Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேரை கொரோனா காவுகொள்ளலாம்- ஆய்வில் அதிர்ச்சி

 

 

     by : Litharsan

Trump-And-America-Flag.jpg

அமெரிக்காவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு அங்கு, ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சியளிக்கும் ஆய்வு வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்புப் பிரிவைச் சேர்ந்த மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய நோய்களுக்கான ஆய்வு இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான அந்தோனி ஃபாவுசி, பத்து இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் ஒன்று முதல் இரண்டு இலட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறிய அவர் மரணம் என்பதை திரும்பப் பெறுவதாக கூறினார். பல இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தமது அச்சத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் மரண எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் அறிவித்தார்.

இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்ச நிலைக்குச் செல்லும் எனக் கூறிய அவர், ஜூன் முதலாம் திகதிக்கு பின்னர் விடிவு பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளில் அதிக எண்ணிக்கையிலானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ள நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒன்றரை இலட்சத்தை நெருங்குகிறது.

மேலும், நேற்று மட்டும் 264 பேர் மரணித்த நிலையில் மொத்த மரணம் 2 ஆயிரத்து 484 ஆகக் கூடியுள்ளதுடன் தீவிர சிகிச்சையில் மூவாயிரம் பேர் வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்காவில்-இரண்டு-இலட/

2 hours ago, nunavilan said:

இவ்வாறு கூறிய அவர் மரணம் என்பதை திரும்பப் பெறுவதாக கூறினார். பல இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தமது அச்சத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. 

இப்படி சொல்லிவிட்டு அதை விட குறைவானர்கள் பாதிக்கப்பட்டால், ஆட்சியில் உள்ளவர்கள் தம்மட்டம் அடிக்கலாம் தங்கள் திறமையை சொல்லி. 

அதிகம் பேர் பாதிக்கப்பட்டால் ஒருவாறு எதிர்த்தரப்பில் உள்ளவர்களை குறை கூறலாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் - 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை... அதிரும் அமெரிக்கா

ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் - 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை... அதிரும் அமெரிக்கா

நியூயார்க்:
 
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.
 
உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.
 

இந்த ஆள் தானாக  வாயை திறப்பது சிக்கலை தருவதாய் உள்ளது. 

மருத்துவ ஆலோசகர்களை உதாசீனம் செய்வதை வழமையான நாளாந்த விடயமாகி விட்டது. 

Image

  • கருத்துக்கள உறவுகள்

2 வாரங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அடுத்த மாதம் 30 வரை சமூக விலகல் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்,  மார்ச் 31: அமெரிக்காவில் இன்னும் 2 வாரங்களில் கொரோனா தொற்று பலி  எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க கூடும் என்பதால், சமூக விலகலை ஏப்ரல் 30ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ்  பாதிப்பினால், வளர்ந்த நாடுகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவும் மிகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 1.43 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2,509 பேர் பலியாகி  உள்ளனர். 4,700க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில்,  இங்கு பலியாவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கு அதிகமாக வாய்ப்புள்ளதாகவும்  இன்னும் 2 வாரங்களில் இறப்பு சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்றும்  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் ஏப்ரல் 30ம்  தேதி வரை சமூக விலகலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 16ம் தேதி சமூக விலகல் அறிவிக்கப்பட்டது. அப்போது 15 நாட்கள் இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே,  வெள்ளை மாளிகையில் காணொலி மூலம் செய்தியாளர்களுடன் உரையாடிய டிரம்ப்,  `‘அமெரிக்க பொது சுகாதாரத் துறையின் கொரோனா சிறப்பு குழுவின் ஆலோசகர்கள்  டாக்டர் டெபோரா பிக்ஸ், அந்தோனி பவுசியின் அறிவுரைப்படி வரும் ஏப்ரல் 30ம்  தேதி வரை சமூக விலகல் உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

ஜூன் 1ம் தேதி முதல்  அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கும்’’ என்று கூறினார். அதன்  பின்னர், ரோஸ் கார்டனில் கொரோனா குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில்,  ‘‘இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  அமெரிக்க மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இதன் மூலம் பலி எண்ணிக்கையை  ஓரளவாவது குறைக்க முடியும். இன்னும் இரண்டு வாரங்களில் உயிரிழப்பு  அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போதைய தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தால் இதுவரை 22 லட்சம் பேர் வரை பலியாகி  இருப்பார்கள்’’ என்று டிரம்ப் தெரிவித்தார்.

வெளியே வந்தால் 14,000-28,000 அபராதம்:
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 20 மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது. ஆனால் டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்தபோது, 12 மாகாணங்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி இருந்தன. பெரும்பாலான  நகரங்களில் ஊரடங்கை மக்கள் ஒழுங்காக கடைபிடித்தாலும் சில பகுதிகளில்  அத்துமீறல் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து நியூயார்க் உள்ளிட்ட முக்கிய  நகரங்களில் ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 14,000 முதல் 28,000 வரை அபராதம்  விதிக்கப்படுகிறது.

தவிக்கும் நியூயார்க்  :
நியூயார்க் நகரில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை  கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 237 பேர் உயிரிழந்ததால் பலியானோர்  எண்ணிக்கை 728ல் இருந்து 965 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில்  இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை எட்டியுள்ளது. தற்போது 8,000 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,000 பேர் தீவிர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,500 பேர் வீடு  திரும்பி உள்ளனர்.

நேற்று மட்டும் 846 பேர் குணமடைந்து வீட்டுக்கு  அனுப்பப்பட்டுள்ளனர். அவசர தேவை கருதி 1,000 படுக்கைகள் கொண்ட  மருத்துவமனையும் 1,200 மருத்துவப் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575615

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.