Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மிருசுவிலில் ஒருவர் வெட்டி கொலை; இருவர் படுகாயம்

Featured Replies

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்ததால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142429

  • தொடங்கியவர்

யாழில் கொடூர வாள் வெட்டு; கை துண்டாகும் நிலையில் ஒருவர்

தீவகம் ஊர்காவற்றுறை பிரதேசத்துக்கு உட்பட்ட சின்னமடுவப் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் கை துண்டாகும் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 10 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இதன்போது 31 வயதுடைய ஒருவரது கை துண்டாகும் வகையில் வாள் வெட்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் அந்த பகுதியில் ஏற்பட்ட சிறு தகராறே நேற்றைய தினம் குழு மோதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குழு மோதலின்போது வாள் வெட்டுக்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த கொடூர வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142434?ref=imp-news

  • தொடங்கியவர்

மிருசுவில் கொலைச் சம்பவம் – மூன்று பேர் கைது

In இலங்கை     May 4, 2020 9:00 am GMT     0 Comments     1286     by : Jeyachandran Vithushan

யாழ். தென்மராட்சி மிருசுவில் மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் மைத்துனர்கள் மூவர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் என்ற 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் சகோதரர்கள் மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் கொடிகாமம் பொலிஸாரின் பாதுகாப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு உயிரிழந்தவரின் துணைவியும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

http://athavannews.com/மிருசுவில்-கொலைச்-சம்பவம/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தச் சனங்கள் திருந்த வாய்ப்பே இல்லை.😡

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்... எல்லோர் வீட்டிலும்,  வாள் ஆயத்தமான நிலையில் உள்ளது போல கிடக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.