Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் யார் பக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் யார் பக்கம்?

image_65a971dcf6.jpg
 

விடுதலை பற்றியும் போராட்டம் பற்றியும் பேசிவந்த தமிழ்த் தலைவர்கள் யாவரும், இப்போது அமெரிக்காவில் இடம்பெற்ற கொலையை அடுத்து, இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து, வாய் திறக்கவில்லை. பல சமயங்களில், மௌனம் சொல்கின்ற செய்தி வலுவானது. 

அமெரிக்கா என்பது, ஆட்சியாளர்களும் அரச எதிர்ப்பாளர்களும் இலகுவாக ஒன்றிணையும் புள்ளி ஆகும். அந்தப் புள்ளியில் இன்னமும், எல்லோரும் ஒன்றிணைகிறார்கள். அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. யோகர் சுவாமிகளின் வழியில், 'எந்தப் பொல்லாப்பும் இல்லை' என்று இவர்கள், அமைதி காக்கிறார்கள்.   

தமிழ் மக்கள், மேற்குலகை நம்பினால் தீர்வுகிடைக்கும் என்று, இன்றும் சொல்லப்படுகிறதுளூ அன்றும் சொல்லப்பட்டது. ஆனால், என்ன கிடைத்தது என்பதைத்தான், யாரும் சொல்லக் காணோம். 

இன்றைய நிலையில், தமிழர்களின் கண்மூடித்தனமானதும் பிற்போக்குத்தனமானதுமான மேற்குலக விசுவாசத்தின் வரலாற்றை நினைவுகூருவது தவிர்க்க இயலாதது. 

பிரித்தானியக் கொலனியாட்சியைத் தொடர்ந்தும், தமிழர்களின் பிரித்தானிய எசமானிய விசுவாசம் குறையவில்லை. அதற்கு, இலங்கையில் பிரித்தானிய ஆட்சி போன பின்பே, தமிழருக்கு எதிரான பாரபட்சம் வலுத்தது என்பதால், பிரித்தானியரை நம்புவதற்குரிய சூழ்நிலை இருந்தது என்று ஒரு வாதம் வைக்கப்படுவதுண்டு. 

ஆனாலும், 1957ஆம் ஆண்டு திருகோணமலை, கட்டுநாயக்கா விமானத் தளங்களை, பிரித்தானியர் இலங்கையரிடம் மீளக் கையளிப்பதைத் தமிழ்த் தலைவர்கள் எதிர்த்த போதும், சிங்கள மொழிச் சட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மகாராணியாருக்கு அடித்த தந்தி முதலாக, கோடீஸ்வரன் வழக்கு மேன்முறையீடு வரை, எதிலுமே பிரித்தானிய அரசு, தமிழருக்கு ஆதரவாக, எதையுமே செய்யவில்லை. ஆனால், தமிழரின் விசுவாசம் குறையவில்லை. 

அமெரிக்கா-பிரித்தானிய-டச்சு எண்ணெய்க் கம்பனிகள் மூன்றும், 1960இல் தேசிய மயமாக்கப்பட்டபோது, அது தர்மமல்ல என்று, தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் சொன்னார். அந்த நன்றிக்காக, அமெரிக்கா ஏதாவது செய்ததா, இல்லை. 

ஆனாலும், அத்தனை தமிழ் நாடாளுமன்றத் தலைமைகளும் இன்றுவரை அமெரிக்காவுக்கோ, ஏனைய மேற்குலக நாடுகளுக்கு எதிராகவோ வாய்திறந்ததில்லை.

அமெரிக்காவும் மேற்குலகும் யாருடைய நண்பர்கள் என்பது, 1977க்குப் பிறகு தெளிவாகி இருக்கவேண்டும். ஆனால், 1983 இனப் படுகொலையைக் கண்டித்து, மேலை நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டதும், பெருமளவில் புலம்பெயர்ந்தவர்கள் மலிவான கூலி உழைப்பாளர்களாகவும் அகதிகளாகவும் எந்தவித அந்தஸ்துமற்றுப் புகலிடம் பெறவும் வழி ஏற்பட்டதும், மீண்டும் மேற்குலகு பற்றிய நம்பிக்கைகள் துளிர்விட்டன. 

எனினும், கடந்த அரை நூற்றாண்டுக்கால ஏமாற்றங்களின் பின்னரும், இன்னமும் சர்வதேச சமூகம், ஐ.நா. குறுக்கீடு என்ற நமது கனவுகள், அடிப்படையின்றி விரிகின்றன. அதன் ஒருபகுதியே, இன்று கறுப்பின மக்களின் போராட்டங்கள் பற்றிய மௌனம். 

இதற்கிடையில், 'அமெரிக்கக் கறுப்பர்கள் ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்தார்களா, நாமேன் குரல் கொடுக்க வேண்டும்' என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு மற்றவர்கள் குரல் கொடுப்பது இருக்கட்டும்; ஈழத்தமிழர்கள் இதுவரை எந்த அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்கள், யாருடைய பக்கம் நின்றிருக்கிறார்கள்?

ஈழத்தமிழர்களை இஸ்ரேலியர்களுடன் ஒப்பிடும் அபத்தமான போக்கு, இன்றும் இருக்கிறது. ஒடுக்கப்படுகின்ற பாலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்காத நாம,; ஒடுக்கும் இஸ்ரேலைப் போல, இருக்க விரும்புகிறோம். ஒடுக்கப்படும் காஷ்மீரியர்களுக்காகக் குரல்கொடுக்காமல், ஒடுக்குமுறையாளனான இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம். ஆனால், எல்லோரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். 

இன்று கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஒலிக்கும் குரல், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான குரல்ளூ ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான குரல். 

இன்று உழைக்கும் மக்களின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் குரலாக, போராடுவோரின் குரலாக உலகெங்கும் குரல்கள் ஒலிக்கின்றன. அந்தக் குரல்களோடு, தமிழ் மக்களின் குரல்கள் இணைந்து ஒலிக்க வேண்டும். தமிழ் மக்கள் முடிவு செய்தாக வேண்டும். நாங்கள் யார் பக்கம்? அமெரிக்க அரசின் பக்கமா, அல்லது போராடும் அமெரிக்க மக்களின் பக்கமா? 

விடுதலையென்பது, ஆன்மாவை விற்று, உடலை வாங்குவதல்ல. 
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-மக்கள்-யார்-பக்கம்/91-251743

  • கருத்துக்கள உறவுகள்

நீதியுணர்வு கருதி பலஸ்தீனர்கள், ஆபிரிக்க அமெரிக்கர்கள், றொகிங்கியா முஸ்லிம்கள், குர்திஷ் மக்கள், காஷ்மீரி முஸ்லிம்கள் , இவர்கள் பக்கம் தான் தமிழர்கள் நிற்க வேண்டும்! ஆனால், தமிழர்களுக்கு என்ன leverage இருக்கிறது இப்படி ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உதவ? எனவே தான் கிடைக்கிற ஒரு சில நன்மைகளையாவது பெற்றுக் கொள்வோம் என்று கள்ள மௌனம் என நினைக்கிறேன். 

பலஸ்தீனர்கள் நல்ல உதாரணம். மகிந்த ராஜபக்ஷவின் நீண்ட கால பலஸ்தீன ஆதரவை எப்போதும் ஐ.நா அமைப்புகளில் சிறிலங்காவுக்கான ஆதரவாக அவர்கள் திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

மேற்கு  நாடுகளில் அரசியலில் ஈடுபடும் ஈழத்தமிழர்களில் பலர் இங்குள்ள சோசலிச அல்லது தாராளுமயம் (Liberalism) பேசும்  கட்சிகளில் தான் உள்ளனர். அக்கட்சிகளின் பல்லின பல்கலாச்சார வாழ்வுமுறை மதிக்கும்  அவர்களது கொள்கைகளை ஏற்று பயணிக்கும் இந்த ஈழத்தமிழர்கள்   தனிப்பட்ட ரீதியில்  conservative mindset  கொண்டவர்களாகவும. அதை கடைப்பிடிபவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

நடு நிலை என்று ஒன்று இல்லை.

""ஆன்மாவை விற்று உடலை வாங்குதல் அல்ல விடுதலை ""கேட்பதற்கு இனிமையாகத்தான் உள்ளது.

ஆனால் ஆன்மா மட்டும் இருந்து என்ன பிரயோசனம். ஆவியாக (அகதியாக) அலைவதற்கா ☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

மேற்கு  நாடுகளில் அரசியலில் ஈடுபடும் ஈழத்தமிழர்களில் பலர் இங்குள்ள சோசலிச அல்லது தாராளுமயம் (Liberalism) பேசும்  கட்சிகளில் தான் உள்ளனர். அக்கட்சிகளின் பல்லின பல்கலாச்சார வாழ்வுமுறை மதிக்கும்  அவர்களது கொள்கைகளை ஏற்று பயணிக்கும் இந்த ஈழத்தமிழர்கள்   தனிப்பட்ட ரீதியில்  conservative mindset  கொண்டவர்களாகவும. அதை கடைப்பிடிபவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? 

பல காரணங்கள்: அனேகமான குடியேறிகள், தமிழர் உட்பட, தாங்களும் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தவுடன் கதவு அடித்துப் பூட்டப் படவேண்டும் என்று நினைக்கும் தன்மை அதில் ஒன்று. ஏனைய காரணங்களை எழுதினால் திரிக்கு "மதம்" பிடித்து விடக்கூடும், எனவே வேணாம்!😄

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

பல காரணங்கள்: அனேகமான குடியேறிகள், தமிழர் உட்பட, தாங்களும் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தவுடன் கதவு அடித்துப் பூட்டப் படவேண்டும் என்று நினைக்கும் தன்மை அதில் ஒன்று. ஏனைய காரணங்களை எழுதினால் திரிக்கு "மதம்" பிடித்து விடக்கூடும், எனவே வேணாம்!😄

அந்தப்பயம்  இருக்கட்டும்🤣😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அந்தப்பயம்  இருக்கட்டும்🤣😜

"பயம்" காட்டுவதன் மூலம் எல்லாவற்றையும் ஆண்டவர்களுக்கு இப்பவும் ஆள முயல்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயம் தானே? ஆனால், பேசாமல் இருப்பவன் காரியம் ஆற்றாமல் இருக்கமாட்டான் என்பதையும் யோசிக்க வேண்டும்!😄

பி.கு: அது சரி, என்ன காணவில்லை ஒரு மாதமாய்? யாழ் விரதமா? நலமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

"பயம்" காட்டுவதன் மூலம் எல்லாவற்றையும் ஆண்டவர்களுக்கு இப்பவும் ஆள முயல்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயம் தானே? ஆனால், பேசாமல் இருப்பவன் காரியம் ஆற்றாமல் இருக்கமாட்டான் என்பதையும் யோசிக்க வேண்டும்!😄

பி.கு: அது சரி, என்ன காணவில்லை ஒரு மாதமாய்? யாழ் விரதமா? நலமா?

நலம் ராசாக்கள்

அம்மாவின் இழப்பு  கொஞ்சம் மனம்   சரியாகவில்லை  

94 வயதாயினும் இன்னும்  கொஞ்சக்காலம் வாழும்படி  பார்த்திருக்கலாம்  என மனம்  ஏங்குகிறது

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

நலம் ராசாக்கள்

அம்மாவின் இழப்பு  கொஞ்சம் மனம்   சரியாகவில்லை  

94 வயதாயினும் இன்னும்  கொஞ்சக்காலம் வாழும்படி  பார்த்திருக்கலாம்  என மனம்  ஏங்குகிறது

 

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகர். 💐💐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.