Jump to content

சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு!

spacer.png

 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைகள் மற்றும் பொதுத் தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் பாதுகாப்பு வளையங்கள் அமைக்க பத்து நாட்கள் கெடு விதித்துள்ளது டிஜிபி அலுவலகம்.

சமீபநாட்களாக தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலையை அவமதித்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெரியாருக்கு காவி சாயம், எம்.ஜி.ஆருக்கு காவித் துண்டு என அணிவிக்கப்பட்டது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

 

இதுபோன்ற அருவருப்பான சம்பவங்கள் நடக்காமல் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை நிலைநாட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்திருக்கிறார். அப்போது, சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறதா என்று கேட்டுள்ளார். கொரோனா காலத்தில் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடுவது சிரமமாக இருக்கும். அதனால் தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கு அரசு செலவில் கூண்டு அமைத்துவிடலாம் என்று ஆலோசனைகளை கூறியுள்ளார்கள் காவல் துறை அதிகாரிகள். இதை முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக உளவுத் துறை அதிகாரிகள் மூலமாகத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் வைத்துள்ள சிலைகள் பட்டியல்களைச் சேகரித்து டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மூன்று நாட்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட, மாநகராட்சி காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர சுற்றறிக்கை வந்துள்ளது. அதில், ‘தங்கள் மாவட்டம், மாநகரில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் இரும்புக் கம்பியால் பத்து நாட்களுக்குள் கூண்டுகள் அமைக்க வேண்டு. பத்து நாட்களுக்குள் இதை முடிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது ஒவ்வொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிலைகளுக்கு இரும்பு கம்பியால் சிறையமைக்க அளவு எடுத்து வருகிறார்கள்.

 

https://minnambalam.com/politics/2020/07/30/11/statues-tamilnadu-will-got-security-edapadi-palanisamy-police

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கு அரசு செலவில் கூண்டு அமைத்துவிடலாம் என்று ஆலோசனைகளை கூறியுள்ளார்கள் காவல் துறை அதிகாரிகள். இதை முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அட ச்சே.. வேலை மினக்கெட்டு இன்னடா கைபுள்ளக்கு வீரம் வந்துடுச்சு .. அதென்ன இரும்பு முடிவு..? படிச்சு வந்தன் பாரு ..

IMG-20200730-124127.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட ச்சே.. வேலை மினக்கெட்டு இன்னடா கைபுள்ளக்கு வீரம் வந்துடுச்சு .. அதென்ன இரும்பு முடிவு..? படிச்சு வந்தன் பாரு ..

IMG-20200730-124127.jpg

 

எனக்கென்னவோ பழைய படம் ஒன்றில் என்.எஸ்.கே வீட்டுக்கு  ஓடு  மாத்தப் போவார், அதுக்கு முன் அவரது நண்பர் அந்த வீட்டு ஓட்டை  கல்லால் எறிந்து உடைத்து வைப்பார். அதுதான் நினைவுக்கு வருது.....!   😎

இரும்பு கம்பி கான்ராக்ட்டில் எவ்வளவு பணம் புழங்கும்.....!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்கள் சிலைகளுக்கு இரும்பு கூண்டு அமைப்பதில் சிக்கல்!

spacer.png

 

தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்குப் பாதுகாப்பு கூண்டுகள் அமைப்பதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், பசும்பொன் முத்துராமலிங்கம், திருவள்ளுவர், விவேகானந்தர், மூப்பனார், கலைஞர் போன்ற தலைவர்களின் சிலைகள், அரசு அனுமதி பெற்றும், அனுமதியில்லாமலும், குக்கிராமங்கள் முதல் மாநகராட்சிகள் வரையில் சொந்த இடங்களிலும், அரசு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருசிலர் சிலையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். பெரியார் சிலையைச் சேதம் செய்வது, செருப்பு மாலை அணிவிப்பது, எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துணியை அணிவிப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கத்தில் சிலர் இவ்வாறு செயல்படுவதால், சிலைகள் அவமதிக்கப்படுவதைத் தவிர்க்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 5,810 சிலைகள் உள்ளது. அதில் 1,915 சிலைகளுக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதால் காவல்துறையினருக்கு மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. போலீஸ் பற்றாக்குறையால், முதல்வர் ஆலோசனைபடி சிலைகளுக்கு அரசு செலவில் இரும்பு கம்பியால் கூண்டுகள் அமைக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர். இதுகுறித்து மின்னம்பலத்தில், சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

முதல்வர் முடிவை அமல்படுத்தி, சிலைகளுக்கு இரும்பு பாதுகாப்பு கூண்டுகள் அமைக்க அளவெடுத்து வருவதை பார்த்த சில கட்சியினர், கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், முக்குலத்தோர் சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது கூண்டுகள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

https://minnambalam.com/public/2020/08/03/37/Problem-in-setting-up-security-cage-for-statues-of-leaders

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.