Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தை அமர்த்துவதே ஒரேவழி : வர்த்தமானி அறிவிப்பு குறித்து ஜனாதிபதி விளக்கம்

Featured Replies

(ஆர்.யசி)

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுத படைகளை கடமையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பதாக வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் மக்களை அனாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த மாற்று வழிமுறை இல்லையென ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக அதிக இடர்பாடுகளை அரசாங்கம் சந்தித்து வருகின்ற நிலையில் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த முடியாதிருக்க பிரதான காரணம் மக்களின் அனாவசிய செயற்பாடுகள் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொதுமக்களின் மத்தியில் அமைதியை பேணுவதற்காக வழமையாக படையினரை ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் மற்றொரு வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஆயுத படைகளை கடமையில் அமர்த்தவும் அவர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(40 ஆம் அத்தியாயம்) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (22.04.2020) நள்ளிரவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்றுகூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்த தெளிவுபடுத்தலை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவல் அதிகரிக்க மக்களின் அனாவசிய செயற்பாடுகளே காரணமாகும், வெளி மாவட்டங்களிலும் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு தளர்க்கப்பட்டமையானது மக்கள் அனாவசியமாக வெளியில் திருவதற்கோ, அனாவசிய செயற்பாடுகளில் ஈடுபடவோ அல்ல. ஆகவே இராணுவத்தை கொண்டு மக்களை ஓரளவு கட்டுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனாவசியமாக நடமாடுவதை தடுத்து மக்களை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறையை கையாள நேர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/80605

  • தொடங்கியவர்
49 minutes ago, ampanai said:

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுத படைகளை கடமையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பதாக வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் மக்களை அனாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த மாற்று வழிமுறை இல்லையென ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

தோற்றுப்போன சனநாயகமா ?  

இல்லை இந்த போர்வையில் இராணுவ ஆட்சிக்கு போடப்படும் அடித்தளமா ??  

சனநாயக வேடம் பூண்டு ஆட்சி செய்ய அவதிப்படும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் தேர்தல் தள்ளிப் போவதால் பொறுக்க முடியாது இராணுவ ஆட்சியை  மெதுவாக உருவாக்கி வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரோனா எல்லா அலுவல்களுக்கும் நல்லாய் கை குடுக்குது.😎

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிருக்கும் வேஷம்  அரிக்குது, நீண்ட நாளைக்கு தாங்காது. நாடகம்  குறிக்கப்பட்ட நேரத்துக்கு முடிவடையாமல்  நீண்டு கொண்டே போவதால்   வேஷத்தை கலைத்து கொள்ளையடிக்க வெளிக்கிட போறார் மன்னர். பராக் பராக்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.