Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை -கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karuna-6-720x450.jpg

எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை -கருணா

தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை  பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

எனது கருத்து தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அது தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம்.

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை. அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்ற போது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து எதனையும் கூறவில்லை” என  தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/எனது-கருத்தை-பூதாகாரமாக்/

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான கருணாவின் பதில்

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான கருணாவின் பதில்

இலங்கை இராணுவத்தினரை தான் ஒதுபோதும் குறைத்து மதிப்பிட்டு எதனையும் கூறவில்லையென கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் சீ.ஐ.டியில் வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆகவே, அதுவொரு ஊடகத்தால் வந்த ஒரு சின்ன ஒரு இது. ஆகவே, இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில்தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
இதேவேளை, அவரது கருத்து தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் பின்வருமாறு பதிலளித்தார்,
அது தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம் என்பதைக் கூறிக்கொள்கின்றேன்
இதேவேளை, அவரது கருத்து தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் ஏதேனும் விடயங்கள் முன்வைக்கப்பட்டதா என வினவிய போது,
இல்லை. அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை. அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்றபோது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து மதிப்பிட்டு எதனையும் கூறவில்லைஎன பதிலளித்தார். -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/சர்ச்சைக்குரிய-கருத்து-த/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை -கருணா

 

 

2 hours ago, தமிழ் சிறி said:

karuna-6-720x450.jpg

எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை -கருணா

தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை  பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை

நாம சொன்ன யாரும் கேட்க மாட்டார்கள் 
நாய் என்றால் குரைக்கதானே செய்யும் 

அவரே சொல்கிறார் .......... 
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை  பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை

நான் சொன்னதெல்லாம் பொய் என்று சொல்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்னும் எத்தனை பொய்களை அவிழ்த்துவிடபோறாரோ தெரியலையே? எல்லாம் சொல்லிக்கொடுத்து கேள்வி கேட்டிருப்பார்கள். அவரும் கேட்டதை பாடமாக்கி சொல்லியிருப்பார், விசாரணை முடிந்தது. ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியதுபோல், சர்வதேசத்தின் அழுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமட்டும் இப்படியான தமிழின துரோகிகள் அவர்களுக்கு தேவை. முடிந்ததும் இவர்கள் செல்லாக்காசாகி விடுவார்கள். அதன் பின் எங்களது ஆயுதப்படை சிறந்தது, எமது தந்திரோபாயத்தில் எல்லா அழுத்தங்களையும் வெற்றியாய் கையாண்டு நாட்டை காப்பாற்றி விட்டோம்  என்று சிங்களம் கொக்கரிக்கும். சிங்களத்தை காப்பாற்றிய துரோகி, தன்னை காப்பாற்ற முடியாமல்  சாவதுதான் துரதிஷ்டம். அந்தச் சாவையும் தமிழன் மேலே திருப்பி விடும் சிங்களம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.