Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் இருந்து வந்தவர்களால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என கூறி குறித்த இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கை மாணவர்கள் உட்பட 208 பேர் பிரித்தானியாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் பலர் பணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சென்றுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டல்களுக்கு நாள் ஒன்றுக்கு 7500 ரூபாய் இவர்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/security/01/245193?ref=imp-news

1 hour ago, பெருமாள் said:

தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என கூறி குறித்த இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்களின் பெற்றோர்கள் இராணுவத்தில், அரசியலில்  உள்ளவர்கள் என உத்தேசிக்கலாம். 

இல்லாவிடில் குழப்பமும் செய்ய மாட்டார்கள், செய்வதர்களை கைது செய்தும் இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்தலுக்கு 7500 ரூபாய்..! வழங்க தயார் என்றால் நாட்டுக்குள் வரலாம்.

Saventhi-Cor-Jaffna.jpg

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோர் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படவிருக்கும் நிலையில், தனிமைப் படுத்தலுக்கான 7500 ரூபாய் பணத்தை அவர்கள் செலுத்த விரும்பினால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இராணுவ முகாம்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் தனிமைப்படுத்தப்படுபவர்கள் இதற்காக ஹோட்டல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்கள் மட்டுமே நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவிலிருந்து இன்று 260 பேர் நாடு திரும்ப உள்ளதாகவும், இந்த நிலையில் இவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு நாட்டில் பல பாகங்களிலும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வழக்கமாக ஒரு நாளைக்கு 20,000 – 35,000 வரை ஹோட்டல் அறை ஒன்று வாடகைக்கு விடப்படும் எனவும், ஆனால் தனிமைப்படுத்தல் காரணத்திற்காக ஒரு அறைக்கு 7,500 ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் மட்டுமே நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/17590

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வழக்கமாக ஒரு நாளைக்கு 20,000 – 35,000 வரை ஹோட்டல் அறை ஒன்று வாடகைக்கு விடப்படும் எனவும், ஆனால் தனிமைப்படுத்தல் காரணத்திற்காக ஒரு அறைக்கு 7,500 ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாப்பாடு தண்ணியெல்லாம்  7500க்கை அடங்குமோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

5 star hotel ஆ..... அல்லது 7 star ஆ....

On 4/5/2020 at 14:22, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தனிமைப்படுத்தலுக்கு 7500 ரூபாய்..! வழங்க தயார் என்றால் நாட்டுக்குள் வரலாம்.

Saventhi-Cor-Jaffna.jpg

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோர் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படவிருக்கும் நிலையில், தனிமைப் படுத்தலுக்கான 7500 ரூபாய் பணத்தை அவர்கள் செலுத்த விரும்பினால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இராணுவ முகாம்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் தனிமைப்படுத்தப்படுபவர்கள் இதற்காக ஹோட்டல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்கள் மட்டுமே நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவிலிருந்து இன்று 260 பேர் நாடு திரும்ப உள்ளதாகவும், இந்த நிலையில் இவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு நாட்டில் பல பாகங்களிலும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வழக்கமாக ஒரு நாளைக்கு 20,000 – 35,000 வரை ஹோட்டல் அறை ஒன்று வாடகைக்கு விடப்படும் எனவும், ஆனால் தனிமைப்படுத்தல் காரணத்திற்காக ஒரு அறைக்கு 7,500 ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் மட்டுமே நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/17590

 

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.