Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MG_4114-720x450.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் –  சிறீதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்‌ஷக்கள் அஞ்சுவதாக தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன்   தெரிவித்துள்ளார்

புலோப்பளை மக்களுடனான சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “அண்மையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும்   மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் சகோதரனான பசில் ராஜபக்‌ஷ தமிழ்  தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

அவரின் சகோதரன்  மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இரண்டு வரவு செலவு திட்டங்களிற்கு நாம் ஆதரவளித்து இருக்கிறோம். எங்கள் இனத்தின் நிரந்தர அரசியல் தீர்விற்காகவே நாம் ஆதரவளித்திருந்தோம். நாம் அவர்களோடு19 தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.

19 தடவைகளும் பொய்களையும் பிரட்டுக்களையும் கூறினார்கள்  ஆனால் அவர்கள் எந்தவிதமான தீர்வுகளையும் தரவில்லை.13+ ஐ கொடுக்கப் போவதாக கூறி எம்மை ஏமாற்றியவர்கள் இப்போது 13 ம் இல்லை என்கிறார்கள்.

இப்போது வடக்கு மாகாணம் முழுவதும் புதிதாக இராணுவ சோதனை சாவடிகள் முளைத்திருக்கின்றன. இதனால் இந்த நாடு முழுவதும் ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது.

 இந்த விடயங்களை சிங்கள மக்கள் நன்கு புரிந்து விட்டார்கள் ராஜபக்சாகளின் இராணுவ ஆட்சியை நன்று  விளங்கிவிட்டார்கள் இவர்களின் உண்மை நிலைப்பாட்டை சில சிங்கள கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் தோற்று விடுவோமோ னிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதி ராஜபக்சாக்களை ஆட்கொண்டுள்ளது  அவர் தெரிவித்தார்

https://athavannews.com/தமிழ்-தேசியக்-கூட்டமைப்-17/

  • கருத்துக்கள உறவுகள்

 வன்னியில் தான் இவரின் வீராப்பு எல்லாம்.

13 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் –  சிறீதரன்

நல்லா ஜோக் அடிக்கிறார் சிறீதரன்!
முடிஞ்சா வன்னியின் உட்பகுதிகளுக்கு போய் சிறீதரன் வாக்கு கேட்கட்டும் பாக்கலாம்.

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் என்டு இந்திய கொலைஞர்கள் குடுத்த உற்சாக பானத்தில் மிதக்கும் சிறீதரன் ஒவ்வொரு இடத்திலும் இந்திய புராணம் பாடுறார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

 வன்னியில் தான் இவரின் வீராப்பு எல்லாம்.

 

16 minutes ago, Rajesh said:

நல்லா ஜோக் அடிக்கிறார் சிறீதரன்!
முடிஞ்சா வன்னியின் உட்பகுதிகளுக்கு போய் சிறீதரன் வாக்கு கேட்கட்டும் பாக்கலாம்.

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் என்டு இந்திய கொலைஞர்கள் குடுத்த உற்சாக பானத்தில் மிதக்கும் சிறீதரன் ஒவ்வொரு இடத்திலும் இந்திய புராணம் பாடுறார்!

இந்த,  சிறீதரன் தான்...
யாழ். மாவட்டத்தில்... மூன்று, அரச மது விற்பனை நிலையங்கள் உள்ளது,
கிளிநொச்சியில்... ஒரு, மது விற்பனை நிலையம் இல்லை என்பதால்...
அங்கு, ஒன்றை... திறக்கும் படி, பாராளுமன்றத்தில் பேசிய, ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்‌ஷக்கள் அஞ்சுவதாக தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன்   தெரிவித்துள்ளார்

இருபத்தோராம் நூற்ராண்டின் மிகப்பெரிய பகிடி.

18 hours ago, தமிழ் சிறி said:

அவரின் சகோதரன்  மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இரண்டு வரவு செலவு திட்டங்களிற்கு நாம் ஆதரவளித்து இருக்கிறோம். எங்கள் இனத்தின் நிரந்தர அரசியல் தீர்விற்காகவே நாம் ஆதரவளித்திருந்தோம். நாம் அவர்களோடு19 தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.

எதற்காக? எதை பெற்றுக்கொண்டீர்கள்? லஞ்சத்துக்காகவா? 

யாழ். மாவட்டத்தில்... மூன்று, அரச மது விற்பனை நிலையங்கள் உள்ளது,
கிளிநொச்சியில்... ஒரு, மது விற்பனை நிலையம் இல்லை என்பதால்...
அங்கு, ஒன்றை... திறக்கும் படி, பாராளுமன்றத்தில் பேசிய, ஆள்.

குடிகாரன் பேச்சு விடிஞ்சால்ப் போச்சு. அரசியல்வாதியின் பேச்சு மேடையோடு போச்சு. போங்கோ.....  
  • கருத்துக்கள உறவுகள்

 

 

அவர் சொல்வது உண்மை, தமிழ் மக்கள் கூட்டமைப்பீ கண்டு பயப்பிடீனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.