Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது நேபாள அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது நேபாள அரசு!

இந்தியா-நேபாளம்-720x450.jpg

எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்தியா பதில் தரும் என நம்புவதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியதுரா,  காலாபாணி,  லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பகுதிகள்  உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என இந்தியா அறிவித்துள்ளது.

இதனிடையே இந்த மூன்று பகுதிகளையும் சேர்ந்து நாட்டின் புதிய வரைபடத்தை தயார் செய்து நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் புதிய வரைபடம் தொடர்பான அரசமைப்பு சட்டத்திருத்த மூலம்  நேபாள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அந்நாட்டின் எதிர்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

நேபாளத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/எல்லைப்-பிரச்சினை-குறித-3/

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம் ஒரு முடிவோடதான் இறங்கியிருக்கு, சிலருக்கு பெட்டிகள் தேவையா இருக்கு.

இந்தியாவிற்கு சீனா, நேபாளம், பாகிஸ்தான், பொருளாதாரமென பல பிரச்சனைகள் குடையுது😁

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்த கொலை.. நேபாள எல்லையில் வாழும் மக்களுக்கு சாட்டிலைட் போன்களை தந்த மத்திய அரசு..

Four-Indo-Nepal-transit-points-in-Bihar-

பாட்னா: நேபாளம் எல்லையில் வசிக்கும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா எல்லையில் பீகார் அருகே இந்தியர் ஒருவர் நேற்று நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் அருகே சீதமார்கி பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது.

இதில் இந்தியர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். அங்கிருக்கும் இந்தியர்கள் மற்றும் நேபாளம் போலீசாருக்கு இடையே சண்டை வந்ததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். தங்கள் வயலுக்கு இந்தியர்கள் செல்லும் போது போலீசார் அவர்களை சுட்டு தள்ளி இருக்கிறார்கள்.

உதவி

இந்த நிலையில் நேபாளம் எல்லையில் வசிக்கும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக பீகார் மற்றும் உத்தரகாண்ட் எல்லையில் இருக்கும் மக்களுக்கு இந்த போன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய பேரிடர் மீட்பு படை மூலம் போன்கள் வழங்கப்பட்டு உள்ளது. அங்கு தொலைபேசி இணைப்புகள் எதுவும் இல்லை. பெரிய அளவில் நெட்வொர்க் இல்லை.

நெட்வொர்க் இல்லை

அங்கு போன் வைத்திருக்கும் மக்கள் கூட நேபாளத்தை சேர்ந்த செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களின், சிம்களைதான் பயன்படுத்துகிறார்கள். இது எல்லை பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும். அங்கு பிஎஸ்என்எல் கூட சிக்னல் எடுப்பது இல்லை. இதனால் அங்கிருக்கும் 49 கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு சாட்டிலைட் போன் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 34 தாசில்தார்களுக்கு அங்கு போன்கள் வழங்கப்பட்டு உள்ளது .

விரைவில் மற்றவர்கள்

விரைவில் அங்கு மக்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் போன்கள் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதன் மூலம் செய்யப்படும் போன் கால் கட்டணம் மிக அதிகம் ஆகும் . ஒரு லோக்கல் மற்றும் தேசிய காலுக்கு நிமிடத்திற்கு 12 ரூபாய் இதில் செலவாகும். மெசேஜ் செய்யவும் 12 ரூபாய் செலவாகும். சர்வதேச காலுக்கு 260 ரூபாய் நிமிடத்திற்கு செலவாகும்.

ஏன் இப்படி

எல்லையில் இருக்கும் மக்கள் அவசரத்திற்கு போலீஸ் உதவி அல்லது பாதுகாப்பு உதவியை கேட்க முடிவதில்லை. எல்லையில் நேபாளம் அத்து மீறினால் அதை பற்றி மக்கள் தகவல் கொடுக்க முடிவதில்லை. சீனாவின் வீரர்கள் அத்துமீறி ரோந்து பணிகளை செய்தால் கூட அதை பற்றி அங்கிருக்கும் மக்கள் தகவல் கொடுக்க முடியவில்லை. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் சிக்கல்கள், குறைப்பாடுகள் ஏற்படுகிறது. நேபாளம் சிம்மை பயன்படுத்துவதும் பாதுகாப்பு இல்லை.

நேற்று மரணம்

இந்த நிலையில்தான் நேற்று இந்தியர் ஒருவர் எல்லையில் நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். இது போன்ற அசம்பாவிதங்கள் போன்கள் இருந்தால் தவிர்க்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் இதை தடுக்கும் வகையில் தற்போது நேபாளம் எல்லையில் வசிக்கும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பின் பாதுகாப்பு காரணங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

https://tamil.oneindia.com/news/patna/india-gives-satelite-phones-to-its-citizens-those-who-live-in-nepal-border-388153.html

டிஸ்கி :

memees.php?w=650&img=dmFkaXZlbHUvYm95LXN

சின்ன பெடியன் திட்டுறான் வெக்காம இல்ல..☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

Nepal-parliament-clears-new-map-shuts-possibility-of-talks-on-boundary-row.jpg

இந்திய பகுதிகளையும் சேர்த்து புதிய வரைபடத்தை அறிவித்தது நேபாளம்- இந்தியா கடும் கண்டனம்

சர்ச்சைக்குரிய இந்திய-நேபாள எல்லைப் பகுதிகளையும் நேபாள அரசு தனது புதிய வரைபடத்தில் இணைத்துள்ளமைக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

குறித்த வரைபட மாற்றம் நேபாள அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறிவந்த நேபாளம், அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

அந்தப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி (KP Sharma Oli) தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த வரைபு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், வாக்கெடுப்பு நடக்கும் முன்பே நாடாளுமன்றத்தில் இருந்து பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியதால் விவாதம் நடைபெறவில்லை. இந்தச் சட்டத்திருத்த வரைபுக்கு எதிர்க் கட்சி மற்றும் ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, திருத்தப்பட்ட வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த வரைபு மீது விவாதம் நடத்துவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் விவாதம் தொடங்கி காரசாரமாக நடைபெற்றது.

275 உறுப்பினர்கள் கொண்ட சபையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் சட்ட வரைபு நிறைவேறும் என்ற நிலையில் வரைபுக்கு ஆதரவாக 258 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து சட்டவரைபு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

இதையடுத்து மேல் சபையான தேசிய சபைக்கு சட்ட வரைபு அனுப்பி வைக்கப்படும். அங்கும் இதேபோன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இவ்வாறு தேசிய சபையிலும் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு சட்டமாக்கப்படும்.

இவ்வாறிருக்க, நோபளம் அரசின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வரைபடம் மாற்றம் பற்றி இந்தியா தனது நிலையை அதிகாரபூர்வமாக நேபாளத்திற்கு அறிவிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nepal-parliament-clears-new-map-shuts-possibility-of-talks-on-boundary-row-4.jpg

Nepal-parliament-clears-new-map-shuts-possibility-of-talks-on-boundary-row-3.jpg

http://athavannews.com/இந்திய-பகுதிகளையும்-சேர்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.