Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருபரன் ஏன் பந்தாடப்படுகின்றார்? பின்னால் உள்ள அரசியல் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை சுயாதீனமற்றது.!

jaff.jpg

யாழ்.பல்கலைகழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்பதனால், சட்ட பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அழுத்தத்தங்களால் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்தார் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் லூ.அனுஷன் தெரிவித்தார்.  கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை கடந்த17 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருக்கிறார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை காரணமாக காட்டியுள்ளார். தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டுள்ளர்.
இந்நிலையில் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைகழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்குது. அதனால் தான் சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கு குருபரனுக்கு அழுத்தம் கொடுத்து,  நிர்பந்தித்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டது. அரசிற்கு எதிரான வழக்குகள் செய்தமையால் தான் அவருக்கு இந்த நிலமை ஏற்பட்டது.  பல்கலை கழக மானிய ஆணைக்குழு சொன்னதை பேரவை சிரமேற்கொண்டு செயற்படுத்துகின்றது. அது பேரவையின் சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.எனவே  பல்கலை கழக சமூகம் தவிர்ந்து ஏனைய சமூகங்களும் ஒன்றிணைந்து எமது பல்கலைகழகம் சுயாதீனமாக செயற்பட குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை யாழ்.பல்கலைகழக சட்டத்துறை மாணவியான கதிர் தர்சினி தெரிவிக்கையில்,  இன்று இதொரு  தனி மனிதரின் பதவி விலகலாக இருக்கின்றது. நாளை ஏனையவர்களுக்கும் நடக்கலாம்.பல்கலைகழகம் சுயாதீனமாக செயற்பட வேண்டும். அதிகாரமுள்ள நிறுவனமாக பல்கலைகழகம் இருக்க வேண்டும்.  அதனூடாக புலமை சுதந்திரத்தை இழாக்காது காக்க வேண்டும்.ஒரு கல்வி சுதந்திரத்தை அடக்குவது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்பதுடன் எமது புலமை சுதந்திரத்தை நசுக்குவதன் ஊடாக நாம் பாதிக்கப்படவுள்ளோம்.
இப்படியே நிலமை செல்லுமாயின் மாணவர்கள் தமது கல்வி செயற்பாட்டில் மாத்திரமே ஈடுபட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டு மாணவர்கள் அடக்கப்படும் நிலமைகள் வரும். அதன் பின்னர் நாம் குரல் கொடுப்பது தாமதித்த குரலாக இருக்கும்.
எனவே பல்கலை கழகம் சுயாதீனமாக செயற்பட வேண்டும். வெளியில் இருக்கும் அழுத்தங்களுக்கு அடி பணிவதன் ஊடாக எமது கல்வி வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது.
வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாது, பல்கலைகழகம் சுயாதீனமாக செயற்பட்டு எமது புலமை சுதந்திரங்களை காப்பதன் ஊடாக கல்வியை மேம்படுத்த வேண்டும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2020/147146/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்

அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. 

🙂

  • கருத்துக்கள உறவுகள்

குருபரனின் விலகல் பேரிழப்பு – தமிழ் மக்கள் பேரவை

guruparan.jpg?189db0&189db0

சட்டத்தரணி குருபரனின் பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும், பல்கலைக்கழக சமுகம், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவை இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை வருமாறு,

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம்  செய்யப்பட வேண்டும்!- மனம் திறக்கிறார் குருபரன்

 

  • கருத்துக்கள உறவுகள்

குருபரனின் பதவி விலகலை மீளப்பெற கோருவது என பல்கலை பேரவை தீர்மானம்!

Jaffna-University.jpg?189db0&189db0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கு.குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கையை சீராய்ந்து மீளப்பெறுமாறு கோருவது என பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் இந்தத் தீர்மானம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, கலாநிதி குருபரனுக்கு கடிதம் மூலம் அடுத்தவாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் இன்று (25) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கடந்த 17ம் திகதி பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கலைப்பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பிவைத்திருந்தார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடைசெய்துள்ளமையை காரணாமாகக் காட்டியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கை கடிதம் தகுதி வாய்ந்த அதிகாரியால் இன்று பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அதன்போது, சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் குருபரன் தனது பதவி விலகல் தொடர்பான தீர்மானத்தை சீராய்ந்து தனது கோரிக்கையை மீளப்பெறுமாறு கோருவது என்று பேரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/குருபரனின்-பதவி-விலகலை-ம/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுசன அபிப்பிராயத்தை தனியொரு கட்சியிடம் ஒப்படைத்து சாதித்தது என்ன?

நாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் குலைந்து போய் விடுவோம் என்பது தோற்ற இனத்தின் மனப்பயம் தான். இங்கே ஒற்றுமையாக இல்லாவிடில் குலைந்து போய் விடுவோம் என்றில்லை. 

எங்களுடைய நிலைப்பாடுகளில் நாங்கள் கவனமாகவும், தீர்க்கமாகவும் இல்லாவிடிற் தான் நாங்கள் குலைந்து போய் விடுவோம். போலியான ஒற்றுமைக் கோஷங்களில் ஒரு பிரயோசனமும் இல்லை.  

எல்லாவற்றையும் ஒரு தரப்பிடம் விட்டு விட்டு கடந்த பத்து வருடங்களில் என்னத்தை சாதித்தோம்.  

இம்முறையும் அதே தரப்பை மாத்திரம் நாங்கள் திருப்பி அனுப்ப போகிறோமா? அல்லது அந்தத்தரப்பு எடுக்கக் கூடிய நிலைப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தக் கூடிய ஒரு தலைமையை நாங்கள் அனுப்பப் போகின்றோமா? அப்படி அனுப்புவதுதான் முக்கியம் என்று தான் தான் கருதுவதாக தெரிவித்தார் சட்டத்தரணியும், முன்னாள் யாழ். பல்கலை சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமரவடிவேல் குருபரன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.