Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளத்தைக் கலக்கும் கொரோனா தேவி வழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்தைக் கலக்கும் கொரோனா தேவி வழிபாடு!

spacer.png

 

கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. அங்கு கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது.

கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளை கும்பிட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.

இந்த ஆலயத்தை அனிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தைத் சிலையாக நிறுவி அதற்கு பூஜை செய்து வருகிறார்.

இது குறித்து பேசியுள்ள அனிலன், “வைரஸ் நோய்களை கடவுளாக பாவிக்கும் தன்மை இந்தியாவில் உண்டு. சிக்கன் பாக்ஸ் நோயை அம்மை நோய் எனவும் அம்மை போட்டிருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் கூறுகிறார்கள். அம்மனுக்குக் கோபம் வந்தால் அதுபோன்ற நோய் வரும் எனக் கூறுவார்கள்.

கேரளத்தில் சிக்கன் பாக்ஸ் நோயை வசூரி என அழைப்பார்கள். கொல்லத்தில்கூட பல ஆலயங்களில் வசூரிக்கு எனத் தனிப் பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்துவருகிறது. கொரோனா தேவியை வழிபட வேண்டும் என நான் யாரையும் அழைக்கவில்லை. என் வீட்டில் நான் வழிபடுவது எனது தனிப்பட்ட நம்பிக்கை. இங்கு வழிபாடு செய்ய வருபவர்கள் காணிக்கை வழங்க வேண்டும் எனவும் நான் கேட்கவில்லை. எனது வருமானத்துக்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்.

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் உள்ளனர். அதில் கொரோனா தேவி என்ற கடவுளை வணங்குவதில் தவறு இல்லை. நாம் பாம்பை வழிபடுகிறோம். யானை, எலி உள்ளிட்டவற்றை வழிபடுகிறோம். அதன் ஒரு பகுதியாக கொரோனா தேவியை வழிபடுகிறேன்" என்றவர் சூடம் ஏற்றிக் கொரோனா தேவியாக அவர் பாவிக்கும் ரூபத்துக்கு ஆரத்தி எடுக்கிறார்.

கொரோனா தேவி வழிபாடு காரணமாக உங்களை மனநலம் சரியில்லாதவர் எனக் கூறுகிறார்களே என அவரிடம் கேட்டதற்குக் கோபப்படாமல் பதில் சொல்கிறார். “இப்போது அல்ல எப்போதே என்னை அப்படி சொல்லிவிட்டார்கள். இங்கு மனநலத்துடன் இருப்பவர்கள் யார் என மனநல மருத்துவர்கள் அடையாளம் காட்டட்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வழிபாட்டு முறைக்கான உரிமை உள்ளது. இது எனது வழிபாட்டு முறை" என்கிறார்.
 

https://minnambalam.com/public/2020/06/15/12/kerala-corona-devi-poojas

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் உள்ளனர். அதில் கொரோனா தேவி என்ற கடவுளை வணங்குவதில் தவறு இல்லை. நாம் பாம்பை வழிபடுகிறோம். யானை, எலி உள்ளிட்டவற்றை வழிபடுகிறோம். அதன் ஒரு பகுதியாக கொரோனா தேவியை வழிபடுகிறேன்" என்றவர் சூடம் ஏற்றிக் கொரோனா தேவியாக அவர் பாவிக்கும் ரூபத்துக்கு ஆரத்தி எடுக்கிறார்.

படித்து படித்து ஆன்மீக இன்பம் பெற்றேன் தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எதையெல்லாம் கண்டு பயந்தார்களோ, அதையெல்லாம் தெய்வமாக்குவர். பேய்ச்சி, முண்டக்கண்ணி இவையெல்லாம் அப்படித்தான் வந்தன. சின்னம்மை, பெரியம்மை நோய்கள் பெரியளவில் தாக்கியபோது, அம்மன் என்று வழிபட்டார்கள். அந்நோய் தாக்கிய வீட்டிலிருந்து யாரும் பிறர் வீட்டிற்குச் செல்வதில்லை; பிறரும் நோய்கண்ட வீட்டிற்கு வருவதில்லை. தெய்வ குற்றம் ஆகிவிடும் என்ற (மூட) நம்பிக்கையைப் பரப்பியதால், அத்தொற்றுக்கு அக்காலத்திலேயே சமூக விலகல் சாத்தியமாயிற்று. இப்போது அறிவியல் பூர்வமாக கொரோனா தொற்று பற்றி விளக்கினால், அதெல்லாம் நமக்கு வராது என்ற  தொனியில் நடந்து கொள்கிறார்கள் பெருவாரியான மக்கள்.  முகக் கவசம் அணிந்தால் உறுதியாக தொற்று ஏற்படாது என்றெல்லாம் நம்புகிறார்கள். எனவே மக்களிடம் பகுத்தறிவும் பொறுப்புணர்வும் ஏற்படும் வரை (ஏற்படும் என நம்புவோம்), கொரோனாவைக் கடவுளாக்கி மக்களை மிரட்டிப் பணிய வைப்பது சிறந்த வழிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நம் முன்னோர் இப்படித்தான் தெரிந்தே மூட நம்பிக்கைகளைப் பரப்பிய புத்திசாலிகளோ என்னவோ ! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.