Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவிலும் கொரோனா பரிசோதனை முகாம்: இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா?- செல்வம் எம்.பி.

Featured Replies

 

Selvam-Adaikkalanathan-1.jpg

வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இந்த உயிர்க்கொல்லி வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமே.

எனினும் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் தடுப்பு முகாமை வடக்கு கிழக்கை மையப்படுத்தி அமைப்பதானது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

கடந்த வருடம் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளை உடனடியாக வவுனியாவிற்கே இலங்கை அரசாங்கம் அனுப்பிவைத்திருந்தது. இதற்கு வவுனியா மக்கள் எதிர்ப்பைக் காட்டியபோதிலும் அப்போதைய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.

இதேபோன்ற மிகவும் கொடிய நோய் தொடர்பான பரிசோதனைக்காக தற்போது வவுனியாவில் தடுப்பு முகாமை அமைப்பதாக கிடைக்கப்பெறும் செய்திகளைப் பார்க்கும்போது எமது மக்களை அடிமைகள் என நினைத்து அரசாங்கம் செயற்படுவதற்கு ஒப்பானதாக காணப்படுகின்றது.

இவ்வாறான முகாம்களை அம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்தாலி, தென்கொரியா, ஈரானில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்குத் திருப்பி அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கின்றது.

இந்நிலையில், வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத் தோன்றுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வவுனியாவிலும்-கொரோனா-பரி/

 

28 minutes ago, போல் said:

இவ்வாறான முகாம்களை அம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்தாலி, தென்கொரியா, ஈரானில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை அம்பாந்தோட்டை விமான நிலையத்திற்குத் திருப்பி அங்கேயே தடுப்பு முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கின்றது.

இந்நிலையில், வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத் தோன்றுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ நிலப்பரப்பில் இவ்வாறான தொற்று வைத்தியசாலைகளை நிறுவுவது என்பது இப்படியான காலங்களில் மட்டுமல்லாது, பொதுவாக நடந்தால் நன்று. 

அதாவது, தேசிய அளவில் சிறப்பு நீரழிவு, இருதய, கண் போன்ற எமது மக்களுக்கு தேவையான வைத்தியசாலைகளையும் அரசு அமைத்திருந்தால் தமிழரும் அவநம்பிக்கை கொள்ளமாட்டார்கள். 

மாறாக, அவை எல்லாம் சிங்கள ஊர்களில் மட்டுமே பெரும்பாலும் உள்ளன 
 

அடைக்கலம் ஐயா இப்படியே காலத்துக்கு காலம் அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்। இதுக்காகத்தான் மக்கள் உங்களை தெரிவு செய்து அந்த கதிரையில் உட்க்கார வைத்திருக்கிறார்கள்। அந்த கதிரைக்கு அடுபிடி படடால் மட்டும் போதாது, மக்களுக்கு உரிய சேவையும் செய்ய வேண்டும்। இப்படியான அறிக்கைகளை எங்களாலும் விட முடியும்। நீங்கள் எல்லாம் விரைவில் ஓய்வு பெற்று செல்வது நல்லது। 

3 hours ago, போல் said:

வவுனியா மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறைந்தது இப்பிடி குரல் கொடுத்ததை பாராட்டலாம்.
பலர் நிசப்தம். 

சுமந்திரனும் கிழக்கு பற்றி ஏதோ சொல்லிருக்கிறார்.
ஆனால் அந்தாள் வெளில ஒன்றைச் சொல்லும் உள்ளுக்குள்ளே இன்னொன்றைச் செய்யும்.
அப்பிடி பாத்தா கிழக்கிலே கொரோன தங்கல் முகாம் அமைக்க சுமந்திரனும் ஐடியா குடுத்திருக்கலாம்.

கொரோனா சிகிச்சை பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

pro1.jpg

வவுனியா- பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு, விமான பயணிகள் கொண்டுவரப்பட்டதனை கண்டித்து நெளுக்குளத்தில் கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா- தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெளுக்குளம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை 10மணியளவில், மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

‘அகற்று அகற்று கொரோனா முகாமை அகற்று’, ‘கொரோனா வைரஸ் வவுனியாவிற்கு வேண்டாம்’, ‘தமிழர் பிரதேசத்தில் கொரோனா முகாமை எதற்காக அமைத்தாய்’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், “வவுனியா- பம்பைமடு பிரதேசத்திற்கு இனங்காணப்படாத கொரோனோ என சந்தேகிக்கும் 265பேர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதாவது கொரானா குறித்து எங்களுடைய மக்கள், பீதியில் காணப்படுகின்ற நிலையில், இலங்கையிலேயே பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்றபோது வட.கிழக்கிற்கு மாத்திரம் இத்தகைய நோயாளர்களை கொண்டு வருவதனை ஏற்று கொள்ள முடியாது.

சஹரான் குண்டு தாக்குதலின்‌ போதும், வெளிநாட்டவர்கள் சிலர் வவுனியா பூந்தோட்டத்தில் குடியேற்றப்பட்டிருந்தார்கள். வட.கிழக்கில் இவ்வாறானவர்களை குடியமர்த்துவதென்பதை இனஅழிப்பாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் பல்வேறு இடங்கள் இருக்கின்றபோது அவர்களை அங்கே வைத்து அவர்களின் நோய்தொற்றை ஆராய முடியாதா? வவுனியா- பம்பைமடு இராணுவ முகாமில் குடியமர்த்துவதென்பது கண்டிக்கத்தக்க விடயம்.

பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பம்பைமடுவில் குப்பை கொட்டும் இடம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் குப்பை அங்கே கொட்டப்படும் போது, எங்களுடைய தொழிலாளிகள் அங்கே சென்று வரும்போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே உடனடியாக இந்த முகாமை அகற்ற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக காணப்படுகின்றது‌” என  தெரிவித்தார்.

pro-2.jpg

http://athavannews.com/கொரோனா-சிகிச்சை-பிரிவுக்/

நல்லது ।  எமது TNA உறுப்பினர்களுக்காக வக்காலத்து வாங்க இந்தியர்களும் இருக்கிறார்கள்।இருந்தாலும் சில இணையதள போராளிகள் எதிராகவும் எழுதுகிறார்கள்।

சொறிலங்கா சிங்கள அரசின் கைக்கூலிகள் சிலர் சுமந்திரனை காப்பாற்ற படாதபாடு படுகின்றனர்.

இந்தியக்காரனை காப்பாற்றுவதட்கு போராடுவதைவிட இலங்கையர்களை காப்பதட்கு நிச்சயம் போராடுவோம்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.