேட்டதற்கு, என்னை அவமானப்படுத்தி அனுப்பியிருந்தார். அத்தோடு, மனித உரிமைகள் என்ற விடயத்தில் அம்பிகாவின் பங்கு தொடர்பில் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்  சம்பளத்துக்கே அங்கு வேலை செய்தவர். ஆகையினால், அவரைவிடத் திறமையான பலர் இங்குள்ளனர் என்று கூறியிருந்தேன்.

“ஆனாலும், அவரின் தேவை எங்களுக்கு ஏற்படுகின்ற போது நாங்கள் நாடாளுமன்றம் சென்றால் நீங்கள் குறிப்பிடுகின்ற மனித உரிமைகள் விடயத்துக்கு அவரைக் கொண்டு செல்லாம். அதேபோல, அவரின் திறமையைப் பயன்படுத்த பல வழிகளில் சந்தரப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக, எங்களுக்கு ஒரு சட்ட ரீதியான பிரச்சினை ஏற்படுகின்ற போது, நாங்கள் சட்டத்தரணிகளாகச் செல்வதில்லை. எங்களுக்குத் தேவையான சட்டத்தரணியையே நாங்கள் அழைத்துக்கொண்டு செல்வோம். அதேபோலத் தான் தேவை ஏற்படுகின்ற போது அவரின் திறமையை நாங்கள் பயன்படுத்தலாம்.

“வ்வாறு எமது மக்களின் தேவைகள், பிரச்சினைகளை அறிந்து, மக்களுடன் வந்து வேலை செய்யட்டும். அதற்குப் பின்னர் அவரைக் களமிறக்குவதா இல்லையா என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், எதுவுமே தெரியாமல் கொண்டுவந்து இறக்கியிருப்பது, எங்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது. அரசியலுக்குப் பெண்கள் வரவே பயப்படுகின்ற நிலையில், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துச் செயற்படுகின்ற போது, இப்படியான செயற்பாடுகள் வேதனையளிக்கின்றன.

“ஆகவே, நாம் மீண்டும் மீண்டும் கோருவது என்னவெனில், புதிதாக ஒருவரைக் கொண்டுவர வேண்டாம். இங்கு இருக்கின்ற திறமையான நல்லவர்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அதற்காக, எங்களுக்குத் தான் தாருங்கள் என்றில்லாமல், சகலருக்குமாகத் தான் நாங்கள் கதைக்கிறோம். மட்டக்களப்பிலும் தெரிவு நடந்தபோது, அதற்கு எதிராக ஒருமித்துப் பெண்கள் போராடிய போது, தமிழரசுக் கட்சி நீதி வழங்கியுள்ளது. அதே போன்றதொரு நீதியை தான் இங்கும் வழங்க வேண்டுமென்று கேட்கிறோம்.

“இதேவேளை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களான மாவை சேனாதிராசா, இரா.சம்பந்தன் ஆகியோர் நல்லவர்கள். அவர்களிடம் நல்ல பண்பு உள்ளது. ஆனால், சுமந்திரனின் அராஜகமாகவும் தான்தோன்றித்தனமாகவும்  முடிவெடுத்துச் செயற்படுகிறார். சுமந்திரனின் இத்தகைய செயற்பாடுகளை, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

“குறிப்பாக, தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று, தந்தை செல்வநாயகம் சொல்லியிருந்தார். ஆனால், சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் கருணா என்ற ஒருவரை உருவாக்கித்தான் அழிக்கப்பட்டது. அதேபோலத் தான், சுமந்திரனையும் உருவாக்கி விட்டிருக்கின்றனரா என்று தெரியவில்லை. இவ்வாறு நான் கூறுவதால், எனக்கு என்ன பிரச்சினை வருமென்று தெரியவில்லை.

“வேட்பாளர் தெரிவு தொடர்பில் நான் சுமந்திரனிடம் கேட்டபோது, கட்சியில் இருந்தே என்னைத் தூக்குவதாகச் சொன்னார். அதைத் தான் அவரால் செய்ய முடியும். ஆனால், முடிந்தால் அவர் அதனைச் செய்து பார்க்கட்டும் என்று நான் கூறுகிறேன்.

“இன்று, ஆளுமையுள்ள திறமையுள்ள, உணர்வுபூர்வமான பல பெண்கள் உள்ளனர். அவர்களை உள்வாங்க வேண்டும். நாம் சுயநலத்துக்காக அரசியல் நடத்தவில்லை. நியாயத்துக்காகப் போராடுகிறோம். கட்சியின் வேட்பாளர் தெரிவுக்காக, பல பெண்கள் விண்ணப்பம் போட்டிருக்கிறோம். அவர்களில் யாரைப் போட்டாலும் பரவாயில்லை. ஆனால், யாரையும் பின்கதவால் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது.

“இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதம் உருக்கமாக இருந்ததாக அவர் சொல்லியிருந்தார். நான் சொன்னதையும் செய்ததையும் தான் அதில் எழுதியிருந்தேன். அதை விட, செய்யாத வேறொன்றும் எழுதவில்லை. ஆகவே, இவ்வளவையும் நாம் செய்துவிட்டு, இந்த அநீதிகளைக் கண்டு நாம் விட்டுவிட்டுப் போக முடியாது.

“இங்கு, எனக்கு அல்லது மற்றவர்களுக்கு நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது. அவ்வாறு இங்கே நியாயம் கேட்காமல் நாடாளுமன்றம் சென்று அங்கே என்னத்தைச் செய்ய மடியும்? அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி, நீதிக்காகப் போராடுவோம். அதனையே நாம் இங்கும் செய்கிறோம்.

“ஆகவே, எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனடிப்படையில் எமது மூத்தத் தலைவர்கள் சரியான நியாயத்தைக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். எனவே, எமது தலைவர்கள் தான் இதற்குச் சரியான முடிவை எடுக்க வேண்டும். இதற்கான தீர்வைத் தரவேண்டும். அவ்வாறு தருவார்கள் என நம்புகிறேன். கட்சியிலிருக்கும் மாவை சேனாதிராசா, இரா. சம்பந்தன், துரைராஐசிங்கம் போன்றவர்கள் திறமையானவர்கள. அவர்கள், சரியான தீர்வைத் தருவார்கள்.

“ஆனால் இன்றைக்கு, உண்யாகவே சுமந்திரன்தான் தமிழரசை வழிநடத்துகிறார். அது எல்லோருக்கும் தெரிகிறது. சசிகலா வந்த நேரம்கூட பரவாயில்லை. கணவனை இழந்துவிட்டார். பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் வரலாம். ஆனால், இவை எதுவும் இல்லாமல், புதிதாக இன்னுமொருவர் வரமுடியாது. அதனைப் பின்கதவாலும் கொண்டுவர அனுமதிக்க முடியாது.

“நாம் கட்சியின் ஐனநாயக முறைப்படியே செயற்படுகிறொம். அதற்கமையவே வேட்பாளர்களுக்கான விண்ணப்பத்தை, தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பியிருந்தோம். அதனை விடுத்து, கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கும் அந்த விண்ணப்பப் படிவத்தைக் கொடுக்க வேண்டுமா, அவ்வாறு பேச்சாளருக்குக் கடிதம் கொடுக்க முடியுமா?

“ஆகவே நாம் மீண்டும் மீண்டும் கேட்பது, கட்சியின் ஐனநாயகத்தைப் பேணுங்கள். சரியான சட்டதிட்டங்களின்படி நடவுங்கள். ஆனால், வேட்பாளர் விடயத்தில் அப்படி நடக்கவில்லை. ஆகவே, எங்களுக்குச் சரியான நீதியைத் தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

image_ef4ee3542a.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழரசுக்-கட்சியை-சுமந்திரன்-அ-ழிக்கிறார்/71-246815

4 hours ago, ampanai said:

குறிப்பாக நான் கட்சியிடம் எனது விண்ணப்பத்தை அனுப்பியிருந்த போதும் எவ்வாறு வேறு ஒருவரை அதுவும் மக்களுக்குத் தெரியாத ஒருவரை, கட்சியுடன் தொடர்பில்லாத ஒருவரை பின் கதவால் எவ்வாறு நீங்கள் சிபாரிசு செய்ய முடியும் எனக் கேட்டதற்கு உமக்குத்தான் தெரியாது எனக்குத் தெரியும் எனக் கூறியதுடன் நாங்கள் எவரிடமும் விண்ணப்பம் கோரவில்லை, யாரைக் கேட்டு அதை அனுப்பினீர் என வினவியதுடன் கட்சியில் கேள்வி கேட்பவர்களை வைத்திருக்கக் கூடாது விலக்க வேண்டும் எனத் தெரிவித்து என்னை அலட்சியப்படுத்தி வேகமாக வாகனத்திலேறிச் சென்றுவிட்டார்.

சுமந்திரன் திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொள்பவர்களுக்கு கைக்கூலியாக இயங்கிவரும் ஒரு கபடதாரி என்கிற உண்மை இப்போது கட்சியின் உள்ளே இருந்தே வெளிவரத் தொடங்கியுள்ளது.

சம்மந்தன், சுமந்திரன் போன்ற போலி ஜனநாயகவாதிகள், பாசிசவாதிகளின் சுயரூபங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

17 hours ago, ampanai said:

ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ் மக்களையும் சுமந்திரனிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யோகர் சுவாமிகளது கூற்றை நல்லா பாடமாக்கி வைச்சிருக்கா.

தமிழரசுக் கட்சிக்குள்ள புகுந்த சுமந்திரன் என்ற கொரோனா வைரஸை அழிக்க ஒரு குட்டிச்சாத்தான் முயலுது.

மிதுலா உங்களுடைய ஆதங்கம் எங்களுக்கு புரியுது। சம், சும் எல்லாம் அரசியலுக்குள் வந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிவிடடார்கள்। இன்னும் உங்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை தரவில்லை என்னும் நியாயமான கரணம் எனக்கும் புரியுது , இணையதள போராளிகளுக்கும் புரியுது।

வருகிற தேர்தலில் நாங்கள் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டி அடுத்து வரும் மாகாண சபை தேர்தலில் உங்களுக்கு ஒரு இடத்தை நிச்சயம் பெற்று தருகிறோம்। இலங்கை  தமிழ் மக்கள் சார்பாக இந்த உறுதி மொழியை வழங்குகிறேன்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.