Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.ம.மு. உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம்?- வெளியான தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.ம.மு. உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம்?- வெளியான தகவல்

 

Vishvalingam-Manivannan.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளருமாக இருந்த வி.மணிவண்ணனை பதவிகளில் இருந்து நீக்குவதாக கட்சியின் மத்திய குழு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூம் செயலி ஊடாக கூடி தீர்மானம் எடுத்தது.

தீர்மானம் எடுக்கப்பட்டு இரு தினங்களுக்கு பின்னரே தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால் உத்தியோக பூர்வமாக கடிதம் மூலம் தமது தீர்மானம் குறித்து மணிவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டது.

கட்சியின் பதவிகளில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டமை தொடர்பாக கடும் சர்ச்சைகள் எழுந்தன. மணிவண்ணனுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் குரல் கொடுத்தனர்.

இதனால், கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலைமை தோன்றிய போதிலும் பலரும் கட்சி பிளவுபடாது ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என விரும்பி தலைவருடன் பேச்சுக்களை நடத்திய போதிலும் , கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எந்த சமரசத்திற்கும் உடன்படாத நிலையில் சர்ச்சை நீடித்தது.

இந்நிலையில், கடந்த 22ஆம் திகதி மணிவண்ணன் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார். அதில், “எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது மீண்டும் மத்திய குழு சூம் செயலி ஊடாக கூடி மணிவண்ணனை தற்காலிகமாக உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இதேவேளை, மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் உள்ளூராட்சி உறுப்பினர்களை பதவி விலகுமாறும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக நேற்றைய தினம் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.

எனினும், உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக தனக்கு உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை என சட்டத்தரணி வி.மணிவண்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்தார்.

    by : Litharsan

http://athavannews.com/த-தே-ம-மு-உறுப்புரிமையில்/

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் விவகாரம் கொள்கை சார்ந்த பிரச்சினை, மத்திய குழு இறுதி முடிவை எடுக்கும்; கஜேந்திரகுமார் பகிரங்கம்

August 29, 2020

%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-00.
 

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் விவகாரம் கொள்கை சார்ந்த ஒரு பிரச்சினையாகும். இது குறித்து மணிவண்ணனுக்கு நாம் அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். அதனை மத்திய குழு பரிசீலனை செய்து தமது முடிவை அறிவிக்கும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பது எமது முடிவு. அதன் மூலமாக பேரம் பேச முடியும் என்பது எமது நிலைப்பாடு. எமது கொள்கைகளை அவர் ஏற்கவில்லையெனில், அவர் அதற்கு ஏற்ற ஒரு கட்சியில் இணைந்துகொள்ளலாம். கொள்கை விடயங்களில் நாம் விட்டுக்கொடுக்கப்போவதில்லை” எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

 

“இது தொடர்பில் அவருக்கு நாம் அனுப்பிய கடிதத்துக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். அதனை எமது மத்தியகுழு இரு நாட்களுக்கு முன்னர் பரிசீலனை செய்யவிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதனைச் செய்ய முடியவில்லை. விரைவில் அதனையிட்டு ஆராய்ந்து எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
 

 

http://thinakkural.lk/article/65120

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்திரிகையாளர்களுக்கு ஏன் இந்த அவசர வியாபார புத்தி? தகவல்களை அவர்களே வெளியிடும் வரை???

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

மணிவண்ணன் விவகாரம் கொள்கை சார்ந்த பிரச்சினை, மத்திய குழு இறுதி முடிவை எடுக்கும்; கஜேந்திரகுமார் பகிரங்கம்

August 29, 2020

 

நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பது எமது முடிவு. அதன் மூலமாக பேரம் பேச முடியும் என்பது எமது நிலைப்பாடு. எமது கொள்கைகளை அவர் ஏற்கவில்லையெனில், அவர் அதற்கு ஏற்ற ஒரு கட்சியில் இணைந்துகொள்ளலாம். கொள்கை விடயங்களில் நாம் விட்டுக்கொடுக்கப்போவதில்லை” எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/65120

2020 பொதுத்தேர்தல் முடிந்து 3 நாட்களில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்ததா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இந்த பத்திரிகையாளர்களுக்கு ஏன் இந்த அவசர வியாபார புத்தி? தகவல்களை அவர்களே வெளியிடும் வரை???

அண்ணே,

பத்திரிகை என்றால் செய்தி சேகரித்து போடுறவைதானே.

அவையா விடுகிற அறிக்கைய போடுறெண்டா நோட்டீஸ் போர்ட் எல்லோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அண்ணே,

பத்திரிகை என்றால் செய்தி சேகரித்து போடுறவைதானே.

அவையா விடுகிற அறிக்கைய போடுறெண்டா நோட்டீஸ் போர்ட் எல்லோ.

த.தே.மு செய்தியில் இருப்பதால்  நாம் மேற்கத்தைய பாணியில் பத்திரிகைகள் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்! த.தே.கூ என்றால் தெரு முடக்கில் கமெராவுக்கு பின்னால் நின்று "டே கள்ளா!" என்று கத்துவதே உரிய பாணி என்று மகிழ்ச்சி கொள்வோம்! அப்டேற் செய்து கொள்ளுங்க புறோ!😎

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

த.தே.மு செய்தியில் இருப்பதால்  நாம் மேற்கத்தைய பாணியில் பத்திரிகைகள் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்! த.தே.கூ என்றால் தெரு முடக்கில் கமெராவுக்கு பின்னால் நின்று "டே கள்ளா!" என்று கத்துவதே உரிய பாணி என்று மகிழ்ச்சி கொள்வோம்! அப்டேற் செய்து கொள்ளுங்க புறோ!😎

அங்கால பேஜ் தமிழ் வேட்டி உரிவு என்று தலையங்கம் போடுது🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அண்ணே,

பத்திரிகை என்றால் செய்தி சேகரித்து போடுறவைதானே.

அவையா விடுகிற அறிக்கைய போடுறெண்டா நோட்டீஸ் போர்ட் எல்லோ.

அறியமுடிகிறது தெரியவருகிறது என்பதெல்லாம் நம்பகமான செய்தியா? என்பதே எனது கேள்வி. இந்த கேள்வி எனக்கு அரசியல் சாயம் குத்தும் அளவுக்கு தப்பானது அல்லது நியாயமற்றது என்பதை இப்போது பார்க்கும் போது இது போன்ற செய்திகளுக்கும் படித்த மட்டத்திலும் வாடிக்கையாளர்கள் இருப்பது தெரிந்தது

  • கருத்துக்கள உறவுகள்

தமது கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் 6 பேரை பதவி நீக்குவது எப்படி.? என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆலோசனை..

JMCNEE.jpg 

யாழ்.மாநகரசபை உறுப்பினர்களாக உள்ள தமது கட்சி சார்ந்த 6 பேரை பதவி நீக்கம் செய்வதற்கு வழி என்ன.? என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆலோசனை கேட்டுள்ளது. 

மாநகர சபைத் தேர்தலில் கட்சியின் சார்பில் நேரடியாக வட்டாரங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த 6 உறுப்பினர்களையும் உறுப்பினர்களின் சம்மதம் இன்றி கட்சியாக வெளியேற்றுவதற்கான நடைமுறை என்ன.? நீக்கும் அதிகாரம் கட்சிக்கு உண்டா?  எந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களை பதவி நீக்க முடியும் என்பது தொடர்பிலேயே இந்த ஆலோசணை பெறப்பட்டுள்ளது.

ஒரு உறுப்பினர் பதவியானது அவரது சபை அங்கத்துவத்தை இழப்பது பதவி விலகல் மூலம், அல்லது நீதி மன்ற உத்தரவின் பெயரில், அல்லது கட்சியின் உறுப்புறுமை முற்றாக இழப்பதன் மூலம் மட்டுமே என்ற ஆலோசணை கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில. அக் கட்சியின் தலமைக்கும் மணிவண்ணன் தலமையிலான அணிக்கும் இடையிலான முறுகல் உச்சமடைந்துள்ள நிலையில் மணிவண்ணன் சார்பான கட்சி முக்கியஸ்தர்களை களை எடுக்கும் பணியும் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளி வந்த நிலையில் முதல் கட்டமாக மாநகர சபை மீது முன்னணி கவனம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் முன்னணிக்கு 13 உறுப்பினர்கள் கிடைத்த நிலையில் ஒருவர் நீதிமன்ற கட்டளையின் பெயரில் சபைக்கு சமூகமளிக்க முடியாது. 

எஞ்சிய 12 பேரில் நால்வர் மட்டுமே கஜேந்திரன் சார்பு அணிக்கும் எஞ்சிய 8 பேரும் மணிவண்ணனிற்கு சார்பாகவுமே உள்ள நிலையில் அதில் பட்டியல் மூலம் தேர்வான இருவரையும் பதவி விலகுமாறு கட்சி ஏற்கனவே தெரிவித்து விட்டது.

எஞ்சிய 6 பேரையும் பதவி விலக்குவதற்கு வழி தேடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் முன்னணியின் 8 பேர் கொண்ட அணியில் உள்ள ஒருவரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது மாவட்டச் செயலகத்தில் இதற்கான ஆலோசணை பெற்றது தொடர்பில் நாமும் அறிந்து கொண்டோம்.

அது மட்டுமன்றி கட்சிக்காக பாடுபட்ட எம்மை ஈ.பீ.டீ.பியில. இணையுமாறும் கூறியுள்ளனர்.கட்சியில் இருப்பதா அல்லது இல்லையா என்பதனை வேண்டுமானால் தலமை முடிவு செய்யலாம் ஆனால் எங்கிருந்து செயல்பட வேண்டும் என்பதனை முடிவு செய்யும் அதிகாரம் எமக்கு மட்டுமே உண்டு அது தலமைக்கு கிடையாது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும் என்றார். 

https://jaffnazone.com/news/20133

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் என்ற தனிமனிதனின் பிரச்சினை இல்லை. பாரிய பிளவாகத்தான் இருக்கின்றது! கஜன்ஸ் அடுத்த தேர்தலில் மட்டும் பாராளுமன்றக் கதிரைகளைச் சூடாக்கலாம். பிளேன் ஓடினால் ஜெனீவாவுக்கும், பிற ஐரோப்பிய நகரங்களுக்கும் பறந்தும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அறியமுடிகிறது தெரியவருகிறது என்பதெல்லாம் நம்பகமான செய்தியா? என்பதே எனது கேள்வி. இந்த கேள்வி எனக்கு அரசியல் சாயம் குத்தும் அளவுக்கு தப்பானது அல்லது நியாயமற்றது என்பதை இப்போது பார்க்கும் போது இது போன்ற செய்திகளுக்கும் படித்த மட்டத்திலும் வாடிக்கையாளர்கள் இருப்பது தெரிந்தது

அண்ணை,

நான் சொல்ல வந்தது வேற விசயம்.  படித்த, படிக்காத என்பதை பற்றி அல்ல.

பத்திரிகை என்றால் - உள்ள என்ன நடக்குது என்பதை தமது மூலங்களிடம் இருந்து பெற்று அதை செய்தியாக போடுவதுதானே வழமை?

இப்ப தமிழரசின் செயற்குழுவுக்கு பிறகு மாவை சொன்னதையே பேஜ்தமிழ் போடுது?

இல்லயே- உள்ளே கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை உள்ளே  இருந்து பார்த்த மாதிரிதானே போடுது?

ஆனால் உலகமெங்கும் இதைதான் பத்திரிகைகள் செய்வது அண்ணை. செய்தி என்பது ஒருவர் கொடுக்கும் அறிக்கையை போடுவதல்ல. உண்மையை தேடி எடுத்து போடுவது.

இதில் பிழை இல்லை (பேஜ்தமிழிலும், தினகுரலிலும்).

ஆனால் என்ன - வேட்டி உரியாமல் -வேட்டி உரிவு என்று எழுதுவது பொய் செய்தி. 

அது ஒரு உவமானம் என்றால் மிகவும் கீழ்தரமான உவமானம்.

1 hour ago, கிருபன் said:

மணிவண்ணன் என்ற தனிமனிதனின் பிரச்சினை இல்லை. பாரிய பிளவாகத்தான் இருக்கின்றது! கஜன்ஸ் அடுத்த தேர்தலில் மட்டும் பாராளுமன்றக் கதிரைகளைச் சூடாக்கலாம். பிளேன் ஓடினால் ஜெனீவாவுக்கும், பிற ஐரோப்பிய நகரங்களுக்கும் பறந்தும் வரலாம்.

நான் அறிந்த மட்டில் 20% மணியோட.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அண்ணை,

அது ஒரு உவமானம் என்றால் மிகவும் கீழ்தரமான உவமானம்.

நானும் இப்படி தான் எழுத நினைத்தேன். 

வேட்டியை உருவுதல் என்பது பதவியை பறித்தல் என்பதாக இருந்தாலும் கீழ்த்தரமான உவமானம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

நானும் இப்படி தான் எழுத நினைத்தேன். 

வேட்டியை உருவுதல் என்பது பதவியை பறித்தல் என்பதாக இருந்தாலும் கீழ்த்தரமான உவமானம் தான்.

பதவியை பறிக்கவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அறியமுடிகிறது தெரியவருகிறது என்பதெல்லாம் நம்பகமான செய்தியா? என்பதே எனது கேள்வி. இந்த கேள்வி எனக்கு அரசியல் சாயம் குத்தும் அளவுக்கு தப்பானது அல்லது நியாயமற்றது என்பதை இப்போது பார்க்கும் போது இது போன்ற செய்திகளுக்கும் படித்த மட்டத்திலும் வாடிக்கையாளர்கள் இருப்பது தெரிந்தது

விசுகர், இதில் அரசியல் சாயம் ஒன்றும் இல்லையோ? பல மாதங்கள் முன்பு நடந்த ஜனாதிபதி தேர்தல் குறித்த மணியின் அபிப்பிராயம் அவரை வேட்பாளராக நிறுத்தும் போது தெரியாதோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.