Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது 20ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20th-Amendment.jpg

சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது 20ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வரைவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் சட்டமூலத்திற்கான பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நிபுணர் குழுவினால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையால் அவை குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் இறுதிக்குள் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் பிரயத்தனப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சட்டமா-அதிபரின்-மீளாய்வு/

 

 

 

government.jpg

20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பத்திரம் அமைச்சரவையில் முன்வைப்பு

19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று (புதன்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் இறுதிக்குள் 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரம் காண்பித்து வரும் நிலையில், இந்தத் திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய இடமளிக்கப் போவதில்லை என எதிர்த்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே நீதியமைச்சர் அலி சப்ரி இது குறித்த சட்டமூலத்தை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள நல்ல சரத்துக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவும் தமது பரிந்துரைகளை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளது.

இதேவேளை,  20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில் இரண்டு போதும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். தெரிவித்துள்ளார்.

20ஆவது திருதத்தத்தில் காணப்படுகின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதும் மக்களின் கருத்து அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்தது.

அத்துடன், அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக ஐவர் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் மீளாய்விற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/20ஆவது-திருத்தச்-சட்டமூலம/

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது 20ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு

சட்டமா அதிபர் என்ன சட்டம் பார்த்தா சொல்லப் போறார்?

கூடவே இன்னொரு பிரதி கொடுத்திருப்பார்கள்.சரிபிழை திருத்தியாச்சு என்று சொல்லுவார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் இறுதிக்குள் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

5 hours ago, தமிழ் சிறி said:

மக்களின் கருத்து அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறகு எதற்கு சட்டமா அதிபர்  மீளாய்வு  செய்ய வேண்டும்? ஓ....ஒ எல்லாம் சம்பிரதாயப்படி செய்யணுமாம்.

2 /3 அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் போதுமென்று சடடமா அதிபர் இன்று கூறி உள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இனி பாராளுமன்றில் விவாதித்து (?) சடடமாக்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எதிர்பார்த்து சரியாகத்தான் செய்திருக்கினம். சட்டமா அதிபர் ஆமா ஆட்ட வேண்டியதுதான். இல்லை என்றால் மட்டும் விட்டுவிடுவானுகளா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.