Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம் அதற்குரிய காரணங்களை டாக்டர் நாரேந்திர குமார் வர்மா விளக்குகிறார்.
பதிவு: ஏப்ரல் 06,  2020 11:59 AM
புதுடெல்லி
 
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  9,616  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 12,641 ஆக உள்ளது.  இத்தாலியில்  128,948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 15,887- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
 
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்றைய நிலவரப்படி 4247 ஆக உள்ளது. சீனாவை விட மக்கள் நெரிசல் மிக்க இந்தியாவில் கொரோனா பரவினால், 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள், 20 முதல் 25 லட்சம் பேர் வரை இறப்பார்கள் என்று சில வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர். அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்
 
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இவைகள் தான் இந்தியாவில் இருக்கும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்து என்று கூறுகிறார் டாக்டர் நாரேந்திர குமார் வர்மா.
 
எய்ம்ஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திய  நரேந்திர குமார் வர்மா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறியதாவது:-
 
இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.
 
பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன.இதை T-உயிரணுக்கள் என்று சொல்லலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன. வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரஸ்களநம் உடலில் நுழைந்தால்,T-செல்கள் தாக்கி அழித்துவிடும்.
 
இதன் காரணமே கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பது பின்னடைவு தான், வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.
 
இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.
 
இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
 
இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும்,பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
 
உடலுக்குன் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் அமைப்புதான் இம்முனி சிஸ்டம் (Immunue Syste) வைரஸ்களை அழித்து நம்மை பாதுகாக்கும் இம்முனி சிஸ்டத்தின் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டதுடன், உடனடியாக இம்முனி சிஸ்டத்தை உஷார் படுத்துவிடுகிறது.
 
அதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்புரிந்து, அந்நிய வைரஸ்களை அழிக்கும், இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியம்.பல வித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் இருக்கின்றன.அது போன்ற ஹெச்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் இம்முனி சிஸ்டத்தின்  குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கூறினார்.
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.

நாடு சுத்தமாக இல்லாமல் இருப்பது நல்லது என்று சொல்கின்றார்! சுகாதாரமாக இருக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிகம் பாதிப்படைந்தன என்றால் சீனாவில் எப்படிப் பரவியது?

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:
இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
 
இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.

குடிநீர், ரசம் குடிச்சால் உடம்புக்கு நல்லதுதான். ஆனால் இது novel Coronavirus! அதாவது மனிதர்கள் இந்த வைரஸை முன்னர் சந்திக்கவில்லை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி முன்னரே எவரிடம் இல்லை. 

கொரோனா வைரஸ் எப்படி நாடுகளிடையே பரவுகின்றது என்பதற்கான விடை மக்கள் எப்படி இடத்துக்கிடம் போகின்றார்கள் என்பதில்தான் உள்ளது. சீனாவில் தொடங்கி இப்போது மேற்குநாடுகளில் மையம்கொண்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் அடுத்ததாக எந்தக் கண்டத்தைத் தாக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் மருத்துவ வசதிகள் குறைந்த வளர்முக நாடுகளைத் தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கொஞ்சநாள் போக தெரியும் இங்கு உள்ள உணவு பழக்க வழக்கம் இங்கு இறைச்சி வகைகள் பாதி  வெந்ததுக்கு க்குத்தான் மரியாதை விரும்பி சாப்பிடுவார்கள் கார்வெஸ்ட்டர் போன்ற பப்புகள்  பிரேக் பாஸ்ட்டே அப்படித்தான் ரெத்தம் தெரியணும் இறைச்சியில் எங்களுக்கோ அருவருக்கும் .எதையெண்டாலும் போட்டு அரைமணிநேரம் அடுப்பில் விடுவது போதாக்குறைக்கு மிளகாய்த்தூள் அப்படி இப்படி உள்ளே போன வைரஸ் எல்லாமே மார்கயா பண்ணித்தான் உணவே ரெடியாகும் .

பார்க்கலாம் முழு உலகும் தராவியை  பார்த்துக்கொண்டு இருக்கு சில நாளில் தெரிந்துவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எல்லாம் கொஞ்சநாள் போக தெரியும் இங்கு உள்ள உணவு பழக்க வழக்கம் இங்கு இறைச்சி வகைகள் பாதி  வெந்ததுக்கு க்குத்தான் மரியாதை விரும்பி சாப்பிடுவார்கள் கார்வெஸ்ட்டர் போன்ற பப்புகள்  பிரேக் பாஸ்ட்டே அப்படித்தான் ரெத்தம் தெரியணும் இறைச்சியில் எங்களுக்கோ அருவருக்கும் .எதையெண்டாலும் போட்டு அரைமணிநேரம் அடுப்பில் விடுவது போதாக்குறைக்கு மிளகாய்த்தூள் அப்படி இப்படி உள்ளே போன வைரஸ் எல்லாமே மார்கயா பண்ணித்தான் உணவே ரெடியாகும் .

பார்க்கலாம் முழு உலகும் தராவியை  பார்த்துக்கொண்டு இருக்கு சில நாளில் தெரிந்துவிடும் .

உலக வல்லமைமிகு நாடுகளே செய்வதறியாது திகைத்து நிற்க இந்தியாவின் பிற்போக்குத்தனமான கருத்தியலூடாக நடைமுறைகளைப் (விளக்கேற்றுதல் போன்ற பித்தலாட்டத் திசைதிருப்பல்கள்) பலப்படுத்துவதாகவேயுள்ளது.  இறுதியாகப் பாவம் செய்தோரை இறைவன் தண்டித்துவிட்டார் என்று முடித்துவிடுவார்கள்.  இந்தியா முதலில் மூடநம்பிகைகளைக் களையாதிருக்கும்வரை இதுபோன்ற ஆய்வுகளும் பதிவாகும். 

ம் ம் நாங்களே கிருமிகள் எங்களிடமா வாலாட்ட வருகினம் எண்டு ஒரு கெத்து தான் ஆனால் நிறைய நன்மைகள் கோவில் ,ஹொலிடே ,பார்ட்டி ,கல்யாணவீடு ,ஏதுவும் இல்லை சாமிகளே ஊரடங்கு போட்டு ஓன்லைனில கும்பிட்டு அர்ச்சனையும் பண்ண சொல்லியாச்சு கிரெடிட் கார்ட் இல் பேமென்ட் யூரியுப் சமையல் இப்படி நிறைய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.