Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரசினை பயன்படுத்தி அடக்குமுறை நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுக்கின்றன- ஐநா செயலாளர் நாயகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரசினை பயன்படுத்தி அடக்குமுறை நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுக்கின்றன- ஐநா செயலாளர் நாயகம்

 கொரோனா வைரசினை பயன்படுத்தி சில உலகநாடுகள் அடக்குமுறைகளில் ஈடுபடலாம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.

corona_humanrights1.jpg

கொரோனா வைரசிஸ் ,கொரோனா வைரசுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஒடுக்குமுறை நடைமுறைகளை சில நாடுகள் பின்பற்றக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

corona_human_rights_main.jpg

கொரோனா வைரஸ் நெருக்கடி மனித உரிமை நெருக்கடியாக மாறும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

un_sec_general2.jpg

உலகினை தற்போது ஆட்கொண்டுள்ள சுகாதார சமூக பொருளாதார நெருக்கடிகளிற்கான தீர்வுகளை முன்வைக்கும்போது மனித உரிமைகள் எவ்வாறு அவற்றிற்கு வழிகாட்டவேண்டும் என்பது குறித்த ஐநாவின் அறிக்கையை வெளியிட்டு வைத்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

corona_humanrights3.jpg

நாங்கள் சில சமூகங்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுவதை காண்கின்றோமஎன தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் ,வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள், பலவீனமான சமூகங்களை இலக்குவைப்பது,சுகாதார நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடமையான பாதுகாப்பு நடவடிக்கைகள்  போன்றவை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்து வரும் இனதேசியவாதம், ஜனரஞ்சகபோக்கு,ஏதேச்சதிகாரம்,சில சமூகங்களில் மனித உரிமைகள் பின்தள்ளப்படுதல் போன்றவற்றின் பின்னணியில் இந்த நெருக்கடி, தொற்றுநோயுடன் தொடர்பில்லா நோக்கங்களிற்காக அடக்குமுறை நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாக்குப்போக்கை வழங்குகின்றது என ஐநா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

corona_human_rights5.jpg
 

https://www.virakesari.lk/article/80561

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காட்சிகளை காணும் போது கொழும்பில் குண்டுவெடிப்புக் காலங்களில் மக்கள் நடாத்தப்பட்ட அடக்குமுறை அணுகுமுறை தான் ஞாபகத்துக்கு வந்தது.

வேடிக்கை என்னவென்றால்.. இவற்றை எல்லாம் காட்சிப்படுத்த அனுமதிக்கும் பேஸ்புக்.. அன்னை பூபதி நினைவு தின பதிவுகளை அகற்றி வருவது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

வேடிக்கை என்னவென்றால்.. இவற்றை எல்லாம் காட்சிப்படுத்த அனுமதிக்கும் பேஸ்புக்.. அன்னை பூபதி நினைவு தின பதிவுகளை அகற்றி வருவது தான். 

முகநூல் காரருக்கு ஒரு ரிப்போர்ட் ரெடிபண்ணி எங்கடையலை  சைன் பண்ண ரவுண்டுக்கு விட்டால் இப்ப வீடுகளில் சும்மா இருபவையால் முகநூல் இறங்கிவர வாய்ப்பு உண்டு ஆனாலும் கொரனோ  இந்த கிரகத்தில் அடங்கும் போது  புதிய சமூக ஊடகம் குறைந்தது இரண்டாவது கொடிகட்டி பறக்கும்  இப்போதைய கணக்குப்படி zoom வரும்போல் இருக்கு அதில் 1000குறை இருந்தாலும் இலகுவாக உபயோகித்தல் எனும் சூட்ச்சுமம் தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரவிறக்கம் செய்வதை தடுக்க முடியவில்லை எதிர் பார்ட்டிகளால் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.