Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும் - சுரேந்திரன்

Featured Replies

தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி  தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா அச்சம் காரணமாக தொடரும் ஊரடங்கு சட்டத்தினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக எமது அரசியல் இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கம் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நமது செயலணி முழு வீச்சில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு ஓரிரு நாட்களிலேயே முதன் முதலாக எமது மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற பொருளாதார நெருக்கடிகளை எதிர்வுகூறி எமது மக்களுக்கான சரியான நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பிடமும் பொது நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் பயனாக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கொடையாளர்களும் மக்களுக்கு தமது உதவிகளை வழங்கிவருகின்றனர்.


IMG-8f5ae79e27e4b1a931ad63ca2c14b70b-V.j


வடக்கு கிழக்கை பொறுத்தவரை அரசாங்கத்தின் அறிவிப்புக்களும் சலுகைகளும் மந்தகதியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனால் அரசசார்பற்ற நிறுவனங்களும் , தனிநபர்களும் ஊடகவியலாளர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படும்போது விரைந்து உதவும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் இந்த கொரோனா தாக்கத்தினால் முடங்கியுள்ளமையினால் முன்னரைப்போல அவர்களால் உடனடியாக எமது மக்களுக்கு பெருமெடுப்பில் உதவ முடியவில்லை. இருந்தும் சிலர் தம்மால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்த நிவாரண உதவித்திட்டங்களை எமது மக்களுக்கு எத்தனை நாட்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்பதும் வழங்கப்படுகின்ற பொருட்கள் எமது மக்களுக்கு போதுமானதாக உள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஊரடங்குச்சட்டம் தொடரும் பட்சத்தில் எமது மக்கள் வெறுமனே உதவிகளை மட்டும் நம்பியிருக்காமல் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த முன்வரவேண்டும்.

ஏற்கனவே கொரோனா பீதி ஒருபுறம், ஊரடங்கு சட்டம் மறுபுறமென இருமுனை தாக்கத்திற்குள்ளாகியுள்ள எமது மக்கள் அடுத்துவரும் வாரங்களில் வறட்சிக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த மும்முனை தாக்கத்திலிருந்து விடுபட்டு எமது வாழ்வாதாரத்தையும் உயிராகாரத்தையும் உறுதிசெய்துகொள்வதற்காக நமது தேவைகளை பூர்த்திசெய்யத்தக்கவாறு வறட்சிக்காலத்தில் தூறல் பாசனம் உள்ளிட்ட குறைந்த நீர்ப்பாசனம் மூலமாக பயிரிடக்கூடய பயிர்களையும் தற்போதைய காலத்திற்கு தேவையான உற்பத்திகளையும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடைவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

விவசாயக் பொருளாதாரத்தை முதன்மையாக கொண்ட நாம் வெங்காயம், உருளைக்கிழங்கு , செத்தல் மிளகாய் உள்ளிட்ட பல உற்பத்திகளுக்கு இந்தியா , பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளையே நம்பியிருக்கின்ற நிலையில் கொரோனா பீதி தொடருமானால் இறக்குமதிகள் முழுமையாக பாதிப்படையும் சாத்தியங்களை கருத்திற்கொண்டு எமது உற்பத்திகளை பெருக்கி நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்வதற்கு மக்களை ஊக்கப்படுத்தி விவசாய அபிரித்தக்கு தேவையான நிபுணத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க நாம் தயாராக இருப்பதோடு உள்ளூர் உற்பத்திகளுக்கு தேவையான உதவிகளை காலத்தின் தேவையறிந்து செயற்படுத்தவும் உறுதிபூண்டுள்ளோம்.

https://www.virakesari.lk/article/79769

 

 

 

 

  • தொடங்கியவர்
4 minutes ago, ampanai said:

வடக்கு கிழக்கை பொறுத்தவரை அரசாங்கத்தின் அறிவிப்புக்களும் சலுகைகளும் மந்தகதியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனால் அரசசார்பற்ற நிறுவனங்களும் , தனிநபர்களும் ஊடகவியலாளர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படும்போது விரைந்து உதவும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் இந்த கொரோனா தாக்கத்தினால் முடங்கியுள்ளமையினால் முன்னரைப்போல அவர்களால் உடனடியாக எமது மக்களுக்கு பெருமெடுப்பில் உதவ முடியவில்லை. இருந்தும் சிலர் தம்மால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் தமிழீழ மக்கள் தங்களை மட்டுமே நம்பி, ஒரு "தனி நாடு" போன்று பயணிப்பதே வெற்றி தரும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

இந்த நிலையில் தமிழீழ மக்கள் தங்களை மட்டுமே நம்பி, ஒரு "தனி நாடு" போன்று பயணிப்பதே வெற்றி தரும். 

வழி நடத்த நல்ல தலைமை வேண்டும். தற்போதைய இளைஞர்கள் செகுசு வாழ்க்கையை அனுபவித்துவிட்டார்கள், வேலைக்கு செல்வதே குறைவு

  • தொடங்கியவர்
1 minute ago, உடையார் said:

வழி நடத்த நல்ல தலைமை வேண்டும். தற்போதைய இளைஞர்கள் செகுசு வாழ்க்கையை அனுபவித்துவிட்டார்கள், வேலைக்கு செல்வதே குறைவு

உண்மைதான். ஆனால், இந்த தலைமுறையும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும். 

பல  ஊர்களில் இளையவர்கள் சிலர் என்றாலும் சிறப்பாக, மனித நேயத்துடன் செயல்படுவதை பார்க்கமுடிகின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

வழி நடத்த நல்ல தலைமை வேண்டும். தற்போதைய இளைஞர்கள் செகுசு வாழ்க்கையை அனுபவித்துவிட்டார்கள், வேலைக்கு செல்வதே குறைவு

வேலைக்கு செல்லாவிட்டால் சொகுசு வாழ்க்கைக்கு பணம் எப்படி கிடைக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

வேலைக்கு செல்லாவிட்டால் சொகுசு வாழ்க்கைக்கு பணம் எப்படி கிடைக்கிறது?

எல்லாம் புலம்பொயர் உறுவுகள் தான், 😀

கடந்த வருடம் ஊரில் நின்றபோது, நிலைமைகளை பார்த்தேன் சில இளைஞரகளின் சாகசங்களை. எல்லோரையும் குறை சொல்லவில்லை, பொறுப்பானவர்கள் பலர் இருக்கின்றார்கள், அவர்களால் இதை சிறப்பாக செய்தால் நன்று

1 hour ago, ampanai said:

உண்மைதான். ஆனால், இந்த தலைமுறையும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும். 

பல  ஊர்களில் இளையவர்கள் சிலர் என்றாலும் சிறப்பாக, மனித நேயத்துடன் செயல்படுவதை பார்க்கமுடிகின்றது.  

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

வழி நடத்த நல்ல தலைமை வேண்டும். தற்போதைய இளைஞர்கள் செகுசு வாழ்க்கையை அனுபவித்துவிட்டார்கள், வேலைக்கு செல்வதே குறைவு

19 minutes ago, கற்பகதரு said:

வேலைக்கு செல்லாவிட்டால் சொகுசு வாழ்க்கைக்கு பணம் எப்படி கிடைக்கிறது?

14 minutes ago, உடையார் said:

எல்லாம் புலம்பொயர் உறுவுகள் தான், 😀

கடந்த வருடம் ஊரில் நின்றபோது, நிலைமைகளை பார்த்தேன் சில இளைஞரகளின் சாகசங்களை. எல்லோரையும் குறை சொல்லவில்லை, பொறுப்பானவர்கள் பலர் இருக்கின்றார்கள், அவர்களால் இதை சிறப்பாக செய்தால் நன்று

 

புலம்பெயர் உறவுகள் பணவசதி உள்ளதால் வேலைக்கு போகாமல் சொகுசாக வாழ முடிகிறது என்கிறீர்கள், இவர்கள் மற்ற பணவசதி குறைந்தவர்களின் தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்றுக்கொள்வார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைமை இருந்தால் சுய அறிவுள்ள பலர் ஏற்றுகொள்வார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.