Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரரின் அபே ஜன பல கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு

Featured Replies

கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான அபே ஜன பல கட்சியால் குருநாகல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

image_1664f8032d.jpg

 

அத்துடன், குறித்த மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 3 சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அப-ஜன-பல-கடசயன-வடப-மன-நரகரபப/175-247254

  • கருத்துக்கள உறவுகள்

கலககொடஅத்தே ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

நாம் மக்கள் சக்தி கட்சி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையிலேயே அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளரின் உறுதிமொழி அறிக்கையில் ஏற்பட்ட தவறு காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலும் நாம் மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்சி ஞானசார தேரர் மற்றும் ரத்ன தேரர் ஆகியோரால் இணைத்து உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/ஞானசார-தேரரின்-வேட்புமன/

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளினதும் 3 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

DSC_0536-720x450.jpg

பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளினதும் 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்கள் 44இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 இனதும் சுயேட்சைக் குழுக்கள் 3 இனதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகருமாகிய கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, மௌபிம ஜனதா பக்ஸ, ஜனசத பெரமுன ஆகிய 3 அரசியல் கட்சிகளும் அரசரத்தினம் யுகேந்திரன், பி. மதிமேனன், மு.அ. நிசார்தீன் ஆகியோர் தலைமையிலான 3 சுயேச்சைக் குழுக்களுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதனடிப்படையில் 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களுமாக 38 குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளன.

மேலும் வேட்புமனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சத்தியப்பிரமானம் சமர்ப்பிக்கப்படாமை, வேட்பு மனுவில் எட்டு அபேட்சகர்களது பெயர் குறிப்பிடப்பட வேண்டிய இடத்தில், 7 அபேட்சகர்களது பெயர்கள் மாத்திரம் குறிப்பிட்டமை போன்ற காரணங்களுக்காகவே இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/மட்டக்களப்பு-மாவட்டத்த-7/

திருகோணமலையில் 13 அரசியல் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Trincomalee-Election-Department-Officer-Suthakaran.jpg

2020ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்கின்ற காலப்பகுதி இன்றுடன் நிறைவடைந்தது.

அந்த அடிப்படையில் இம்முறை திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுக்களாக 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுப் பத்திரங்கள் கிடைக்கப்பெற்றன.

அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 3 வேட்புமனுக்கள் மற்றும் 10 சுயேட்சைக் குழுக்களது வேட்புமனுக்கள் அடங்கலாக 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சிங்கள தீப ஜாதிக பெரமுன, தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளது வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தினுடைய 15ஆவது பிரிவுக்கு அமைய கையளிக்கப்படாத வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதித் தேர்தல் ஆணையாளரும் திருகோணமலை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

அதன்படி இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 27 அரசியல் குழுக்களது 189 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்றுள்ளதோடு அவர்களில் நாடாளுமன்றத்திற்கு நான்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளார்கள்.

2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 288,868 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

.http://athavannews.com/திருகோணமலையில்-13-அரசியல்/

  • தொடங்கியவர்
3 hours ago, ampanai said:

கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான அபே ஜன பல கட்சியால் குருநாகல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

இது மகிந்த அண்ட் கோவின் அரசியல் நாடகம். 

மகிந்தாவும் குருநாகலில் தான் போட்டியிடுகின்றார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.