Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக 200 பேரிடம் சோதனை

Featured Replies

ஜெர்மன் பயோடெக் நிறுவனமான பயோ என் டெக் (BioNTech) கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளது. 

BNT 162 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பயோ என் டெக்கும், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசரும் (Pfizer) இணைந்து உருவாக்கியுள்ளன.

வெக்டர் மற்றும் ஆர்என்ஏ அடிப்படையில் தலா 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 18க்கும் 55 வயதுக்கும் இடையிலான நல்ல திடகாத்திரமான 200 பேரிடம் முதலில் இவை சோதித்துப் பார்க்கப்படும்.

அதைத் தொடர்ந்து தொற்று வாய்ப்பு அதிகம் உள்ள நபர்களிடம் இரண்டாம் கட்டமாக சோதனை நடக்கும் என ஜெர்மன் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை கொண்டு அமெரிக்காவிலும் கிளினிகல் சோதனகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

https://www.polimernews.com/dnews/107601/ஜெர்மன்-நிறுவனம்கண்டுபிடித்துள்ள-கொரோனாதடுப்பூசி-முதல்கட்டமாக-200பேரிடம்-சோதனை

 

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

இனியும்... கொரோனாவின் கோரத் தாண்டவத்தை.... உலகம் தாங்காது. 
இந்தத் தடுப்பூசி வெற்றியளித்து.... மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும்.

  • தொடங்கியவர்
13 minutes ago, தமிழ் சிறி said:

இனியும்... கொரோனாவின் கோரத் தாண்டவத்தை.... உலகம் தாங்காது. 
இந்தத் தடுப்பூசி வெற்றியளித்து.... மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும்.

உண்மை. எந்த தடுப்பூசி வெற்றி பெற்றாலும், அது சாதாரண மக்களை அடைய சில காலம் எடுக்கும். 

அதிலும், ஈழ உறவுகளை அடைய வருடங்கள் எடுக்கும்.  

  • தொடங்கியவர்

“இது முடிவல்ல, வெறும் தொடக்கம்தான்” - ஏங்கலா மெர்க்கல்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான அடுத்த கட்டத்தில் நாட்டின் அனைத்து தரப்பினரும் “புத்திசாலித்தனமான, எச்சரிக்கையுடன்” கூடிய அணுகுமுறையை தொடர வேண்டுமென்று ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார்

இன்று (வியாழக்கிழமை) ஜெர்மனியின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இது கொரோனா வைரஸுக்கு எதிரான போரின் முடிவல்ல, வெறும் தொடக்கம்தான். இதை எதிர்த்து நாம் நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

"கட்டுப்பாடுகள் எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும், இது ஜனநாயகத்திற்கு ஒரு சவால், இது நமது ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துகிறது" என்று அவர் கூறினார். ஆனால், பத்திரிகை சுதந்திரம் போன்றவை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தது, சூழ்நிலையை சகித்துக்கொள்ள உதவியது என்று அவர் கூறினார்.

மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பிய கண்டம் சந்தித்து வரும் இந்த அசாதாரணமான சூழ்நிலையை சமாளிக்க, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

 

https://www.bbc.com/tamil/live/global-52391729

ஜெர்மனியில் 5000-ஐ கடந்த உயிரிழப்புகள்

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் வியாழக்கிழமை அன்று 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,094ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை அங்கு 1,48,046 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை திருப்பியும் கூடிக்கொண்டு போறமாதிரி கதைக்கினம்.
 வழமையாக நடக்கும் கொண்டாட்டங்கள்  அனைத்தும் இந்த வருசம்  நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளும் வழமை நிலைமைக்கு திரும்ப ஒரு வருடம் செல்லும் எனவும் சொல்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.