Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை – அங்கஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை – அங்கஜன்

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை என யாழ். மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் சார்பில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், 13 ஆவது திருத்த சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் வந்தால் ஒழிய, அதனை முழுமையாக மாற்றுவதற்கு எந்த தரப்பினரும் பேசவில்லை.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உண்மையான நெருக்கடியை அரசாங்கத்தில் நாங்கள் காண்கின்றோம். 60 வீதமான நிதி மாகாண சபைகளுக்குத் தான் ஒதுக்கப்படுகின்றது.

நாட்டில் மாகாண சபைகள் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் இல்லாத பட்சத்தில், ஆளுநர்கள் தான் 60 வீதமான நிதியைத் தீர்மானிக்கின்றார்கள்.

இதனை ஜனநாயகத்திற்கு எதிரான விடயமாக அரசாங்கம் பார்க்கின்றது. அந்த வகையில், மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/13-ஆவது-திருத்தச்-சட்டத்தை/

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை – அங்கஜன்

ஓம் ஓம் ஐயாவுக்கு சொல்லி போட்டுத் தான் அடுத்த அலுவலே பார்ப்பாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பக்சேக்களின், குறிப்பாக தற்போதைய மாண்புமிகு அதிபர் அவர்களின் ஆலோசகர்   Pinto அறை கூவியது  கேட்கவில்லை போலும். 

Pinto's Pathfinder (அரசு சாரா ??) நிறுவனமும், விவேகானந்த சிந்தனை தேக்க அமைப்பும் (தாபகர் அஜித் டோவல், மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்), இருபக்கத்திலும் உள்ள இனவாதிகளையும் சேர்த்து தெற்காசிய  பிராந்திய பூகோள அரசியல் எனும் தலைப்பில் ஒரு கருத்தாடலாய் நடத்தியதில் இந்த விடயம் மறைக்குகமாக  கதைக்கப்பட்டது விடயம் அறிந்தோருக்கு தெரியும். 

கந்துரையாடலா, நடிப்பிடித்தலா, யாருக்கு எவர் நாடி பிடித்தார்களோ, யாரறிவார்? 

ஆனாலும், சிங்களம் பேசியதற்கு விக்கியின் வாயிலாக பதில் வந்துள்ள தோற்றத்தை (யார் அப்படி வர வைத்திருப்பார்கள் என்பதை ஊகிப்பது உங்களுக்கு விடுக்கப்படும் ஓர் சிறு நொடி. குறிப்பு: எனக்கும் தெரியாது. ) கண்டு, பக்சேக்கள் உங்களை இப்படி பேசுமாறு கேட்டுக் கொண்டு உள்ளனரா? 

 

1 hour ago, தமிழ் சிறி said:

13 ஆவது திருத்த சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் வந்தால் ஒழிய

ஏற்கனவே இருக்கும் 13 மட்டைக் கோதை சீவி விட்டு, கடுதாசி தடிப்பில் வைத்திருந்தாலும் 13 தானே.

எதையும் சீவும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.   

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்

இனத்தைக்கூறு போட்டதற்காக ஒன்றைத் தூக்கிப்போட்டால், எல்லாம் தன்னைக்கேட்டுத்தான் அல்லது தனக்குச் சொல்லிப்போட்டுத்தான் சிங்களவன்  செய்வான் என்னும் எண்ணத்தில் மிதப்பது இவருக்கு அதிகமாகத்  தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.