Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு

 

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சார்பற்ற செயலகம் உட்பட பல அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணிகள் போன்றன நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  இது நாட்டை இராணுவமயப்படுத்துவதை நோக்கிய ஆபத்தான போக்காகும்.

ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கத்திலுள்ள  பலர்,  உள்நாட்டு யுத்தத்தின் போது யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள்.

சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மாற்றுக்கருத்துடையவர்கள், பொலிஸார், புலனாய்வு அமைப்பினர் மற்றும் அரச ஊடகங்களினால் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தற்போது  அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. எனவே அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை மதிக்குமாறும், பாதுகாக்குமாறும்  ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் இலங்கைக்கு  நிதிவழங்கும் சமூகம்  வேண்டுகோள் விடுக்கவேண்டும்” என அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

  by : Yuganthini

https://athavannews.com/இலங்கை-அரசாங்கத்துக்கு-ச/

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ மயமாக்கல் குறித்து 10 மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை!

sri-lanka-government_800x400-720x400-1.jpg?189db0&189db0

 

இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் தென்படுவதாக 10 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரித்துள்ளதுடன் சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகின்ற கைது, தடுத்துவைப்பு, அச்சுறுத்தல்கள் என்பவற்றை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.

இத்தகைய அச்சநிலை கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து ஆரம்பமானதுடன், 2020ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களிலும் அதன் நிழலை உணரமுடிகிறது என்றும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேவேளை அண்மைக்காலங்களில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அச்சலா செனெவிரத்ன, சுவஸ்திகா அருலிங்கம், ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியன், சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் ஆகியோர் இலக்குவைக்கப்பட்டு அவர்களது தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டமை குறித்த சம்பவங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

https://newuthayan.com/இராணுவ-மயமாக்கல்-குறித்த/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ மயமாக்கலை நோக்கி பயணிக்கும் இலங்கை அரசு! - 10 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை.!

srilankan_army.jpg

இலங்கை அரசு இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படையாகத் தென்படுகின்றன என்று 10 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகின்ற கைது, தடுத்துவைப்பு, அச்சுறுத்தல்கள் என்பவற்றை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த மோசமான அச்சநிலை கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆரம்பமானதுடன், நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் பரப்புரைகளிலும் அதனை உணரமுடிகின்றது என்றும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச யூரர்கள் ஆணைக்கழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை, மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் உள்ளடங்கலாக 10 மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"அனைத்து இலங்கை மக்களினதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

அண்மைக் காலமாக மனித உரிமைகள் பாதுகாப்பில் அடையப்பட்ட சாதக நிலைமைகள் மீண்டும் தலைகீழாவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையின் நட்புறவு நாடுகள், உதவியளிக்கும் சர்வதேச அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.

தற்போதைய அரசில் குறிப்பிடத்தக்களவான சிவில் அமைப்புக்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னர் சிவில் உத்தியோகத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட சில அரச கட்டமைப்புக்களுக்குத் தற்போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று அண்மையில் விசேட ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டதுடன், எந்தவொரு அரச அதிகாரிக்கும் பணிப்புரை விடுக்கின்ற அதிகாரம் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவை நாடு இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணிக்கும் புதிய போக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

அதுமாத்திரமன்றி கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தற்போதைய ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி உள்ளடங்கலாகப் பலர் அரசில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தநிலையில் அதிருப்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், முன்னர் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாகத் தற்போதைய அரசின் விமர்சகர்கள் பொலிஸார், புலனாய்வுப்பிரிவு, அரச சார்பு ஊடகங்கள் என்பவற்றால் இலக்குவைக்கப்படுகின்றார்கள்.

இம்மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் புதிய அரசில் அரச சார்பற்ற அமைப்புக்களின் மீது விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும், குறிப்பாக அவற்றுக்கு வெளிநாடுகளிலிருந்து எவ்வாறு நிதியுதவிகள் கிடைக்கப் பெறுகின்றன என்பது பற்றி ஆராயப்படும் என்றும், அதேவேளை சர்வதேச அமைப்புக்களின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அண்மைக்காலங்களில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அச்சலா செனெவிரத்ன, சுவஸ்திகா அருலிங்கம், ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியன், சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் ஆகியோர் இலக்குவைக்கப்பட்டு அவர்களது தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர்.

ஒரு ஊடகவியலாளர் அல்லது மனித உரிமை ஆர்வலர் மீது நிகழ்த்தப்படுகின்ற தாக்குதல் என்பது தனிநபரொருவர் மீதான தாக்குதல் மாத்திரமல்ல. மாறாக அனைத்து இலங்கையர்களாலும் ஒன்றிணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் என்பவற்றின் மீதும் நிகழ்த்தப்படுகின்ற தாக்குதலாகும்.

எனவே, சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், சட்ட நடவடிக்கைகளில் முறைகேடு, பொலிஸாரின் அதிகாரத்தைப் பிரயோகித்தல் ஆகியவற்றை உடனடியாக இலங்கை அரசு நிறுத்தவேண்டும்.

ரம்ஸி ரஸீக்கும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அரசு தொடர்ந்தும் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மனித உரிமைகளை நிலைநாட்டுமாறு இலங்கையை வலியுறுத்துவது அவசியமாகும்" - என்றுள்ளது.

http://aruvi.com/article/tam/2020/07/29/14995/

இதெல்லாம் இலங்கை அரசுக்கு ஜூஜிப்பி மாதிரி. இலங்கை இப்போது ஒரு முக்கியமான இடத்தில இருக்கிறது. எனவே அமெரிக்கா , சீனா, இந்தியா போன்ற முக்கியநாடுகள் இலங்கை பக்கமாக சாயும் நிலைமை உருவாக்கி இருக்கிறது. எனவே இலங்கை இப்போது இஸ்ரவேலைபோன்று நடக்கப்பார்கின்றது. அதாவது தமிழர் இடங்களில் குடியேற்றங்களை அமைப்பது, சர்வதேச அமைப்புக்களை காணாமல் இருப்பது இப்படியாக நடக்கப்பார்கிறார்கள். இலங்கையையும் , இஸ்ரவேலியையும் ஒப்பிட முடியவிடடாலும் இப்போதைய அரசின் மனநிலை அப்படித்தானே இருக்கிறது. இப்போது அவர்கள் இலங்கை மக்கள் பவுத்த மதத்தை பின்பற்றி வாழ்ந்ததாக கடடப்போகிறார்கள். பின்னர் அவர்கள் சிங்களவர்கள் என்று காட்டிட முயட்சிப்பார்கள். எனவே இந்த அறிக்கை எல்லாம் இலங்கை அரசு கணக்கில் எடுக்காது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.