Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியின் கைலாசாவும், ரிசர்வ் வங்கியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியின் கைலாசாவும், ரிசர்வ் வங்கியும்!

spacer.png

 

விநாயகர் சதுர்த்தியான இன்று நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட நாடாகக் கூறப்படும் கைலாசாவின் புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

2010ல் பாலியல் சர்ச்சையில் சிக்கியவர் நித்யானந்தா. தற்போது இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் இருக்கும் குட்டித் தீவான ஈகுவாடரில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் உறுதியான தகவல் அல்ல.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், 40க்கும் மேற்பட்ட விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்ததற்காகக் கர்நாடக உயர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. அவரது சொத்துகளை முடக்க ராம்நகர நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு அவரை விரைவில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நித்திக்கு எதிராக, இண்டர்போல் ப்ளூ கார்னர், கிரீன் கார்னர் என நோட்டீஸ் விடுத்தும், இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

வழக்கு விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும், நித்யானந்தா தினசரி சத்சங்கம் நடத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், அண்மையில் ரிசர்வ் வங்கி தொடங்கவுள்ளதாகவும், விரைவில் கைலாசாவின் நாணயங்களை வெளியிடுவார் என்ற தகவலும் வெளியானது.

அதன்படி விநாயகர் சதுர்த்தியான இன்று நித்யானந்தா கைலாசாவின் நாணயங்களை வெளியிட்டுள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளைக் கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனாவால், இந்தியாவில் பொதுக் கொண்டாட்டங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் நித்தி, கைலாசாவின் ரிசர்வ் வங்கியைத் தொடங்கி வைத்துக் கொண்டாடி வருகிறார். கைலாசாவின் ரிசர்வ் வங்கி வாட்டிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு கட்டமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.கைலாசாவின் பிரதமர் என தன்னைத் தானே அறிவித்து கொண்டுள்ளார் நித்தி.

spacer.png

www.kailaasa.org என்ற வலைதளப் பக்க தகவலின் படி, கைலாசா என்பது, தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை நடைமுறைப்படுத்தும் உரிமையை இழந்து வெளியேற்றப்பட்ட மக்கள் குழுவால் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. அதோடு தனது தேசத்துக்காகவும், புதிதாகத் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கிக்காகவும், 300 பக்க "பொருளாதாரக் கொள்கையை" தயாரித்துள்ளாராம் நித்தி.

மேலும் அந்த வலைதளப்பக்கத்தில், “கைலாசா என்பது ஒரு "E-nation" " ஆகும், இது 100 மில்லியன் "ஆதி ஷைவர்களும், இரண்டு பில்லியன் இந்துக்களைப் பயிற்றுவிக்கும்" மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகள் பயன்படுத்தப்படும். இந்து மதத்தைச் சார்ந்த நாடு் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாச குடியரசு என்று கூறப்படும் இந்த நாட்டுக்காகத் தேசியக் கொடி, தேசிய விலங்காகக் காளை (நந்தி), தேசிய மலராக தாமரை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதாம். ஒரு அமைச்சகமும், 16 துறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வீட்டுவசதி, கருவூலம், மனித சேவைகள், கல்வி, அறிவொளி பெற்ற நாகரிகம், தகவல் ஒளிபரப்பு, சுகாதாரம், வேத அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உலகளாவிய தகவல் தொடர்பு, மதம் மற்றும் வழிபாடு, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள், தேசிய காப்பகங்கள் மற்றும் உள்துறை ஆகிய துறைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக வலைதள பக்கத்தில் இருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், இரண்டு பல்கலைக் கழகங்கள், குருகுலம். சுகாதார நிலையம் போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளதாம். கைலாசாவின் நித்யானந்தா டைம்ஸ்', 'கைலாசாவின் குளோபல் டைம்ஸ்', மற்றும் 'கைலாசா டிவி' போன்ற சேனல்களும் இயக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

 

https://minnambalam.com/public/2020/08/22/28/nithyananda-reserve-bank-of-kailasa-fugitive-rape-accused

  • கருத்துக்கள உறவுகள்

இவரின்ர பாங்கில மோட்கேச் எடுக்கலாமோ, கிறடிட் காட்டெல்லாம் அப்பிளைபண்ணலாமா 😤

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 56 சைவ நாடுகளில் நித்தி.. சிறீலங்கா.. லங்காபுரியையும் உள்ளடக்கி விட்டார்.

கோத்தா.. மகிந்த பாடு திண்டாட்டம் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசாவில் இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன் – ஹோட்டல் அதிபருக்கு நித்யானந்தா பதில் !!-

1598110203_nithyanand.jpg?impolicy=websi

சென்னை: கைலாசா நாடு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மதுரை ஹோட்டல் உரிமையாளருக்கும், திருச்சி ஜவுளிக்கடை உரிமையாளருக்கும் முன்னுரிமை  வழங்கப்படும் என்று கூறியுள்ளார் நித்யானந்தா. அதே போல கைலாசா நாட்டின் தர்மசாஸ்திரம் எழுத நல்ல ஆலோசனைகள் சொல்பவர்களுக்கு கைலாசா ரத்னா விருதும்  100 கைலாசா பொற்காசுகளும் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் நித்யானந்தா.

நாணய வெளியீடு

இந்தியாவில் இருந்து தலைமறைவனதாக கூறப்படும் நித்யானந்தா இப்போது கைலாசா என்ற நாட்டிற்கு ராஜாவாக இருக்கிறார். தினசரியும் ஒரு வீடியோ என்று யுட்யூப் மூலம் அப்லோடு செய்கிறார். விநாயகர் சதுர்த்தி நாளில் கைலாசா நாட்டின் நாணயங்களையும் அறிமுகம் செய்தார்.

கால் காசு முதல் பத்து காசு வரை அறிமுகம் செய்துள்ள நித்யானந்தா 2 கிராம் தங்கம், 5 கிராம் தங்கம் தொடங்கி 116.638038 கிராம் எடை கொண்ட தங்கம் வரை காசுகளை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏன்  கைலாசா நாடு ஆரம்பித்தேன். அதில் என்னென்ன சிறப்பம்சம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.


இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டேன்

எனக்கு தெரிந்ததெல்லாம் மீனாட்சிதான் அம்மா மீனாட்சி மதுரை மீனட்சிதான். அவள் கொடுத்த அருளும் தீர்வும்தான் இந்த கைலாசம்.

என்னிடம் இருந்து என்னிட அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. நான் இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டேன் வேறு வழியில்லாமல் நான் இந்த கைலாயத்தை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இந்து பாராளுமன்றம்
ஜனவரிக்குள் அமைப்பு

இந்து பாராளுமன்றத்தை நிறுவி இந்து மதத்தின் நிர்வாகங்களையும் மதம் சார்ந்த நிர்வாகங்கள் நிர்ணயங்கள் கருத்துக்களை தொகுத்து உலகத்திற்கான மாதிரி அரசை உருவாக்குவோம். அடுத்த ஆறு மாதங்கள் அந்த வேலைகள் நடைபெறும். ஜனவரிக்குள் முடித்து விட வேண்டும். சிவ ராத்திரிக்குள்  முழு வரைபும் மாதிரியும் வெளியிடப்படும்.


விருதும் 
100 பொற்காசுகள் பரிசும் 

பரமசிவன் பேரருளால் இந்த திட்டத்திலும் வெற்றியடைவோம். இப்போது பார்வையாளர்களாக இருப்பவர்கள் பொருளாதார கொள்கை சார்ந்தோ, பாராளுமன்றம் சார்பாக கருத்துக்களை கூறுங்கள் வரவேற்கிறோம். உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்களின் பெயரை குறிப்பிட்டு எங்களின் தர்ம சாஸ்திரத்தின் பாகமாக மாற்றிக்கொள்கிறோம். contact @kailasa.org என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம். நல்ல ஆலோசனைகள் சொல்பவர்களுக்கு கைலாசா ரத்ன விருதும் 100 பொற்காசுகளும் பரிசளிக்கப்படும்.

இலவச இ பாஸ்போர்ட்

கைலாச நாட்டிற்கான இ பாஸ்போர்ட், இ சிட்டிசன்ஷிப் அனைவருக்கும் வழங்குகின்றோம். இ சிட்டிசன் ஷிப் வேண்டுமென்று யார் நினைத்தாலும் அப்ளை பண்ணலாம். கைலாசத்தை உருவாக்கும் முயற்சியில் உதவும் அனைவருக்கும் நன்றி என்று சொன்ன நித்யானந்தா, கைலாசம் எங்கே இருக்கிறது என்று கூடிய விரைவில் சொல்வேன் என்றும் சொல்லியிருந்தார்.

திருவண்ணாமலை  , மதுரை திருச்சிகாரர்களுக்கு முன்னுரிமை

இந்த நிலையில்தான் கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதி மற்றும் இடம் கேட்டு லெட்டர் போட்டிருந்தார் மதுரை சார்ந்த ஹோட்டல் அதிபர். அதற்கு பதில் சொல்லியிருக்கும் நித்யானந்தா. மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மதுரை ஓட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சி ஜவுளிக்கடை அதிபர் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். மேலும், தனது சொத்துக்களை மதுரை, திருவண்ணாமலைக்காக எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/nithyananda-reply-to-hotel-owner-priority-for-madurai-trichy-shop-owners-395422.html

டிஸ்கி :

அப்புறம் என்ன நல்ல ( ?) ஆலோசனைகளை சொல்லுங்க .. சுவாமிஜியின்ர கையால் கைலாச ரத்னா விருதையும் , 100 பொற்காசுகளையும் அள்ளுங்க..👍

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.