Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் சகல தொல்பொருள் பிரதேசங்களையும் முகாமைத்துவம் செய்யும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தொல்பொருள் பிரதேசங்களையும் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு ஜனாதிபதியின் விசேட செயலணியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தேசிய மற்றும் சர்வதேச  ரீதியில் எழும் அழுத்தங்களை நிராகரித்து செயலணியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு செயலணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்பொருள் பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை அளவீடு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

gota.jpg

 

கிழக்கு மாகணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பிலான முதலாவது கூட்டம் இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. செயலணியில் நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதேபோல் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி செனரத் பண்டார திசாநாயக, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையாளர் நாயகம், மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் சில சிவில் அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதே செயலணி குறித்த அழுத்தங்கள் மற்றும்  செயலணி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தரப்பினர் மற்றும் சிவில் அமைப்புகள் மட்டுமல்லாது சர்வதேச சிவில் அமைப்புகள் முதற்கொண்டு எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 எனினும் கிழக்கின் தொளிபொருள் சார் சகல விவகாரங்களையும் ஜனாதிபதி செயலணி  அனைத்தையும் கையாள வேண்டும் இதில் எந்தவித எதிர்ப்புக் கருத்துக்களையும் செவி மடுக்காத விதத்தில் செயற்படுமாறு செயலணியில் அங்கம் வகிக்கும் தேரர்கள் எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான விகாராதிபதி பனாமுரே திலகவன்ச தேரர்  ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்தனர்.

அதேபோல் செயலணியில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் எவரும் உள்வாங்கப்படாதமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட போதிலும் அதற்கு எந்த தரப்பில் இருந்தும் மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் கருத்துக்களை முன்வைத்த பாதுகாப்பு செயலாளரும் செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கமல் குணரத்ன சில காரணிகளை கூறியுள்ளார். 

இதில் யுத்தத்திற்கு பின்னரான அரசியல் மற்றும் சமூக சூழலில் தொல்பொருள்  பிரதேசங்களை பாதுகாப்பதில் பல்வேறுபட்ட முரண்பாடுகள், குழப்பங்கள், மாற்றுக்கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே இனியும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் தொல்பொருள் பிரதேசங்களை முழுமையாக பாதுகாத்து அந்தந்த இன, மத அடையாளங்களுடன் கொண்டுசெல்ல சகல ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இதில் இலங்கையர் என்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு இவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதுவே செயலணியின் வேலைத்திட்டமாக இருக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/83740

கிழக்கில் வாழும் இஸ்லாமியர்களும் தமிழ் மக்களும் இணைந்து நின்று முறியடிக்க வேண்டிய ஒன்று இது. இல்லாவிடின் முழுக் கிழக்கும் விரைவில் பெளத்தமயமாகி விடும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் கிழக்கை முழுவதும் சிங்கள மயமாக்கும் திட்டம் முழு மூச்சாகச்  செயற்படத் தொடங்கும்.  அதே சமயம் கோட்டாபய வடக்கிற்கென சில எலும்புத்துண்டைத் தூக்கியெறிவார். நமதி புத்திசீவிகளும் அரசியல் இராச தந்திரிகளும் (😏) அதனை வைத்து புடுங்குப் படுவினம். திரும்பவும் அடுத்த தேர்தல் வந்துவிடும். 

 ""உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே"" நிலைதான் எமக்கும்.  

 எல்லாம் இழந்தபின்னர் எமக்கொரு கோபம் வரும் பாருங்கள் 😡😡😡😡

............😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் :

karaithivu-uc-3.jpeg

காரைதீவு பிரதேச சபையின் 28வது மாதாந்த அமர்வு சபையின்   தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்   வியாழக்கிழமை(11)  காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.

சென்ற மாத கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து சபையின் ஆரம்ப நிகழ்வாக கடந்த கால விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இதன் போது  காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச சபையின் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஒத்துழைப்புக்களை வழங்குவதில்லை.சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அவர்களுக்கும் எழுத்து மூலமாக அனுப்பியிருக்கின்றோம்.

எமது அறிக்கைக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை காலம் இன்னும் தாழ்த்தப்படுமானால் மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி மக்களுடன் இணைந்து போராட நேரிடும் என தவிசாளர் குறிப்பிட்டார்.

மேலும்   கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி நடவடிக்கைகளுக்காக தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள்அடையாளப்படுத்த ப்பட்டுள்ளமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட பூர்வீக தமிழர் நிலங்கள் பறிபோகும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தான் அதிக இடங்கள் தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தமிழ் பேசும் சமூகத்தை திட்டமிட்ட முறையில் நசுக்க முனைகிறது என உறுப்பினர்  ஏ.ஆர்.மொகமட் பஸ்மீர் பிரேரணையை கொண்டு வந்து உரையாற்றினார்.

 இலங்கை கடந்து வந்த எல்லா ஜனாதிபதிகளும் இனி வரும் காலங்களில் வரும் ஜனாதிபதியும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை தொடர்ந்தும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அவை திசைமாறிச் சென்றுவிட்டன. ஆனால் ஒரே ஒரு போராட்ட இயக்கம் 30 வருட கால தமிழ் மக்களின் இருப்புக்காக போராடி இருந்து வந்தனர்.

அவர்கள் இன்று இல்லை என்ற நிலையில் பல தமிழர் தாயகப் பிரதேசங்களில் அடக்குமுறைகள் தோற்றம் பெற்றுள்ளன என உறுப்பினர் இராசையா மோகன் தெரிவித்த நிலையில் இறுதியாக கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணி நடவடிக்கைகளுக்காக தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களாக தமிழர் தாயக பிரதேசங்கள்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை இன மத வேறுபாடு இன்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்திருந்தார்.

இதில் கிழக்கில் உள்ள தொல்பொருட்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பதற்கு இனமத மற்றும் ஏனைய பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன.

அவை பல காரணங்களால் ஆபத்திற்குள்ளாகியுள்ளன எனவே அந்த தொல்பொருட்கள் தேசிய பாரம்பரியத்துடன் தொடர்புடையவை என்பதால்இ இனமத வேறுபாடுகள் இன்றி அரசாங்கம் அவற்றை பாதுகாக்க விரும்புகின்றது
இந்த தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்காகவும் மீள உருவாக்குவதற்காகவும் செயலணி அனைத்து சமூகத்தினருடனும் இணைந்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது.இந்நிலையில்  இதற்கு தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2020/144756/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

கிழக்கில் வாழும் இஸ்லாமியர்களும் தமிழ் மக்களும் இணைந்து நின்று முறியடிக்க வேண்டிய ஒன்று இது. இல்லாவிடின் முழுக் கிழக்கும் விரைவில் பெளத்தமயமாகி விடும்.

கிழக்கில் சிங்களவருடனாவது  வாழலாம் ...முஸ்லிம்களுடன் வாழவே முடியாது 

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.