Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களை 12 மணித்தியாலத்துக்குள் வெளியேற்ற உத்தரவு

Featured Replies

வியாழக்கிழமை, 31 மே 2007, 19:54 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைத்த புறக்கோட்டைப் பகுதி காவல்துறையினரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்தனர்.

புறக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புறக்கோட்டைப் பகுதியிலுள்ள சுமார் 60 தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தில் கடுமையாகத் தனது உத்தரவைப் பிறப்பித்த காவல்துறை அதிகாரி, நாளை காலைக்குள் விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படா விட்டால், விடுதிகளிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுவார்கள் எனக்கடுமையாக தொனியில் எச்சரித்ததாக விடுதி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதாவது 12 மணி நேரத்துக்குள் இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். புறக்கோட்டைப் பகுதி உரிமையாளர்களே இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், கொழும்பிலுள்ள அனைத்து தங்கு விடுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என காவல்துறையினர் தெரிவி்த்தாகவும் அறியவருகின்றது.

புறக்கோட்டைப் பகுதியிலேயே அதிகமான விடுதிகள் இருக்கின்ற போதிலும், கொழும்பு நகரில் சுமார் 150 வரையிலான தங்குவிடுதிகள் இருப்பதாகவும், இவற்றில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

வெளிநாடு செல்வதற்காகவும், மருத்துவ, கல்வி மற்றும் நேர்முகப் பரீட்சை போன்ற அலுவலக அல்லது சொந்த வேலையாக வருபவர்களுமே இவ்வாறு விடுதிகளில் தங்கியிருக்கின்றார்கள்.

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக வருபவர்களில் பலர் விடுதிகளில் மாதக்கணக்கில் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட, சிலர் இவ்வாறான விடுதிகளில் தங்கியிருந்தே கொழும்பில் தொழில் புரிகின்றார்கள். உடனடியாக இரவோடிரவாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து இவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தருப்பதாகத் தெரிகின்றது.

பலர் என்ன செய்வதெனத் தெரியாது திண்டாடிக்கொண்டிருப்பதையு

Edited by priyan_eelam

  • தொடங்கியவர்

அட கடவுளே!!!! எங்கடை சனம் என்ன பாடு படுதோ??? :blink:

உதுக்கு தமிழீழம்தான் தீர்வு..வேறு வழியில்லை

ம்ம்ம்ம்ம்ம்......... இண்டைக்கு இப்படி என்றால் நாளைக்கு ? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள தமிழரை வெளியேற சொல்ல இன்னும் எவ்வளவு நாள் எடுக்கும்?.2 கிளைமோருக்கே இந்த முடிவு என்றால் ,10 குண்டு போட்டால், என்ன முடிவை மகிந்து எடுக்கும் என்று இப்பவே கட்டியம் கூறலாம்.

அங்கு சிரமப்படும் மக்களை நினைத்து வேதனையாக இருக்கின்றபோதும்..

மகிந்தவின் இந்த நடவடிக்கை பெரிய தவறு என்பதை அவர் புரிந்துகொள்வார்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது கொடூரமான வன்முறை: த.தே.கூ

தமிழ் மக்களை கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான வன்முறை எனவும், இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளதாவது:

இந்த நடைமுறை வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து தமது தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வரும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பது தெளிவானது.

இதனால் வடக்கில் இருந்து வந்த தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏ-9 பாதை முகமாலையில் மூடப்பட்டிருப்பதனால் அவர்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாது.

வானூர்தி மூலம் அல்லது கப்பலின் மூலம் திரும்புவது என்றாலும் பயணச்சீட்டுக்களை பெறுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனவே அரசு தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

-புதினம்

பெற்றா பகுதியில் தங்குவிடுதிகளில் தங்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்ற உத்தரவு.

கொழும்பு பெற்றா காவல்நிலைய பகுதிகளில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான 68 தனியார் தங்குவிடுதிகளில் இருந்து குறைந்தது 5000 தமிழ் மக்களை 24 மணி நேரத்திற்குள் அவரவர் சொந்த இடங்களுக்கு செல்லுமாறு கொழும்பு பிரதம காவல்துறை பரிசோதகரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அறியமுடிகிறது. அக்குறிப்பிட்ட சிறீலங்கா காவல்துறை அதிகாரியின் எச்சரிக்கையின்படி நீங்கள் வடக்கில் இருந்து வந்தால் வவுனியாவிற்கு செல்லுமாறும் மலையகப் பகுதியில் இருந்து சென்றிருந்தால் அங்கேயே மறுபடியும் செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமது அறிவுறுத்தல்களின்படி கடைப்பிடிக்கத் தவறின் காணமல் போதல் போன்ற முறைப்பாடுகளையும் பதிவு செய்யமுடியாமல் போகும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

-Pathivu-

அங்குள்ள எம்மவர்களின் நிலையை நினிக்கையில்....விடியல் வேண்டும்...வெகு சீக்கிரத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் (நானும்தான்) ஊரில் இருந்தால் சிலவேளை முந்தியே விடிஞ்சிருக்கும்!

இன்று விடுதி நாளை வீடு..

மொட்டு சிங்களவன் ஈழம் தானே பிரிக்கிறான் பாருங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் சும்மா இருக்கும் தமிழர்களை அவர்களது சொந்த இடத்துக்கு அனுப்ப முடிவு. பொலிஸ் மாமா அதிபர்.

அப்ப நம்ம சங்கரி மாமாவையும் வீட்டுக்கு அனுப்புவார்களா? அவரும் வீட்டில் சும்மா தான் இருக்கிரார்.

இது பற்றி ஆருமுகன் தொண்டமான் வாயே திறக்கவில்லை இவனெல்லாம் ஒரு இனத்துக்கு தலைவனாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.