Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்டொனால் சிக்கனாய்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காபன்

இரு ஒட்சிசன்

துணை சேர

ஒரு மூலக்கூறாகி

அந்தரிக்கும் வழியில்

இலை வாய் வசம்

அகப்பட்டு

பச்சைய உருமணியின்

பஞ்சணையில்

தண்ணியடித்து

தான் கிடக்க..

சூரியக் கதிரின்

நீல சிவப்பு விளக்குகள்

ஊக்கமூட்ட

தாக்கம் நடக்க

நிலை குலைந்து

குளுக்கோசானது..!

குளுக்கோசும்

சும்மா கிடக்காமல்

இணைந்து சுருண்டு

மாப்பொருளாகி

கலக்கிட்டங்கியில்

சேமிக்கப்பட..

உணவுச்சங்கிலியில்

காத்திருந்த

சேவலும் பேடும்

காதல் கொண்டு

களித்திருந்த வேளையில்

களைப்பு மிகுதியில்

பசியெடுக்க

தானியமாய்

கொத்தி

உண்டு மகிழ்ந்தது..!

சேவலின்

உணவுக்கால்வாயில்

நொதியப் பீரங்கிகள்

கொண்டு

உடைபட்டு

அகத்துறிஞ்சப்பட

குருதியில் அடைக்கப்பட்டு

ஈரலுக்குள் கடத்தப்பட

அங்கு

புரதமாய்

புரட்டப்பட்டு

புதிய

கலமதை

ஆக்கிய வேளை

மக்டொனால்சில்

சிக்கன்

பெரியலாகி

விற்கப்பட்டது..!

ஈழத்தில்

சிங்களவன் கொடுமை

தாங்காது

லண்டனில்

அகதியாகி

"ரெஸ்கோ"வில்

மாரடிக்கும்

தாய் நாட்டை மறந்த

மானங்கெட்ட

தமிழன் ஒருவன்...

கிழக்கு ஐரோப்பிய

குமரி ஒருத்தியை

"விசா"வுக்காய்

காதலிச்சு

கரங்கோர்க்க...

அவளைக்

குசிப்படுத்தி

கும்மாளம் அடிக்க..

அமர்ந்த

மக்டொனால்சில்

உண்ட சிக்கனில்

அகப்பட்டு

அவனுடலில் நுழைந்த

போது...

மீண்டும்

உணவுக்கால்வாயில்

அடைபட்டு

உடைக்கப்பட்டு

அமினோஅமிலமாக..

அதுவும் மிதமிஞ்ச

ஈரலில்

சிறை வைச்சு

சித்திரவதை செய்யப்பட

உருமாறி

"யூரியா"வாகி

அவன் "யூரினில்" கலந்து

கழிக்கப்பட..

மனிதன் செய்த

திருக்கூத்தால்

சூடாகிப் போன பூமியின்

சூடு தாங்காது

உடைபட்டேன்

மீளவும்

காபன்

இரு ஒட்சிசன்

சேர்..

காபனீரொக்சைட்டாயும்

அமோனியாவாயும்..!

இதுவே

எனக்கு

வாழ்க்கைச் சக்கரமாக

பூமி இயங்குது

அந்தரத்தில்

சூரிய சக்தி

கொண்டு..!

ஆங்கே

உயிரும் இயங்குது

இரசாயன உடல் கொண்டு..!

மனிதர் தாம்

இவையுணரா

மமதையில்

போதையில் வாழ்கிறார்..

உண்மைகள் கண்டறிந்தும்

உணர மறுக்கும்

ஜடங்களாய்..!

படித்தும்

படியாத

மூடராய்

தாம் தாம்

பெரிதென்ற

தலைக்கனத்தில்..!

நிலையில்லா

பல நிலைகளில்

அவர்கள் ஓர்

இடைநிலை..!

அழிவுக்காய்

காத்திருக்கும் நிலை..!

Edited by nedukkalapoovan

காதலுக்காக ஆயிரக்கணக்கில் பொய்களை கவிதைகளாய் குப்பை கொட்டுபவர்கள் மத்தியில் நெடுக்ஸின் கவிதை உண்மையை உரைத்ததோடு சிந்திக்கவும் வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்காக ஆயிரக்கணக்கில் பொய்களை கவிதைகளாய் குப்பை கொட்டுபவர்கள் மத்தியில் நெடுக்ஸின் கவிதை உண்மையை உரைத்ததோடு சிந்திக்கவும் வைக்கிறது.

வாழ்த்துக்கள்.

இதே இதே.. இதே தான்.. சிந்திக்கவும் வைத்தது...!

லீசா நீங்கள் நல்ல ரசிகன்..! :P

மாணிக்கவாசகரின் "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி..." என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து சுட்டிருப்பாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்கவாசகரின் "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி..." என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து சுட்டிருப்பாரோ?

சத்தியமா.. வியாசனின் ( புதுவையின்) கவிதைகள் தவிர பாடப்புத்தகத்தில் படித்த மரபுக் கவிதைகள் தவிர.. அங்கும் இங்கொன்றுமாய் வாசித்த கவிதைகள் தவிர நாம எந்தத் தொகுப்பும் படிக்கவும் இல்ல சுடவும் இல்ல..! நம்ம பச்சைப்படையணியை உருவாக்கின பின்னர்.. சுயமா யோசிச்சு.. எழுதினது..! :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்கவாசகரின் "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி..." என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து சுட்டிருப்பாரோ?

சே..சே இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா. கவிஞருக்கு இயற்கையிலே கவிதை ஞானம் அதிகம்.

நெடுக்காலபோவான்,

கவிதை அந்தமாதிரி இருக்கு, சூப்பரோ சூப்பர்...

நான் கடைசியாக கிருபன்ஸ் ஒட்டிய பேராசிரியர் சிவசேகரத்தின் எயார்போர்ட் கவிதை ஒன்றைப் பார்த்தபின் இப்போதுதான் இன்னொரு மிக நல்ல தரமான கவிதையை வாசித்துள்ளேன்..

உங்கள் கற்பனை மிகநன்றாக இருக்கின்றது...

நீங்கள் க.பொ.உ தரத்தில் உயிரியல் பிரிவில் படித்திருப்பீர்கள் போல இருக்கின்றது....

நான் இந்த ஸ் ரீமில் படித்ததால் இந்தக் கவிதையை இன்னும் விரும்பி இரசிக்கக்கூடியதாக இருந்தது....

இதை கொழும்பில் விலங்கியல் படிப்பிக்கும் நாகநாதன் மாஸ்டருக்கு அனுப்பிவைத்தால் மிகவும் சந்தோசப்படுவார்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

கவிதை அந்தமாதிரி இருக்கு, சூப்பரோ சூப்பர்...

நான் கடைசியாக கிருபன்ஸ் ஒட்டிய பேராசிரியர் சிவசேகரத்தின் எயார்போர்ட் கவிதை ஒன்றைப் பார்த்தபின் இப்போதுதான் இன்னொரு மிக நல்ல தரமான கவிதையை வாசித்துள்ளேன்..

உங்கள் கற்பனை மிகநன்றாக இருக்கின்றது...

நீங்கள் க.பொ.உ தரத்தில் உயிரியல் பிரிவில் படித்திருப்பீர்கள் போல இருக்கின்றது....

நான் இந்த ஸ் ரீமில் படித்ததால் இந்தக் கவிதையை இன்னும் விரும்பி இரசிக்கக்கூடியதாக இருந்தது....

இதை கொழும்பில் விலங்கியல் படிப்பிக்கும் நாகநாதன் மாஸ்டருக்கு அனுப்பிவைத்தால் மிகவும் சந்தோசப்படுவார்... :lol:

நீங்கள் டாக்டரா.. உயிரியல் படிச்சிருக்கிறீங்க.. அதுவும் சென் ஜோன்ஸ் கொலிச்சில...!

நாகநாதன் சேர் ஒரு நல்ல தமிழ் பேச்சாளனும் கூட..! அவரின் பட்டிமன்றப் பேச்சை யாழ் நகரில் ஒரு நிகழ்வின் போது சிறுவயதில் கேட்டிருக்கிறேன்..! அவரின் பல்லாயிரம் மாணவர்களில் யானும் ஒருவன்..! :P

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவான்!

உங்கள் ஒவ்வொரு கவிதைகளும் தனிரகம்.

உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.

உங்கள் கவிதைகளுக்கும் நிகர் உங்கள் கவிதைகள் தான்.

நவீன சிந்தனைகள்.

மனிதர் தாம்

இவையுணரா

மமதையில்

போதையில் வாழ்கிறார்..

உண்மைகள் கண்டறிந்தும்

உணர மறுக்கும்

ஜடங்களாய்..!

என்னைக் கவர்ந்த வரிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு உங்கள் கவிதை பிரமாதம்.வாழ்த்துக்கள்.நவீன தத்துவங்களுடன் உங்கள் கவிதைப்பயணத்தை தொடருங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நவீன காலத்துக்கு ஏற்றாற் போல் உங்க கவிதை இருக்கு.

உங்க கவிதை அழகு.

தாத்தா இந்த கவிதை சொல்ல வார்த்தை இல்லை நவீன உலகத்திற்கு ஏற்ற மாதிரி நல்லதொரு கவிதை உங்களை வாழ்த்த எனக்கு வயசு காணாது.

:P :D

ஏல்லோரும் சொன்னது போலவே நல்ல அழகான கவி.

விஞ்ஞானம் (சயன்ஸ்)படிச்சிருக்கணும் இக் கவியை முழுசாக விளங்க.

நெடுக்ஸ் அண்ணா கரைச்சு குடிச்சிருககர் எண்டு தெரியுது.

பெயர்கள் வேறென்றாலும் விசயம் ஒண்டு தான் என்ற விதத்தில் நமக்கும் விளங்கிச்சு.

படித்தும்

படியாத

மூடராய்

தாம் தாம்

பெரிதென்ற

தலைக்கனத்தில்..!

படிச்சவங்க தான் பல சமயத்தில் தப்பு பண்ணுறாங்க!

நல்ல வரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.