Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`#Corona-வைத் தொடர்ந்து வைரலாகும் #Hantavirus!' - பின்னணி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஹான்டா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிடவே, அந்த ட்வீட் வைரலானது.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,962 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,138 ஆக இருக்கிறது. அதேநேரம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 1,02,844 பேர் மீண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இன்று (24.3.2020) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா
 
கொரோனா

இந்த நிலையில், சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஷான்டாங் மாகாணத்திலிருந்து பேருந்தில் திரும்பியபோது ஹான்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ட்விட்டரில் பதிவிட்டது. மேலும், அவருடன் பயணித்த 32 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது.

இந்த ட்வீட் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள், பலரும் பல்வேறு விதமாகக் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். `கொரோனாவைத் தொடர்ந்து ஹான்டா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்பன போன்ற கமென்டுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. சீனா மற்றும் வைரஸ் என்ற இரண்டு பதங்களால் பலர் அச்சத்துடன் கமென்டுவதைப் பார்க்க முடிகிறது.

குளோபல் டைம்ஸ் ட்வீட்
 
குளோபல் டைம்ஸ் ட்வீட்

இதுபோன்ற சூழல்களில் வதந்திகளைப் பிரித்தறிய வேண்டியது அவசியமானது. உண்மையில் ஹான்டா வைரஸ் என்பது புதிதாகத் தோன்றிய வைரஸ் இல்லை. ஏற்கெனவே இருக்கும் வைரஸ்தான். கொரோனா போன்று ஹான்டா வைரஸ் காற்றில் பரவக் கூடியது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேபோல், இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸல்ல என்றும் சொல்கிறார்கள். இது எலிகளைத் தாக்கும் ஒருவகையான வைரஸ் என்று கூறும் ஆய்வாளர்கள், எலிகளின் சிறுநீர் அல்லது சளி ஆகியவற்றைத் தொடும்போது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின்படி, ஹான்டா வைரஸ் என்பது எலிகளால் மட்டுமே பரவும். இது மனிதர்களுக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஹான்டா வைரஸ் பல்மோனரி சிண்ட்ரோம் (hantavirus pulmonary syndrome) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால், காய்ச்சல், தலைவலி, அடிவயிற்றில் பிரச்னைகள் உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகளாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஹான்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபட்சத்தில், அதிகப்படியான இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால், 38 சதவிகிதம் இறப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

https://www.vikatan.com/health/international/all-you-need-to-know-about-hanta-virus?artfrm=v2

 

 

ஹண்டா வைரஸ் ஒரு தெளிவு

கையில் போனும் பேஸ்புக்கும் இருப்பதற்காக உண்மைத்தன்மையை ஆராயாமல் எதனையும் சமூகத்திற்கு மத்தியில் கொண்டு சென்று பீதியைக் கிளப்பாதீர்கள்.

சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு ஹண்டா வைரஸினால் ஒருவர் இறந்துள்ளார். யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது ஒருவர் இறந்துள்ளார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

ஹண்டா வைரஸானது எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா உள்ளிட்ட மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது ஆறுதல் தரும் செய்தி.

இந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இந்த வைரஸ்கள் இன்னும் பரவவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹண்டா வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும். தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் பாதிப்பு என தொற்றுக்களை ஏற்படுத்தும். இது உயிரிழப்பு வரை செல்லக்கூடும்.

இந்த வைரஸ் புதிய வகையொன்றல்ல. இது ஏற்கனவே உலகுக்கு அறிமுகமான ஒன்று தான். மேலும் சாதாரண சூழ்நிலையில் இந்த வைரஸினால் அந்த நபர் இறந்திருந்தால் அது வெறும் மரணமாகவே சீனாவில் கணிக்கப்பட்டிருக்கும். கொரோனாவில் தாக்கம் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இது நிகழ்ந்ததாலேயே பெரியளவில் பேசப்படுகிறது.

எனவே கொரோனாவின் அளவுக்கு இதனை பயங்கரப்படுத்தி மக்களைக் குழப்பி விளையாடாதீர்கள். எல்லோரும் மனதைரியமும் திடாகத்திரமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களல்லர். எனினும் மிக அவதானமாக இருப்பது எமக்கும் எமது சமூகத்திற்கும் இந்த உலகுக்கும் நல்லது.

முகநூல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.