Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து சார்ல்ஸ் எம்.பியின் கோரிக்கையை மறுத்து பதிலளித்தார் வாசுதேவ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் முறையிட்ட வேளையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர வாக்குறுதியளித்தார்.

 

எனினும் சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவோ வேறு விதத்தில் பதிலொன்றை கூறினார். "வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் " என கடும் தொனியில் கூறினார். 

இதற்கு பதில் தெரிவித்த சார்ல்ஸ் எம்.பி, ' நீங்கள் எமது மக்களுக்கு தரவேண்டியதை தராது போனால் நாம் அவர்களிடம் தானே கேட்டாக வேண்டும்" என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன மீதான விவாத்தில் உரையாற்றிய சார்ல்ஸ் எம்.பி வடக்கின் மீனவர் பிரச்சினை குறித்து பேசினார். 

https://www.virakesari.lk/article/89564

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

. "வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் "

சர்வதேசத்திடம் முறையிடுங்கள் என்று விரட்டுவது அங்கு நாம் பிரச்சனையை நம் நாட்டுக்குள் பேசித் தீர்க்கிறோம் என்று கூறுவது,  உங்களுக்கு தீர்வு இல்லை. நடப்பதை பார்த்துக்கொண்டிருங்கள்  என்கிற சர்வாதிகாரப்போக்கு. இதற்கு சர்வதேசமும் விலை போகிறது. விடுதலைப்போராட்டத்தை அழிக்க உதவியவர்கள், ஒரு இனத்தை அடிமைத்தனத்துக்குள் தள்ளியவர்கள், கைகட்டி வேடிக்கை பார்ப்பது நம்மை அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்கிற நோக்கமே. ஒவ்வொரு குடிமகனும் சர்வதேசத்திற்கு எதிராக தம்  கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். காலத்தையும், நேரத்தையும், சக்தியையும் வீணாக்கிக்கொண்டு நின்ற இடத்திலேயே நிக்கிறார்கள்.

ஒரு வகையில் வாசுதேவ கூறியதும் உண்மைதான். தமிழனின் கடல் வளத்தை தமிழனே அழிக்கும்பொழுது இலங்கை அரசு அதைப்பற்றி கவலைப்படுமென்று எதிர்பார்க்க முடியாது. எனவே தமிழ் அரசியல்வாதிகள் , தமிழ் நாட்டு அரசுடன் பேசி இதட்கு ஒரு முடிவு கட்டினாலே ஒழிய ஒரு தீர்வு வரப்போவதில்லை. தமிழ் நாட்டு மீனவர்கள் பயன்படுத்தும் இழுவைப்படகுகளினால் பவளப்பாறைகள் எல்லாம் அடியோடு புரட்டப்படுவதால் மீன் வளம் குறைவடைவதாக தெரிவிக்கப்டுகின்றது. எனவே இந்திய தமிழன் இதை நிறுத்தும்வரைக்கும் பிரச்சினை தீரப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.