Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரிசி தொடர்பான வர்த்தமானி வெளியானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_8590d3bfa6.jpg

 

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 20(5) ஆம் பிரிவின் கீழான கட்டளை விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அரிசி வகைகளின் கிலோகிராம் ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா - ரூபாய் 90, கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 90, நாட்டரிசி - ரூபாய் 90, பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 85.

நேற்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தல், அதற்காக முன்னிற்றல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரச-தடரபன-வரததமன-வளயனத/175-248380

 

நாட்டின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு - கிழக்கை நம்பும் அரசாங்கம்

நாட்டின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு கிழக்கின் நெல் உற்பத்தியை மேலும் பலப்படுத்தி நாடளாவிய ரீதியில் அரிசியை நுகர்வுக்கு வழங்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் எடுத்துள்ளது. வடக்கு கிழக்கில் அதிக நெல் விளைச்சல் பகுதிகளை கண்காணிக்க இராணுவத்தை பயன்படுத்தவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து நாட்டில் நிலவும் உணவு பற்றாக்குறை காரணமாக தேசிய விவசாய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டும் உணவு உற்பத்தியில் நெல் உற்பத்தியின் அவசியம், மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பவற்றையும் மக்களின் தேவையையும் கருத்தில் கொண்டும் நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும்.
 

கொவிட் 19 தனிமைப்படுதல் செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படவேண்டிய சேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,  அதற்கமைய நாட்டில் அனைத்து நெல் ஆலைகளும் திறக்கப்பட்டு நாட்டின் தேசிய நெல் உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

சிறிய நெல் ஆலையாளர்கள் பிரதேச செயலக அதிகார பிரிவுக்குள்ளும், நடுத்தர நெல் ஆலையாளர்கள் மாவட்ட அதிகார பிரிவுக்குள்ளும், பாரிய அளவிலான நெல் ஆலையாலர்கள் நாடு பூராகவும் தமது நெல் உற்பத்திகளை பகிர்ந்தளிக்க முடியும் எனவும் அரசாங்கம் அவரச அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக நாட்டின் அரிசி தேவையினை பூர்த்தி செய்யும் விதத்தில் வடக்கு கிழக்கில் இருந்து அதிக நெல் உற்பத்தியை மேற்கொள்ளவும் வடக்கு கிழக்கில் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி உற்பத்தியை பெருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கி கிழக்கு விவசாய காணிகள் தொடர்பில் இராணுவம் வசமுள்ள  தரவுகளை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளார்.

குறிப்பாக நெல் வயல் நிலங்கள் குறித்தும் அவற்றில் முழுமையாக பயன்களை பெற்றுக்கொள்ள  துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நிதியத்தில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவித்து நாட்டில் சகல பகுதிகளிலும் விவசாயத்தை உடனடியாக முன்னெடுக்க விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் அவர் பணித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/79767

இதில் வடக்கில் பரவலாக அறுவடையாகும் மொட்டைக்கறுப்பன், ஆட்டக்காரி ஆகிய அரிசி வகைகளுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.