Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பழைய பாராளுமன்றைக்கூட்ட முடியாது - அரசாங்கம்.

Featured Replies

(ஆர்.யசி)

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

அதற்கமைய எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பழைய பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்கிறது அரசாங்கம்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வேளையில், அரசியல் அமைப்பு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றம் மூலமாக ஒதுக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை நிதி ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் அரசாங்கம் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எதனையும் முன்னெடுக்கவுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதில் தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகையில்,

இப்போது எழுந்துள்ள இந்த கேள்வியானது எவரேனும் ஒரு சிலரது தேவைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முட்டாள் தனமான பிரசாரமாகவே நாம் கருதுகின்றோம். நாட்டின் நிதி குறித்த முழுமையான அதிகாரமும் அரசியல் அமைப்பின் 148 ஆம் சரத்துக்கு அமைய பாராளுமன்றம் வசமே உள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி தவிர்ந்து எவராலும் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. ஜனாதிபதியினால் கூட்டப்படும் பாராளுமன்றமும் அவரசகால சட்டமொன்றை ஆராயவோ அல்லது நிறைவேற்றவோ மட்டுமே முடியும். வேறு எந்த காரணம் கொண்டும், விவாதம் நடத்தவோ அல்லது வேறு எதற்காகவும் பாராளுமன்றத்தை கூட்டவோ சட்டத்தில் இடம் இல்லை.

அதேபோல் ஜனாதிபதிக்கு அனாவசியமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமும் இல்லை என்பதை அமைச்சரவையில் அறிவித்துள்ளார். நாட்டு மக்கள் மத்தியிலும் அவர் அதனை எடுத்துரைத்துள்ளார். பெரும்பான்மை மக்களின் வாக்குகளில் ஜனநாயக முறைப்படி தெரிவாகியுள்ள ஜனாதிபதிக்கு பொதுமக்கள் முழுமையான அதிகாரத்தை கொடுத்துள்ளனர். ஆகவே அரசியல் அமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் நான்கரை ஆண்டுகள் கடந்தவுடன் மிக நேர்த்தியாக சட்ட முறைமைகளை கையாண்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். அவ்வாறு இருக்கையில் எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது. அதேபோல் அரசியல் அமைப்பின் பிரகாரமே பாராளுமன்றம் கூடிய பின்னர் மூன்று மாதகாலத்திற்கு நிதி அதிகாரங்களை கையாள முழுமையான அதிகாரம் உள்ளது. ஜனாதிபதியும் சட்டவல்லுனர்கள் அனைவரிடமும் ஆலோசனை பெற்று அவர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட்டுள்ளார்.

அதேபோல் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது. அரசியல் அமைப்பின் பிரகாரம் அவர்களே தீர்மானம் எடுக்க வேண்டும். அதில் அரசாங்கம் தலையிடாது. நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்கள் தீர்மானம் எடுப்பார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/80614

  • கருத்துக்கள உறவுகள்

கக்கீமு சற்று முன்னர்தான் கத்திப்போட்டுப்போனது....அதற்கிடையில் பெரியடி விழுந்திட்டுது...முசுலீமுகள் உருப்படேலாது..

 

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது.

யாரப்பு அந்த சண்டியர்?  சர்வாதிகாரிக்கே ஒரு சண்டியரா? ஒருவேளை நீதிமன்றத்தை மாறி  இப்பிடி சொல்லுறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யாரப்பு அந்த சண்டியர்?  சர்வாதிகாரிக்கே ஒரு சண்டியரா? ஒருவேளை நீதிமன்றத்தை மாறி  இப்பிடி சொல்லுறாரோ?

ஆமாம்.... அது, நீதிமன்றுக்கு... விடுத்த மறைமுக மிரட்டல். 

என்னப்பா வீட்டையே ஒரு நாளைக்கு இரண்டு தரம் கூட்ட வேண்டி இருக்கு. பாராளுமன்றத்தை கூட்ட கூடாது என்று அடம் பிடிக்கிறாங்களப்பா. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.