Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் மிரட்டல்கள் ராஜபக்ச அரசுக்குத் தூசி - விமல் வீரவன்ச.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் மிரட்டல்கள் ராஜபக்ச அரசுக்குத் தூசி - விமல் வீரவன்ச.!

1595727768_vimal.jpg

"தமிழர்கள் மாதிரி சிங்களவர்களையும் முட்டாளாக்கலாம் என்று சம்பந்தன் நினைக்கின்றார். அவரின் வாய்ச்சவடால் சிங்களவர்கள் மத்தியில் எடுபடவே மாட்டாது. அவரின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவேமாட்டோம். அவரின் எச்சரிக்கைகள் அரசுக்குத் தூசி போன்றது." இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

'சமஷ்டியைக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு. தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழர்களை முட்டாளாக்கும் சம்பந்தன், சிங்களவர்களையும் முட்டாளாக்கலாம் என்று நினைக்கின்றார். சம்பந்தனின் வாய்ச்சவடால் எல்லாம் தமிழர்கள் மத்தியில்தான் எடுபடும். அது சிங்களவர்கள் மத்தியில் எடுபடவே மாட்டாது.

அரசியல் தீர்வு கிடைக்க ஆணை தாருங்கள் என்று கூறி தமிழ் மக்களை அன்று தொடக்கம் ஏமாற்றி வாக்குகள் சேகரித்து வரும் சம்பந்தன் தரப்பினர், இன்று சர்வதேசம் தமது பக்கம் என்று கூறி சிங்களவர்களை மிரட்டப் பார்க்கின்றார்.

இந்த மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவேமாட்டோம். சம்பந்தனின் எச்சரிக்கைகள் அரசுக்குத் தூசி.

தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கச் சொல்லி எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவே முடியாது.

புதிய ஆட்சியில் அரசு வழங்கும் பொதுவான தீர்வு நாட்டிலுள்ள சகலருக்கும் உரியதாகவே இருக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/07/26/14857/

இந்த அரசின் உண்மையான பேச்சாளர் இவர்தான். இவர்களது ஆட்சியில் எதையுமே எதிர்பார்க்க முடியாது. வியத்கம ஊடாகவே இவர்கள் எல்லா திட்ட்ங்களையும் நடைமுறைப்படுத்த போகிறார்கள். பொதுவாக அபிவிருத்தி திட்ட்ங்கள் பற்றியதாகவே இருக்கப்போகின்றது. சிங்கள மேலாதிக்கத்துடன் கூடிய திட்ட்ங்களாகவே எல்லாம் இருக்கும். மாகாண சபையைக்குறிய அதிகாரத்தை இந்த அரசு வழங்கினாலே அது பெரிய காரியம். எனவே சமஷடி, வட கிழக்கு இணைப்பு என்பதெல்லாம் அரசியல் பேச்சாக இருக்குமே தவிர நடைமுறை சாத்தியமா என்பது கனவாகத்தான் இருக்கப்போகின்றது. சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் வரைக்கும் இது சாத்தியமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

இந்த அரசின் உண்மையான பேச்சாளர் இவர்தான். இவர்களது ஆட்சியில் எதையுமே எதிர்பார்க்க முடியாது. வியத்கம ஊடாகவே இவர்கள் எல்லா திட்ட்ங்களையும் நடைமுறைப்படுத்த போகிறார்கள். பொதுவாக அபிவிருத்தி திட்ட்ங்கள் பற்றியதாகவே இருக்கப்போகின்றது. சிங்கள மேலாதிக்கத்துடன் கூடிய திட்ட்ங்களாகவே எல்லாம் இருக்கும். மாகாண சபையைக்குறிய அதிகாரத்தை இந்த அரசு வழங்கினாலே அது பெரிய காரியம். எனவே சமஷடி, வட கிழக்கு இணைப்பு என்பதெல்லாம் அரசியல் பேச்சாக இருக்குமே தவிர நடைமுறை சாத்தியமா என்பது கனவாகத்தான் இருக்கப்போகின்றது. சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் வரைக்கும் இது சாத்தியமே இல்லை. 

சீனா கொடுத்த ஆதரவில், நேபாளத்துக்கு வந்த மிடுக்கு, இலங்கைக்கு வரப்போகுது எண்டது தான் இந்த முன்னாள் ஜேவிபி போலி கம்யூனிஸவாதியின் பேச்சு.  

நமக்கு என்ன... இழப்பதற்கு எதுவுமே இல்லை. கோவணத்தையும் கழட்டி கொடுத்து விட்டு போய் கொண்டே இருப்போம்.

கவலை படவேண்டியவர்கள் டெல்லியில் இருப்பவர்கள்.

மீண்டும் புலிகள் போன்ற அமைப்பினை இந்தியா உருவாக்க வேண்டுமாம், சங்கி... ரங்கராஜ் பாண்டே... சாணக்கியா சானல்

உங் கொய்யால.. வாயில நல்லா வருது...

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மீண்டும் புலிகள் போன்ற அமைப்பினை இந்தியா உருவாக்க வேண்டுமாம், சங்கி... ரங்கராஜ் பாண்டே...

இணைப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 17:12, புரட்சிகர தமிழ்தேசியன் said:

"தமிழர்கள் மாதிரி சிங்களவர்களையும் முட்டாளாக்கலாம் என்று சம்பந்தன் நினைக்கின்றார். அவரின் வாய்ச்சவடால் சிங்களவர்கள் மத்தியில் எடுபடவே மாட்டாது. அவரின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவேமாட்டோம். அவரின் எச்சரிக்கைகள் அரசுக்குத் தூசி போன்றது."

அது சம்பந்தனுக்கும் தெரியும். ஆனால் இப்போ எதையாவது சொல்லி  தேர்தலில் வெல்லவேண்டும். எழுபது வருடமாய் சவாரி செய்து விட்டு கடைசி நேரம் கோட்டை விட்டு எப்படி கட்டையில போறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.