Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களில் கை வைத்த காடையனில் நடவடிக்கையெடுக்க தயங்குகிறார்களா கொடிகாமம் பொலிசார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சி வரணிப் பகுதியில் வீடு புகுந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொடிகாமம் பொலிஸார் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் நபர் ஒருவர் பொல்லு கோடரியோடு வீடு புகுந்து வீட்டிலிருந்த பெண் ஒருவருக்கும் வயோதிபர் இருவருக்கும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதுடன் வீட்டுப் பொருட்களையும் கோடாரியால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் வைத்தியசாலை சென்ற பொலிஸார் தாக்குதலுக்கு இலக்கான மூவரிடமும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு 10 நாட்கள் கடந்த பின்பும் தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்யாத நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்ட பின்னர் இம்மாதம் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அடுத்தநாள் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவதற்கு முன்னர் இரு தரப்பிடமும் வாக்குமூலம் எடுக்கப்பட்டு 12 ஆம் திகதி நீதிமன்றுக்கு வழக்கு தாக்கல் செய்கிறோம் நீதி மன்றம் வாருங்கள் என பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

12ஆம் திகதி பொலிஸாரோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பு கொண்டு நீதிமன்றம் செல்கிறோம் என சொன்ன போது இன்று போக வேண்டாம் 19 ஆம் திகதி கட்டாயம் செல்லுங்கள் என பொலிஸ் தரப்பால் அறிவிக்கப்பட்டது.

இன்று(19) பாதிக்கப்பட்ட மூவரும் நீதிமன்றம் சென்று சுமார் 5 மணித்தியாலம் காத்திருந்தும் குறித்த சம்பவம் தொடர்பான வழக்குப் பத்திரம் நீதிமன்றுக்கு அனுப்பப்படவில்லை எனவும் தெரிய வந்தது. இதன் பின் இது குறித்து பொலிஸ் நிலையம் சென்று வினவிய போது கடமையில் இருந்தவர்கள் வெளியே சென்று விட்டனர் எனவும் காத்திருக்குமாறும் அங்கு நின்றிருந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

இவ்வாறு கொடிகாமம் பொலிஸார் நீதிக்கு எதிராக குற்றவாளிகளுக்கு அதரவு வழங்கி வருகிறார்களா என பாதிக்கப்பட்ட தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்ட எமக்கு நீதியை பெற்றுத்தருமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

https://www.pagetamil.com/141075/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

தென்மராட்சி வரணிப் பகுதியில் வீடு புகுந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொடிகாமம் பொலிஸார் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கை வைச்சது பெரிய கை எண்டால் பொலிஸ் என்ன பிரதமரே நடவடிக்கை எடுக்க தயங்குவார். 🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளனை  பிடித்து கட்டி வைத்து அடித்தது பிழை என்கிற  ஜனநாயக விரும்பிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று அறிய ஆவல் ?

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் வெற்றிக்கு உழைத்த கையாய் இருக்கலாம், அந்தத் துணிவில் அவரும் கையை நீட்டியிருப்பார்.அவர் மேல் எப்படி நடவடிக்கை எடுப்பது?  இனிமேல் இதுதான் தொடர் கதை. அவர்மேல் கை வைத்தால், இவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். யார் யார்மேல் நடவடிக்கை எடுப்பது? என்பதே இப்போதைய கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்

முழுக் காடைகளிடம் போய் அரைகுறைக்காடைகளைப் பற்றி முறையிட்டு என்ன பயன். இவங்களிலிலையே பலர் பாலியல் வன்முறை தொடர்பில் தண்டிக்கப்பட வேண்டி இருக்க..??!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.