Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவிகளில் மாற்றமில்லை – உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA-1.jpg

பதவிகளில் மாற்றமில்லை – உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அந்தப் பதவிக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டுள்ளாரென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, கட்சியின் கொறடா பதவிக்கு புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த செய்தியை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில், பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதாகும் என தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெறும்போது நாடாளுமன்றக் குழுவின் தலைவர் (கொறடா) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஆகிய பதவிகளுக்குரிய நியமனங்கள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போது வரையில் இந்தப் பதவிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என கூட்டமைப்பு தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.

http://athavannews.com/பதவிகளில்-மாற்றமில்லை-உ/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் தொடரும் இழுபறி ; நாளை ஆரம்பமாகும் அமர்விலும் பாராளுமன்றக்குழு கூடாது !

 

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் மற்றும் கொறடா ஆகிய பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நாளைதினம் ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி உத்தியோக பூர்வமான தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும், நாளை ஆரம்பமாகும் இருநாள் பாராளுமன்ற அமர்வில் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்றக்குழுவின் தலைவருமான இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தனும் பங்கேற்காமையினால் பாராளுமன்றக் குழு கூட்டம் நடைபெறமாட்டாது என்று தெரியவந்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு மாவட்டத்தில் காணப்படும் பணிச்சுமை காரணமாகவும், சித்தார்த்தன் தனிப்பட்ட காரணங்களுக்காவும் இந்த இரு நாள் அமர்வில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தின்போது கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்திலிருந்து மீளப்பெறுதென்றும் அதற்கு ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பது என்றும், பாராளுமன்றக்குழுவின் கொறடா பதவியை யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடத்திலிருந்து பெற்று புளொட் தலைவர் சித்தார்த்தனிடத்தில் ஒப்படைப்பதென்றும் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டதாக பங்காளிக்கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு இந்த விடயங்கள் பற்றி உத்தியோக பூர்வமாக எந்த அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என்றும், ஊடகப்பேச்சாளர் மற்றும் கொறடா ஆகிய இரண்டு பதவிகளையும் பங்காளிக் கட்சிகளிடத்தில் வழங்குவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். 

இந்நிலையில் நாளை 27 ஆம் திகதி அல்லது 28 ஆம் திகதி நடைபெறும் இருநாள் பாராளுமன்ற அமர்வில் ஒரு நாளில் பாராளுமன்ற குழுவினை கூட்டி இந்த விடயங்களுக்குரிய தீர்வினை காண்பதாக கூட்டமைப்பினுள் முனைப்புக்கள் செய்யப்பட்டிருந்தபோதும் தற்போது அச்செயற்பாடுகளில் தொடர்ந்தும் இழுபறியான நிலைமைகளே நீடிக்கின்றன. 
 

https://www.virakesari.lk/article/88760

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் மோதல்.! பங்காளிக் கட்சிகள் வெளியேறும் அறிகுறி.!!

z_p01-Full-TNA-2.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெல ோ மற்றும் புளொட் ஆகிய பங்களிக்கட்சிகளுக்கு தரப்படாமல் அந்தப் பதவிகள் மீளவும் சுமந்திரனுக்கும் சிறி தரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது.

– இவ்வாறு புளொட் கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் ரெலோவின் லண்டன் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் சாம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி தன்னை வளர்த்து வருகின்றது.எனவே, இலங்கை தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான முடிவுகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

சுமந்திரனின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே தற்போதைய பாரிய பின்னடைவுக்குக் காரணம்.

எனவே, கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெலோ மற்றும் புளொட்டுக்குத் தரப்படாமல் மீளவும் சுமந்திரனுக்கு, சிறிதரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்கி னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார்
அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது – என்றனர்.

https://puthusudar.lk/2020/08/27/கூட்டமைப்புக்குள்-மோதல்/

12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கூட்டமைப்புக்குள் மோதல்.! பங்காளிக் கட்சிகள் வெளியேறும் அறிகுறி.!!

z_p01-Full-TNA-2.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெல ோ மற்றும் புளொட் ஆகிய பங்களிக்கட்சிகளுக்கு தரப்படாமல் அந்தப் பதவிகள் மீளவும் சுமந்திரனுக்கும் சிறி தரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது.

– இவ்வாறு புளொட் கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் ரெலோவின் லண்டன் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் சாம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி தன்னை வளர்த்து வருகின்றது.எனவே, இலங்கை தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான முடிவுகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

சுமந்திரனின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே தற்போதைய பாரிய பின்னடைவுக்குக் காரணம்.

எனவே, கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியும் கொறடா பதவியும் ரெலோ மற்றும் புளொட்டுக்குத் தரப்படாமல் மீளவும் சுமந்திரனுக்கு, சிறிதரனுக்கும் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டு கட்சிகளும் (ரெலோ, புளொட்) நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கவோ அல்லது விக்கி னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார்
அணிகளுடன் இணையவோ வாய்ப்புள்ளது – என்றனர்.

https://puthusudar.lk/2020/08/27/கூட்டமைப்புக்குள்-மோதல்/

நிச்சயமாக வெளியேற மாடடார்கள். அப்படி வெளியேறினால் அடைக்கலத்தின் இறுதி பாராளுமன்ற பங்களிப்பு இதுவாகத்தான் இருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.