Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் கடந்த மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

statistics-canada-720x450.jpg

கனடாவில் கடந்த மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளனர்!

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள முடக்கநிலையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் இழந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை இழப்புகளுக்கும் மேலாக, ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 1,993,800 என உயர்வடைந்துள்ளது.

இதனால் வேலையின்மை வீதம் 13.0 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இது மார்ச் மாதத்தில் 7.8 சதவீதமாக இருந்தது.

நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிடிவின் கூற்றுப்படி, சராசரியாக பொருளாதார வல்லுநர்கள் நான்கு மில்லியன் வேலைகள் இழப்பு ஏற்படும் என்றும் வேலையின்மை வீதம் 18 சதவீதம் ஆகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கனடாவில்-கடந்த-மாதத்தில்/

மருத்துவ துறை, தொழில்நுட்ப துறைகளே ஓரளவிற்ற்கு வேலையின்மையில் இருந்து தப்பித்து உள்ளன. 

வேலை இழந்தவர்கள் தங்கள் அறிவுசார் துறைகளை வளர்ப்பதே சிறப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியாவசிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; கனடா பிரதமரின் கொரோனா பரிசு!

கனட அரசு அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 3 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம் மாதத்துக்கு 1,800 டொலராக இருக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1,35,000 ரூபாய் ஆகும். இந்த திட்டம் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நேற்று(10) நாட்டு மக்களிடம் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “நீங்கள் உங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவியுள்ளீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் குறைந்த பட்ச ஊதியத்தையே பெறுகிறீர்கள். எனவே நீங்கள்தான் சம்பள உயர்வுக்கு தகுதியானவர்கள். இந்த தொற்று நோய்களின் மூலம் நாம் காணும் ஒரு விடயம் என்னவென்றால், நமது சமூகத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்படக் கூடியவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் நம் சமூகத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள்” என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/அத்தியாவசிய-ஊழியர்கள/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.