Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன் இரவில் துாங்காமல் விழித்திருக்கும் விசித்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன் இரவில் துாங்காமல் விழித்திருக்கும் விசித்திரம்

sm02tp9.jpg

மேட்டூர் : பிறக்கும் போதே வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன், நான்கு ஆண்டுகளாக இரவில் துõங்காமல் விழித்திருப்பதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்த சிறுவன் பிறவியிலேயே ஊமை என்பதும் வேதனைக்குரியது.மேட்டூர் அருகே, காவேரிகிராஸ், மெயின்ரோட்டில் வசிப்பவர் வெங்கடேசன். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் வேலை செய்கிறார். வெங்கடேசனுக்கும், அவரது அக்கா மகள் ரேவதிக்கும் ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு நான்கு ஆண்டுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்ததால் தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், குழந்தையின் கருவிழி மட்டும் வெண்மை கலந்த கருப்பு நிறத்தில் இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், குழந்தைக்கு பிறவியிலேயே ஊமையாகவும், காது கேட்காமலும் இருந்தது. குழந்தைக்கு வாசு என்று பெயரிட்டனர்.வாசுவுக்கு தற்போது நான்கு வயதாகிறது. பிறந்ததில் இருந்தே வாசு இரவில் துõங்குவது கிடையாது. அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையும், பின்னர் பகலில் 9 மணி முதல் 10 மணி வரை துõங்குகிறான். அதன்பிறகு சிறுவன் வாசு துõங்குவதில்லை.

இது தவிர இவர்களுக்கு ப்ரியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு காது கேட்டாலும், பேச்சு வரவில்லை. ப்ரியாவிற்கும் கண்ணின் கருவிழிகள் பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ளது.

வெண்மை நிற கருவிழிகளுடன் பிறந்த குழந்தைகள் குறித்து தாத்தா கோபால் கூறியதாவது:வாசு தினமும் 4 மணிநேரம் துõங்கி விட்டு இரவிலும் விழித்திருப்பதால் கண் மருத்துவரிடம் காட்டினோம். மருத்துவர்களோ "சிறுவனின் கண்ணல் எந்த குறையும் இல்லை. பார்வை நன்றாக உள்ளது' என கூறி விட்டனர்.வாசு இரவு விழித்திருப்பது மட்டுமின்றி, அடுப்பு எரியும்போது நெருப்பை பார்த்து கொண்டே இருக்கிறான். ஸ்டவ்வில் உள்ள நெருப்பை அணைத்து விட்டால் அழத் துவங்கி விடுவான். எனவே, இரவு முழுவதும் நான் பேரன் வாசுவோடு விழித்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது.நான் பகலில் துõங்கி ஓய்வு எடுத்து விட்டு இரவில் பேரனுடன் விழித்திருக்கிறேன். சிறுவனின் துõக்க பிரச்னையை தீர்க்க மருத்துவரிடம் காட்டும் அளவுக்கு என்னிடம் பண வசதி கிடையாது. எனவே, அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் என பேரனின் சிகிச்சைக்கு உதவி செய்தால் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

விசித்திரம் தான்..

எல்லாம் புதிதாக இருக்கிறது.. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுக்குள் திருமணம் செய்தால் இப்படி அதிசயங்கள் நிகழ்வது புதிது இல்லையே...

என்ன கொடுமை இது..இரு குழந்தைகளுக்கும் என்றால் எவ்ளோ கஷ்டம்.

அதுவும் ஒரு வறுமையான குடும்பத்தில்... :huh::(

Mmh.... விசித்திரமாத்தான் இருக்கு....! -_-

கிட்டிய உறவுக்குள் திருமணம்செய்யும் குடும்பங்களுக்குள் இப்படியான பல குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியம் நிறைய உண்டு

அதெப்படி இந்தியாவில் மட்டும் இப்படி விசித்திரங்களாக நடக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன் ஜெயா டீவியில் செய்திகள் காட்டினார்கள்.

1. ஒரு குழந்தையின் கண்களினூடாக மல்லிகைப் பூக்கள் கொட்டுகின்றனவாம். இந்தப் பிள்ளையை சனம் கூடி நின்று பார்ப்பதை காட்டுகின்றார்கள்.. பிள்ளை வயிற்றினுள் மல்லிகைப் பந்தல் இருக்கின்றதோ தெரியவில்லை.

2. இறந்த குழந்தை ஒன்று இறந்த பின் பெற்றோரைப் பார்த்து சிரிக்கின்றதாம்.. செத்தவீட்டில் சனங்கள் நின்று வேடிக்கை பார்க்கின்றன. இதை டீவியில் காட்டுகின்றார்கள்...

இந்தியாவை புண்ணிய பூமி என்று கூறுவது இதனாலோ?

இப்படி பல...

  • கருத்துக்கள உறவுகள்

வமையாகக் குழந்தைகள் 16மணித்தியாலங்களுக்கு மேல் தூங்குவார்கள்.

இக் குழந்தை அதிசயம் தான்.

நேபாளத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டில் குர்க்கா ( அது தான் இனப்பெயரா தெரியவில்லை) ஆக இருப்பவர்கள் இரவில் தூங்குவதில்லை. அது ஒட்டுமொத்த இனத்தவருக்கும் உள்ள குணம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஏன் நெருப்பை வெறித்து பார்க்கிறான் சிறுவன்? ஏன் அது நின்றதும் அழுகிறான்? எதற்காக இப்படி வருகிறது? ஆனால் கண்களில் பிரச்சனை இல்லை என்றால் என்ன பிரச்சனை... :blink:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சொல்வது போல நெருங்கிய உறவுத் திருமணத்தினால் இப்படி இரு குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நோய் தரும் ஜீன்கள் எம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் இயற்கையில் அவை பின்னடைவாக வெளிக்காட்டப் படாமல் வைக்கப் பட்டிருக்கின்றன. நெருங்கிய ஜோடிகள் சேரும் போது இவை வெளிப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. சில நோய்களுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகம் (50% வீதம் வரை!). மேலும் சிறுவனிடம் பல குறைபாடுகள் இருப்பது போல் தெரிகிறது. தூக்கப் பிரச்சினைக்கு நரம்பியல் ரீதியான குறைபாடு ஏதாவது காரணமாக இருக்க வாய்ப்புண்டு. மூளையிலுள்ள "றெடிகுலர்" வலைப்பின்னலில் (reticular formation) குறைபாடுகள் வரும் போது தான் தூக்க விழிப்புச் சக்கரம் பாதிக்கப் படுகிறது. அதிசயம் என்னவென்றால் இலவச மருத்துவ சேவையும் சிறந்த நரம்பியல் நிபுணர்களும் உள்ள இந்தியாவில் இச்சிறுவனை இன்னும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தவில்லை.

உறவுக்குள் திருமணம் செய்தால் இப்படி அதிசயங்கள் நிகழ்வது புதிது இல்லையே...

தம்பி உண்மையாவோ எனக்கு தெரியாம போச்சு

:P :lol:

தம்பி உண்மையாவோ எனக்கு தெரியாம போச்சு

:P :lol:

ஏற்கனவெ தெரிந்திருந்தால் உறவுக்குள் திருமணம் செய்யாமல் தப்பியிருப்பீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுக்குள் திருமணம் செய்தால் இப்படி அதிசயங்கள் நிகழ்வது புதிது இல்லையே...

நான் சொல்லவர நீங்கள் முந்திவிட்டீர்கள்.

அதெப்படி இந்தியாவில் மட்டும் இப்படி விசித்திரங்களாக நடக்கிறது. கொஞ்ச நாளைக்கு முன் ஜெயா டீவியில் செய்திகள் காட்டினார்கள்.

1. ஒரு குழந்தையின் கண்களினூடாக மல்லிகைப் பூக்கள் கொட்டுகின்றனவாம். இந்தப் பிள்ளையை சனம் கூடி நின்று பார்ப்பதை காட்டுகின்றார்கள்.. பிள்ளை வயிற்றினுள் மல்லிகைப் பந்தல் இருக்கின்றதோ தெரியவில்லை.

2. இறந்த குழந்தை ஒன்று இறந்த பின் பெற்றோரைப் பார்த்து சிரிக்கின்றதாம்.. செத்தவீட்டில் சனங்கள் நின்று வேடிக்கை பார்க்கின்றன. இதை டீவியில் காட்டுகின்றார்கள்...

இந்தியாவை புண்ணிய பூமி என்று கூறுவது இதனாலோ?

இப்படி பல...

இது இந்தியாவில் மட்டும் இல்லை.. உலகம் முழுவதும் நடக்கிற விடயங்கள்தான்.. நாங்கள்தான் இந்தியா செய்திகளை விட வேறு உலக செய்திகளை தவிர்த்துக்கொள்கிறோம்..

ஏற்கனவெ தெரிந்திருந்தால் உறவுக்குள் திருமணம் செய்யாமல் தப்பியிருப்பீர்களா?

உறவுக்குள் திருமணம் செய்வதால் மட்டும்தான் இவ்வாறு நடக்கிறது என்று அல்ல.. அதுவும் ஒரு காரணமாக இருப்பதற்கு கூடிய வாய்ப்பு இருக்கிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.