Jump to content

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Navali-Church-Attack-Remembrance.jpg

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம்  திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் மரணமடைந்தனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணைத் தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், அன்று காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இந்தக் குண்டுவீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி மரணித்ததுடன் 350இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் இந்த நினைவு ஆண்டுதோறும் நினைவு கூரப்பட்டுவரும் நிலையில் இன்று 25ஆவது ஆண்டு நினைவு கூரப்படுகிறது.

இதேவேளை, நவாலி சென்பீற்றர் தேவாலத்தில் நினைவு நாள் அஞ்சலி நிகழ்வை நடத்தும் பொருட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நினைவுகூரல் நிகழ்வு தடையின்றி முன்னெடுக்கப்படும் என எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/நவாலி-சென்-பீற்றர்ஸ்-தேவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி ஆலய படுகொலையின் 25ம் ஆண்டு நினைவுநாள் இன்று

2-1-960x638.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலில் 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

199ஆம் ஆண்டு இதே மாதம் 9ம் திகதியன்று நவாலி பீட்டர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசி 147 பேரை படுகொலை செய்தது.

இந்த படுகொலை நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்கவிருப்பது தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறார் என்று கூறி பொலிஸார் முன்வைத்த தடை கோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றம் நேற்று (08) நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/நவாலி-ஆலய-படுகொலையின்-25ம்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக‌வும் கொடுமையான‌ ச‌ம்ப‌வ‌ம் இது 😓

ப‌ள்ளி சிறுமிக‌ள் தொட்டு முதிய‌வ‌ர்க‌ள் வ‌ர‌ புக்காரா விமான‌த்தாக்குத‌லில் கொல்ல‌ப் ப‌ட்டார்க‌ள் 😓/

ச‌ந்திரிக்காவின் அராஜ‌க‌ம் அட்டூழிய‌ம் உச்ச‌த்த‌ தொட்ட‌ கால‌ம் அது , எங்கு பார்த்தாலும் குண்டு ச‌த்த‌ங்க‌ள் 😡 , 

வானால் வ‌ந்து குண்டை போட்டு விட்டு த‌ங்கும் இட‌த்தில் வைச்சு தான் 2001ம் ஆண்டு 14ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ள் மூன்று ம‌ணித்தியால‌த்தில் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌த‌ குடிச்ச‌ விமான‌ங்க‌ளை அழித்தார்க‌ள் க‌ட்டுநாய‌க்காவில் , 

வே..... ச‌ந்திரிக்கா 1999ம் ஆண்டு ஒரு க‌ண்ணையும் இழ‌ந்த‌வா 🤞 /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி தேவாலயம் மீது குண்டு வீசி 25 ஆண்டுகள்!

spacer.png

பட மூலம், TamilGuardian

1995 ஜூலையில் யாழ்ப்பாணம், நவாலியிலுள்ள சென். பீற்றர் மற்றும் போல் தேவாலயம், போரிலிருந்து பாதுகாப்பும் அடைக்கலமும் தேடி இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு மற்றும் தற்காலிக கழிப்பறைகளை அமைத்தல் உள்ளிட்ட உதவிகளை தேவாலயத்தின் இளைஞர் கழகம் உள்ளிட்ட நவாலியிலுள்ள மக்கள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் கூற்றுகளின்படி, ஜூலை 9ஆம் திகதி, பிற்பகல் 4.30 – 5 மணியளவில் தேவாலயத்தைச் சூழவும், ஸ்ரீ கதிர்காம முருகன் இந்து ஆலயம் மற்றும் அதன் அயற்புறங்களிலும் ‘புக்காரா’ எனும் விமானத்திலிருந்து 8-13 குண்டுகள் வீசப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களுள் 4 வயது மற்றும் 68 வயதுடைய இருவரும் அடங்குவர். இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்காகவும் தொண்டர்களான இளைஞர்களுக்காகவும் சமையலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி கிராம சேவையாளரும் கொல்லப்பட்டவர்களுள் அடங்குவார். கொல்லப்பட்டவர்களுள் அண்ணளவாக 45 பேர் நவாலி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதிகமானோர் அடைக்கலம் தேடி இடம்பெயர்ந்து நவாலிக்கு வருகை தந்தவர்களாவர். அன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்படவேயில்லை. தான் வீடு சென்றுபார்த்தபோது தனது 18 வயதான மகளின் சடலத்தின் கீழ் தனது உறவினரின் குழந்தை ஒன்றை உயிருடன் கண்டெடுத்தது எப்படி என்பதை பெண்ணொருவர் விபரித்தார். சில சடலங்கள் சில நாட்களின் பின்னரே மீட்கப்பட்டன. தலைகளற்ற சடலங்கள் நிலமெங்கும் பரந்து கிடந்தன. சில உடல்களின் தலைகள் மரத்தின் மீதிருந்து கண்டெடுக்கப்பட்டன. பல உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி கருகியிருந்தன. அன்றைய தினம் மாலை தான் யாழ்ப்பாணத்திலிருந்து நவாலி நோக்கி சைக்கிளில் பயணித்தபோது, சடலங்களும் அவற்றின் பாகங்களும் வீதியெங்கும் சிதறிக்கிடந்ததாக கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் விபரித்தார்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க பேராயர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியோரை மேற்கோள்காட்டி இக் கண்டுத்தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், பின்னர் இந்த எண்ணிக்கை 117 ஆக அதிகரித்தது. எப்படியிருப்பினும் கிராமவாசிகள் 147, 165 மற்றும் 217 என வேறுபட்ட எண்ணிக்கைகளை என்னிடம் கூறினர். சிலர் 300 பேர் வரை கொல்லப்பட்டனர் என்றும் கூறினர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்தவர்கள் என்பதாலும் காயமடைந்த பலர் பின்னர் உயிரிழந்ததாலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாகும். எனது நண்பர் ஒருவரின் மாமியும் காயங்கள் காரணமாக பின்னர் உயிரிழந்தவர்களுள் அடங்குவார். மறுநாளும் (ஜூலை 10) அதேபோன்று அதிகமான குண்டுகள் வீசப்பட்டதாகவும் அதில் ஆகக் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் என்னிடம் கூறினர். குறித்த குண்டுகள் இலங்கை விமானப் படையினாலேயே வீசப்பட்டதாக நவாலியில் நான் சந்தித்த எல்லா மக்களும் என்னிடம் உறுதிபடத் தெரிவித்தனர். வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்களில் “வான்வழி குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு” என காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. 1995 காலப்பகுதியில் எந்தவொரு வேறு ஆயுதக் குழுவும் வான்வழி குண்டுத்தாக்குதல் நடாத்தும் விமானங்களைக் கொண்டிருக்கவில்லை.

உயிரிழந்த தமது குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறுதிச் சடங்குகளை உரிய முறையில் நடத்தவோ அல்லது அவர்களை உரிய முறையில் அடக்கம் செய்யவோ முடியவில்லை என பலரும் இன்றுவரை துயரப்படுகின்றனர். சவப்பெட்டிகளைப் பெற்றுக் கொள்வது சிரமமாகவிருந்ததுடன், பல சடலங்கள் ட்ரக்டர் வண்டிகளில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. சடலங்களை ட்ரக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவருக்கு அவற்றுள் தனது சொந்த மகனின் சடலத்தையும் காண நேர்ந்தது. அத்துடன், காயமடைந்தவர்களை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றுவதும் கடினமானதாகவிருந்தது. காயமடைந்த பெண் ஒருவர், தான் மாதக் கணக்கில் வைத்தியசாலையிலும் வெளியிலும் தங்கியிருந்ததாகவும் ஆனால் இன்று வரை சரியாக நடக்க முடியவில்லை என்றும் என்னிடம் கூறினார். அவரது மகளும் மகனும் கூட கொல்லப்பட்டனர். மற்றொருவர், குண்டுகள் தன்னைச் சூழ வீழ்ந்தபோது வீதியில் தட்டையாக வீழ்ந்துகிடந்து உயிர் தப்பினார். சில நிமிடங்களில் அவர் எழுந்து நின்றபோது இரத்தத்தால் நனைந்திருந்தார். யாரோ ஒருவரது இரத்தம் தோய்ந்த கை அவர் மீது வந்து வீழ்ந்தது. எந்தவித உடல் காயங்களுமின்றி அவர் தப்பியபோதிலும் அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தக் குண்டுத் தாக்குதலானது தேவாலய கட்டடம் (கூரை உட்பட), இந்து ஆலயம் மற்றும் 30 வீடுகள் அடங்கலாக பல கட்டடங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கத்தோலிக்க தேவாலயம், இந்துக் கோவில் மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட, சேதமடைந்த பல வீடுகள் இன்று மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் நான் அவதானித்த மூன்று வீடுகளில் இன்னமும் இடிபாடுகளே எஞ்சியுள்ளன. மற்றொரு வீட்டின் சுவர் ஊடாக தெரியும் துளைகளை அவதானிக்க முடிந்தது. இரும்புக் கதவொன்று பல நூறு மீட்டர்கள் தூரம் தூக்கி வீசப்படுமளவுக்கு குண்டுகளின் தாக்கம் மிகப் பெரியதாகும்.

குண்டுத் தாக்குதல் நடந்த சில வாரங்களுக்கு பிறகு நவாலியில் குண்டு வீசிய விமானப் படை விமானத்தை தாம் சுட்டுவீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமை கோரியதாகவும் குறித்த விமானத்தின் பாகங்கள் எனக் கூறி உலோக துண்டுகளை காட்சிக்கு வைத்திருந்ததாகவும் பல கிராமவாசிகள் என்னிடம் தெரிவித்தனர்.

கத்தோலிக்க ஆயர் மற்றும் ஐ.சி.ஆர்.சியின் அறிக்கைகள்

உயிரிழப்புகள், காயங்கள், கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் என்பன நவாலியில் இடம்பெற்ற வான்வழித்தாக்குதலினாலேயே ஏற்பட்டன என்பதை யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் மற்றும் ஐ.சி.ஆர்.சி. அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் பிரசுரித்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.[ii]  பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமையவே இடம்பெயர்ந்த மக்கள் தேவாலயங்கள், கோயில்களில் தஞ்சமடைந்ததாக ஆயர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே ஊடக அறிக்கையில், தாக்குதலுக்கு மறுநாள் அவ்வனர்த்தம் பற்றி விபரித்து ஜனாதிபதிக்கு ஆயர் கடிதம் எழுதியதாகவும் அதில் “சிவிலியன் இலக்குகளான கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசுதல், தாழப்பறந்து தாக்குதல், ஆர்ட்லறி ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு தயவு செய்து உங்கள் படையினருக்கு அறிவுறுத்துங்கள்” என வேண்டிக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1995 ஆகஸ்ட் 7 ஆம் திகதி மற்றுமொரு கடிதத்தை எழுதியதாகவும் அதில் “நான் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் விஜயம் செய்து அவதானித்தேன். தேவாலயமும் அதன் கூரையும் சேதமடைந்திருந்தன. சகல கதவுகளும் யன்னல்களும் கழற்றி வீசப்பட்டுக் கிடந்ததுடன் தரை முழுவதும் உடைந்த கண்ணாடித்துண்டுகளால் நிறைந்து காணப்பட்டது. நிலத்தில் இரத்தக்கறைகளை நான் கண்டதுடன் இரத்தம் தோய்ந்த ஆடைகளும் அங்கு கிடந்தன” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதே ஊடக அறிக்கை கூறுகிறது.

பரந்த பார்வை – வழிபாட்டுத் தலங்களில் படுகொலைகள், நினைவுச் சின்னங்கள், இழப்பீடு மற்றும் நீதி

இலங்கையில் வழிபாட்டுத்தலங்களில் பல சிவிலியன் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதுடன் ஒவ்வொரு சம்பவத்திற்குமான அரசாங்கத்தின் பதில்கள், குற்றவாளிகள் யார் என்பதைப் பொறுத்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டனவாக அமைந்துள்ளன.  உதாரணமாக, காத்தான்குடி பள்ளிவாசல், அநுராதபுரம் (ஸ்ரீ மகா போதி) மற்றும் கண்டி (தலதா மாளிகை) ஆகிய இரு புனித மற்றும் பிரபல பௌத்த விகாரைகள் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், அதேபோன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இனால் கவரப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் என்பன பிரதான தேசிய ஊடகங்களிலும் அரசாங்கத்திடமிருந்தும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருந்தன.  ஆனால் நவாலி, குருநகர் மற்றும் அல்லைப்பிட்டி போன்ற இடங்களில் பாரிய சிவிலியன் உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு இட்டுச் சென்ற யாழ்ப்பாண தேவாலய குண்டுத் தாக்குதல்கள் மிகச் சிறிய அளவிலாவது தேசிய ஊடக கவனயீர்ப்பையோ அல்லது அரசாங்கத்தின் ஒப்புதல்களையோ பெறவில்லை. ஏனெனில், இந்தக் குற்றங்களின் பின்னணியில் இலங்கை இராணுவம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதனாலும் இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் அவ்வாறிருக்கலாம்.

குற்றவியல் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியைப் பொறுத்தவரை கண்டி தலதா மாளிகை குண்டுத் தாக்குதலுக்காக ஆகக்குறைந்தது மூவர் மீது வழக்குத் தொடரப்பட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஒரு சில மாதங்களிலேயே சர்வ கட்சி நாடாளுமன்ற குழுவினாலும் ஜனாதிபதி ஆணைக்குழுவினாலும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிய நடைமுறைகள் குறித்த கவலைகள் உள்ளபோதிலும் நூற்றுக் கணக்கானோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆனால், நவாலியில் நான் சந்தித்த மக்களின் கருத்துகளுக்கமைய கடந்த 25 வருடங்களில் நவாலி படுகொலைகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் இடம்பெறவில்லை. அத்துடன், ஒருவர் கூட கைது செய்யப்படவோ வழக்குத் தொடரப்படவோ குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படவோ இல்லை. எனது அறிவுக்குட்பட்ட வகையில், வடக்கில் தேவாலயங்கள் மீது நடாத்தப்பட்ட பிற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல தசாப்தங்கள் கடந்தும் எவரும் கைது செய்யப்படவோ வழக்குத் தொடரப்படவோ குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படவோ இல்லை.

இழப்பீடுகளைப் பொறுத்தவரையில் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தமைக்காக 1997 இல் தனக்கு 15,000 ரூபா நஷ்டயீடு கிடைத்ததாக நவாலியிலுள்ள வயதான நபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். வடக்கிலுள்ள ஏனைய உயிர்தப்பிய தமிழர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தமக்கு எந்தவித இழப்பீடுகளும் கிடைக்கவில்லை என என்னிடம் குறிப்பிட்டனர். ஆனால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைப் பொறுத்தவரை உயிர்தப்பியவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அரசாங்கத்தினாலும் தேவாலயத்தின் தலைமையிலும் மருத்துவ பராமரிப்பு, உளவியல் ரீதியான பராமரிப்பு, கல்வி, வீடமைப்பு மற்றும் கட்டடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது. வேறுபட்ட சூழ்நிலைகள் மற்றும் கால இடைவெளி இருந்தபோதிலும் நவாலி படுகொலையிலும் ஏனைய போர்கால படுகொலைகளிலும் உயிர்தப்பியவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் இதே மாதிரியான இழப்பீடு குறித்து கவனம் செலுத்த முடியும்.

நவாலி படுகொலை நடந்து 25 வருடங்களுக்குப் பிறகான எனது விஜயத்தின் போது சிலர் அச்சம் மற்றும் அதிர்ச்சி காரணமாக அது தொடர்பில் என்னுடன் பேச விரும்பவில்லை. சிலர் தங்களது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என என்னை எச்சரித்தனர். வேறு சிலர் பேசும்போது அழுதனர். நவாலி குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பிய பெண் ஒருவர், தனது அதிகமான சிங்கள நண்பர்கள் இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை பிறருடன் பகிர வேண்டாம் என்றும் அதனை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் தனக்கு ஆலோசனை வழங்கியதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவ்வாறு மறந்துவிடுவது சாத்தியமற்றது என அப்பெண் என்னிடம் கூறினார். நான் சந்தித்துப் பேசிய குண்டுத் தாக்குதலில் உயிர்த்தப்பிய மற்றும் நேரடியாக அனுபவித்த அனைவரும் அதே உணர்வலைகளையே என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னங்கள், கட்டுவாபிட்டி (நீர்கொழும்பு) மற்றும் கொச்சிக்கடை (கொழும்பு) ஆகிய இடங்களில் ஓரிரு மாதங்களிலேயே நிறுவப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் முதலாவது வருட பூர்த்தியை நினைவுகூருவதற்கான விரிவான ஏற்பாடுகள் அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவுடன் கொழும்பு மறைமாவட்ட பேராயரால் அறிவிக்கப்பட்டன. கொவிட்-19 பரவல் காரணமாக இவை மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், முதல் வருட நினைவு நிகழ்வுகள் தேசிய அளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.  கொழும்பு பேராயரின் நீதிக்கான கோரிக்கைக்கு தேசிய ஊடகங்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் அதிர்ச்சியை மதிப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் துன்பத்திற்கு கண்ணியமளித்தல், நீதி மற்றும் இழப்பீடு என்பனவற்றுக்கும் இந்த பதில் முக்கியமானதாகும். இது பாதிக்கப்பட்டவர்களும் உயிர்தப்பியவர்களும் எப்படி நடாத்தப்பட வேண்டும், எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்பதற்கும்  வடக்கு மற்றும் கிழக்கில் அத்தகைய ஆதரவைப் பெறாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை சிந்திப்பதற்குமான ஒரு நினைவூட்டலாகும். இலங்கை விமானப் படையினரே குற்றவாளிகள் எனக் கூறப்படும் சூழலில், நவாலி தேவாலய தாக்குதலில் உயிர்தப்பியவர்களாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினராலும் மற்றும் வடக்கிலுள்ள தமிழ் தேவாலயங்களின் தலைவர்களாலும் தேசிய ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களின் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற முடியாமல் போனது.

இந்த வெற்றிடத்தில் நவாலியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அச்சமூகம் எளிமையான நினைவுச்சின்னம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர். உள்ளுர் மக்களின் கருத்துப்படி வருடாந்தம் நினைவு நிகழ்வுகள் அச்சமூகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்றன. கடந்த வார இறுதியில் நான் அங்கு விஜயம் செய்தபோது கிராமத்தின் இளைஞர்கள் நினைவுச்சின்னத்தை சுத்தம் செய்து கொண்டிருந்ததுடன் சம்பந்தப்பட்ட சில கத்தோலிக்க பாதிரியார்களும் சமூக தலைவர்களும் 25 ஆவது வருட நினைவு நிகழ்வு தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். 25 வருடங்கள் கடந்தும் கூட அந்த சோகத்தின் வலி, உயிர்தப்பியவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நவாலி சமூகத்தின் மனதிலும் இதயங்களிலும் புதியதாகவே எஞ்சிநிற்பதுடன் அந்தப் படுகொலை எப்போதும் நினைவிலிருக்கும்.

உயிர்தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி, இழப்பீடு, நினைவுகூருதல் ஆகியவற்றின் உரிமைகளைத் தொடர கைகோர்ப்பது எல்லா இலங்கையர்களுக்கும் இன்னமும் சவாலாகவே உள்ளது. ஒரு சிறிய அளவில், யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் படுகொலைகளின் வரலாறு மற்றும் கடந்த ஆண்டு கொழும்பு மறைமாவட்டத்தின் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை கத்தோலிக்க திருச்சபைக்கு இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட சிலருக்கு முன்னுரிமை வழங்குவதும் ஏனையோரை ஓரங்கட்டுவதும் நல்லிணக்கத்தையும் குணப்படுத்தலையும் மேலும் தூரமாக்கவே வழிவகுக்கும்.

ruki_fernando-e1522406696800.jpg?resize=ருக்கி பெர்னாண்டோ

“Navaly Church Bombing – 25 Years On” என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.


       https://tamilnation.org/indictment/genocide95/gen95012.htm

[ii]      மேலுள்ளது

 

 

https://maatram.org/?p=8610

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.