Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரும் திங்களும் - மாறாத மனித மனங்கள்

Featured Replies

மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில்

https://youtu.be/no-2WHQ7ti0

 

  • கருத்துக்கள உறவுகள்

மத சாதி சண்டைகளால் மனிதர்கள் வெறியுடன் திரிகின்றனர், எவ்வளவுதான் நாகரீகம் வளர்ச்சியடைந்தாலும், இதை மட்டும் காவித்திரிகின்றார்கள்

உங்கள் குரலிற்காக மூன்றுதாரம் கேட்டுவிட்டேன். பின்னனி இசையும் அருமை.  

வானோலி நிலையத்தில் வேலை செய்கின்றீர்களா, குரலிற்கு ரசிகர் பட்டாளம் கூடிவிடும்.

  • தொடங்கியவர்
53 minutes ago, உடையார் said:

மத சாதி சண்டைகளால் மனிதர்கள் வெறியுடன் திரிகின்றனர், எவ்வளவுதான் நாகரீகம் வளர்ச்சியடைந்தாலும், இதை மட்டும் காவித்திரிகின்றார்கள்

உங்கள் குரலிற்காக மூன்றுதாரம் கேட்டுவிட்டேன். பின்னனி இசையும் அருமை.  

வானோலி நிலையத்தில் வேலை செய்கின்றீர்களா, குரலிற்கு ரசிகர் பட்டாளம் கூடிவிடும்.

மிக மிக நன்றி உடையார்

நம்மில் பலர் இந்திய கலைஞர்களை பாராட்டும் அளவிற்கு நம் ஈழத்தவர்களை பாராட்டுவதில்லை. உங்கள் பாராட்டு நானும் சரியான தடத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்ற நம்மிக்கையை கொடுத்திருக்கிறது. நான் ஒரு ஆசிரியர்தான்.  ஆனாலும் எனக்கு கவிதை வாசித்தல் சின்ன வயதில் இருந்தே மிகப் பிடிக்கும்.கருத்து பகிர்வுக்கு   நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nige said:

மிக மிக நன்றி உடையார்

நம்மில் பலர் இந்திய கலைஞர்களை பாராட்டும் அளவிற்கு நம் ஈழத்தவர்களை பாராட்டுவதில்லை. உங்கள் பாராட்டு நானும் சரியான தடத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்ற நம்மிக்கையை கொடுத்திருக்கிறது. நான் ஒரு ஆசிரியர்தான்.  ஆனாலும் எனக்கு கவிதை வாசித்தல் சின்ன வயதில் இருந்தே மிகப் பிடிக்கும்.கருத்து பகிர்வுக்கு   நன்றி. 

 

எல்லோரும் படு பிசி அரசியல் களத்தில், தேர்தல் நேரமல்லவா.

உங்கள் குரலும், அமைதியான பின்னனி இசையும்தான் கவிதைக்கு மெரு கூட்டுகின்றது.

கண்டிப்பான ஆசிரியார அல்லது அன்பான ஆசிரியரா😀, சும்மா பகிடிக்கு.

ஆசிரியர் தொழில் ஒரு மகத்தான தொழில், நானும் கணிதம் படிப்பித்தனான் 6-A/L வரை வீடு வீடாக, மனதிற்கு ஒர் சந்தோஷம் அவர்கள் சோதனையில் சித்தி எய்து போது,

என்னதான் படித்து மேலே போனாலும், படித்த ஆசிரியரை கண்டதும் பவ்வியமாக அடக்கிடுவோம்🤣

கள உறவு தோழியும் ஆங்கில ஆசிரியர்தான்

  • தொடங்கியவர்
40 minutes ago, உடையார் said:

 

எல்லோரும் படு பிசி அரசியல் களத்தில், தேர்தல் நேரமல்லவா.

உங்கள் குரலும், அமைதியான பின்னனி இசையும்தான் கவிதைக்கு மெரு கூட்டுகின்றது.

கண்டிப்பான ஆசிரியார அல்லது அன்பான ஆசிரியரா😀, சும்மா பகிடிக்கு.

ஆசிரியர் தொழில் ஒரு மகத்தான தொழில், நானும் கணிதம் படிப்பித்தனான் 6-A/L வரை வீடு வீடாக, மனதிற்கு ஒர் சந்தோஷம் அவர்கள் சோதனையில் சித்தி எய்து போது,

என்னதான் படித்து மேலே போனாலும், படித்த ஆசிரியரை கண்டதும் பவ்வியமாக அடக்கிடுவோம்🤣

கள உறவு தோழியும் ஆங்கில ஆசிரியர்தான்

உண்மைதான்.நன்றி. நான் தமிழ் பட்டதாரி ஆசிரியர்தான்.ஆனால் இப்போது வெளிநாட்டில் வந்து ஆரம்பபள்ளி ஆங்கில ஆசிரியராகத்தான் இருக்கிறேன். தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில்தான் இந்த சின்ன முயற்சி...முன்பு உயர்தர மாணவர்களிற்கு கற்பித்தபோது நிட்சயமாக கண்டிப்பான ஆசிரியர்தான்.ஆனால் இப்போது சிறுவர்களுடன் வேலை செய்வதால் அன்பான ஆசிரியராகிவிட்டேன்.

Edited by nige

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nige said:

உண்மைதான்.நன்றி. நான் தமிழ் பட்டதாரி ஆசிரியர்தான்.ஆனால் இப்போது வெளிநாட்டில் வந்து ஆரம்பபள்ளி ஆங்கில ஆசிரியராகத்தான் இருக்கிறேன். தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில்தான் இந்த சின்ன முயற்சி...முன்பு உயர்தர மாணவர்களிற்கு கற்பித்தபோது நிட்சயமாக கண்டிப்பான ஆசிரியர்தான்.ஆனால் இப்போது சிறுவர்களுடன் வேலை செய்வதால் அன்பான ஆசிரியராகிவிட்டேன்.

ஆகா இனி எங்கள் கொட்டங்களையெல்லாம் அடக்கி வாசிக்க வேண்டும்🤔.

சொற்பிழை பொருள் பிழைகளிருந்தால் கோபிக்க கூடாது, நாங்கள் அரிவரிதான் இதில்.

உங்கள் படைப்புகளை பகிருங்கள் தொடர்ந்து, நன்றி

  • தொடங்கியவர்
16 hours ago, உடையார் said:

ஆகா இனி எங்கள் கொட்டங்களையெல்லாம் அடக்கி வாசிக்க வேண்டும்🤔.

சொற்பிழை பொருள் பிழைகளிருந்தால் கோபிக்க கூடாது, நாங்கள் அரிவரிதான் இதில்.

உங்கள் படைப்புகளை பகிருங்கள் தொடர்ந்து, நன்றி

அதெல்லாம் ஒன்றுமில்லை. நம் பிள்ளைகள் தமிழில் கதைத்தாலே அதை பெரிய விடயமாக பார்க்கும் உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் வருத்தமான உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nige said:

அதெல்லாம் ஒன்றுமில்லை. நம் பிள்ளைகள் தமிழில் கதைத்தாலே அதை பெரிய விடயமாக பார்க்கும் உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் வருத்தமான உண்மை...

நிதர்சனமான உண்மை, தமிழிலை பலர் படிக்க ஊக்குவிக்க வேண்டும், அல்லது காலப்போக்கில் எம் பிள்ளைகள் / அடுத்த சந்ததி மறந்துவிடுவார்கள்.

வீட்டில் தமிழில் மட்டும் தான் கதைப்பது. மகளை தமிழ் பாடமும் 12 வகுப்பில் எடுக்க சொல்லியுள்ளேன், மகன்மார் தான் சொன்னது கேட்பதில்லை😢

  • கருத்துக்கள உறவுகள்

நகிதா உங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது.
ஒரு கோணத்தில் எமது தேசியத் தலைவர் பிரிதிபலிக்கின்றார்.
பாராட்டுக்கள்.
நீங்கள் தமிழ் ஆசிரியராக இருந்தபடியால் இருக்கும் இடத்தில் தமிழ் பாடசாலை இல்லாவிட்டால் விரும்பிய பிள்ளைகளை ஒன்று சேர்த்து தமிழை வளர்க்க தொண்டாற்றுங்கள்.

வெளிநாடுகளில் ஆசிரியர்களாக இருக்காதவர்கள் தமிழ் படிப்பிக்க மிகவும் கஸ்டப்படுகிறார்கள்.
சிலவேளைகளில் குழப்பியும் விடுகிறார்கள்.
இது அவர்களை குறை சொல்ல எழுதவில்லை.ஆசிரியர்களாக இருந்தவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் தான்.
நன்றி.

உங்கள் கவிதைகளை எழுத்து நடையிலும் தந்தால் நன்றாக இருக்கும்.
சில இடங்களில் மீண்டும் கேட்கத் தோன்றும் போது அதற்குள் நேரம் போட மனம் வராமல் மிகுதியையும் கேட்டு முடித்து விடுவோம்.எழுத்தில் இருந்தால் பிடிக்கும் இடங்களை திரும்ப திரும்ப கேட்கலாம்.

  • தொடங்கியவர்
14 hours ago, ஈழப்பிரியன் said:

நகிதா உங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது.
ஒரு கோணத்தில் எமது தேசியத் தலைவர் பிரிதிபலிக்கின்றார்.
பாராட்டுக்கள்.
நீங்கள் தமிழ் ஆசிரியராக இருந்தபடியால் இருக்கும் இடத்தில் தமிழ் பாடசாலை இல்லாவிட்டால் விரும்பிய பிள்ளைகளை ஒன்று சேர்த்து தமிழை வளர்க்க தொண்டாற்றுங்கள்.

வெளிநாடுகளில் ஆசிரியர்களாக இருக்காதவர்கள் தமிழ் படிப்பிக்க மிகவும் கஸ்டப்படுகிறார்கள்.
சிலவேளைகளில் குழப்பியும் விடுகிறார்கள்.
இது அவர்களை குறை சொல்ல எழுதவில்லை.ஆசிரியர்களாக இருந்தவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் தான்.
நன்றி.

உங்கள் கவிதைகளை எழுத்து நடையிலும் தந்தால் நன்றாக இருக்கும்.
சில இடங்களில் மீண்டும் கேட்கத் தோன்றும் போது அதற்குள் நேரம் போட மனம் வராமல் மிகுதியையும் கேட்டு முடித்து விடுவோம்.எழுத்தில் இருந்தால் பிடிக்கும் இடங்களை திரும்ப திரும்ப கேட்கலாம்.

எனக்கும் ஆசைதான். ஆனால் நம்மவர்கள் யாரும் குழந்தைகளிற்கு தமிழ் கற்பிக்க அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை...தமிழ் கற்றவர்களையே குறைவாக மதிப்பிடும் எம் தமிழ் சமூகம் பற்றி நினைத்தாலே வருத்தப்படத்தான் தோன்றுகிறது. நான் தமிழ் படித்தேன் என்பதையே பல நேரங்களில் சொல்ல முடிவதில்லை.என் குழந்தைகள் தமிழில் பேசுவதையே இங்கு பலர் ஏளனமாக பார்ப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.தாய்மொழியில் பேசிவது அப்படி ஒரு குற்றமா என்றுதான் எண்ணத்தோன்றும்.என்ன செய்வது நமக்கென்று ஒரு நிலம் இல்லாததால் இதை எல்லாம் கடந்தே ஆக வேண்டும். 

நீங்கள் சொன்ன திருத்தங்களை இனி வரும் காலங்களில் திருத்தி கொள்கிறேன். நன்றி ..ஈழப்புரியன்

 

  • தொடங்கியவர்
22 hours ago, உடையார் said:

நிதர்சனமான உண்மை, தமிழிலை பலர் படிக்க ஊக்குவிக்க வேண்டும், அல்லது காலப்போக்கில் எம் பிள்ளைகள் / அடுத்த சந்ததி மறந்துவிடுவார்கள்.

வீட்டில் தமிழில் மட்டும் தான் கதைப்பது. மகளை தமிழ் பாடமும் 12 வகுப்பில் எடுக்க சொல்லியுள்ளேன், மகன்மார் தான் சொன்னது கேட்பதில்லை😢

எங்கள் வீட்டிலும் அதே நடைமுறைதான்.தாய்மொழியை எப்படியாவது குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.