Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து வாழ் பெற்றோர், மாணவருக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வாழ் பெற்றோர், மாணவருக்கு

கடந்த கோடைகாலத்தில் நடந்திருக்க வேண்டிய ஜிசிஎஸ்சி பரீட்சை ரத்தாகி, ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் பெறுபேறுகள் வழங்கப்பட்டன.

சில மாணவருக்கு சில பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகள் வந்திருக்காது.

உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். இவ்வாண்டு நவம்பர் மாதம், இந்த பரீட்சை நடக்கின்றது. விரும்புபவர்கள் அமரந்து, விரும்பிய பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.

உங்கள் பாடசாலையுடன், பாடசாலையை விட்டு வெளியேறி இருந்தால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

உங்கள் பெறுபேறுகள், பல்கலைகழக அனுமதிகளுக்கு முக்கியமானது என்பதால், நீஙகள் ஏ/எலில் படிக்கும் பாடங்களில் ஜிசிஎஸ்சி பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.

இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இந்த பரீட்சை நடக்கலாம். விசாரியுங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயத்தை கூறி இருக்கிறீங்கள் நாதம்ஸ் அண்ணே. பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். இவ்வாண்டு நவம்பர் மாதம், இந்த பரீட்சை நடக்கின்றது. விரும்புபவர்கள் அமரந்து, விரும்பிய பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.

விரும்புவர்கள் மாத்திரம் பரீட்சை எடுப்பதா?   இது மேலும் பிரச்சனைகளை கொண்டு வராதா? 

ஏற்கனவே ஆசிரியர்களின் ஊகத்தில் கொடுத்த முடிவுகள் என்பதால் எல்லோருமே பரீட்சை எடுத்தால்தான் பாராபட்சமின்றி இருக்கும்.. ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

விரும்புவர்கள் மாத்திரம் பரீட்சை எடுப்பதா?   இது மேலும் பிரச்சனைகளை கொண்டு வராதா? 

ஏற்கனவே ஆசிரியர்களின் ஊகத்தில் கொடுத்த முடிவுகள் என்பதால் எல்லோருமே பரீட்சை எடுத்தால்தான் பாராபட்சமின்றி இருக்கும்.. ?

பிரச்சணை வந்தது, ஏ/லெவெலில். காரணம் பல்கலைகழக அனுமதி.

இது ஓலெவல். ஆசிரியர் ஊகம் கொடுக்கமுடியாமல், பெறுபேறு இல்லாமல் சிக்கிக்கொண்ட, வெளிவாரி பரீட்ச்சார்திகளுக்காக நடக்கிறது.

கட்டாயமில்லை. ஆகையால் மாணவர்கள் தவிர்க்க முணைவர்.

பெற்றோர் நீண்டகால நோக்கில், ஒரு பாடத்தில் B எடுத்திருந்து, அதனுடன் ஏலெவல் செய்யும் பிள்ளைகளை, இந்த பரீட்சையில், அமர வைத்து A ஆக்கினால், பின்னாளில் பல்கழைக்கழக அனுமதியில் உதவும்.

முன்னனி பல்கலைகழகங்கள் இதனை பார்ப்பார்கள். 

வெளிவாரி மாணவராகவே அமர்ந்து, பெறுபேறுகளை அதிகரித்து கம் என்று இருக்க வேணும். பின்னர் கைகொடுக்கும்போது, பக்கத்து வீட்டு குஜராத்தி முழுசுவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஏற்கனவே ஆசிரியர்களின் ஊகத்தில் கொடுத்த முடிவுகள் என்பதால் எல்லோருமே பரீட்சை எடுத்தால்தான் பாராபட்சமின்றி இருக்கும்.. ?

எதிர்பார்த்தோ அல்லது  எதிர்பார்க்காமலோ, இப்போதைய பெறுபேரின் படி நன்மை அடைந்தவர்கள் மறுபடியும் எடுக்கமாட்டார்கள், இல்லை பரீட்சை எடுத்துத் தான் பெறுபேறுகள் (மற்றும் பல்கலைகழகம்) பெற்றேன் என்ற சாதிக்கும் வீராய்ப்பு இருந்தால் அன்றி.

எதிர்பார்த்து கிடைக்காதவர்களுக்கு, உண்மையில் உரிய வாய்ப்பு, ஏனெனில் உண்மையான பரீட்சை மூலம் அவர்களின் தகைமைகள் தீர்மானிக்கப்படும்.

               
அப்படி பரீட்சை எடுத்தாலும்,   பரீட்சை மற்றும் முன்பு கிடைத்த பெறுபேறில் கூடியதே   இறுதியனாது.

அனால், எதிர்பார்க்காமல் நன்மை அடைந்தவர்கள் கணிசமான அளவு. 
அரசாங்கத்தை பொறுத்தவரையில் balancing act, மாணவர்களை பொறுத்தவரையில் level playing field.

மேன்முறையீடு என்றும் (பெயருக்காக) வைத்து இருக்கிறார்கள், ஆனால், ஒன்றுமே செய்யமுடியாது. ஏனெனில், மேன்முறையீடு செய்யப்படும் பாட  ஆசிரியரை விட அந்த பாடத்தில்   மேன்முறையீடு செய்பவரின் திறமையை நன்கு அறிந்தவரே மேன்முறையீடு செய்யலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. 

இங்கே(அவுஸ்ரேலியாவில்) O/L இல்லை. . Primary school ( Kindergarten to Yr6), பின்பு Yr 7 to HSC, அதன் பின் Uni or TAFE.

2013லிருந்தே Australian Curriculumதினை எல்லா Statesற்கும் அறிமுகப்படுத்தினார்கள். அதற்குமுன்பு ஒவ்வொரு Statesனிது பாடதிட்டங்களும் வேறு. இப்பொழுது பாடதிட்டங்கள் எல்லா Statesற்கு பெரும்பாலும் ஒரே மாதிரி இருந்தாலும், Secondary Selective Schoolற்கான பரீட்சைகள் இன்னமும் வித்தியாசமே.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. 

இங்கே(அவுஸ்ரேலியாவில்) O/L இல்லை. . Primary school ( Kindergarten to Yr6), பின்பு Yr 7 to HSC, அதன் பின் Uni or TAFE.

2013லிருந்தே Australian Curriculumதினை எல்லா Statesற்கும் அறிமுகப்படுத்தினார்கள். அதற்குமுன்பு ஒவ்வொரு Statesனிது பாடதிட்டங்களும் வேறு. இப்பொழுது பாடதிட்டங்கள் எல்லா Statesற்கு பெரும்பாலும் ஒரே மாதிரி இருந்தாலும், Secondary Selective Schoolற்கான பரீட்சைகள் இன்னமும் வித்தியாசமே.

 

 

 

இலங்கையின் பாடத்திட்டம் பிரிட்டிஷ் சிஸ்டம் தான். அது உங்களுக்கு புரியுமாகையால், பிரிட்டிஷ் சிஸ்டம் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

Oxford Cambridge has announced all books free download until *30th Sept.* 
Includes primary, secondary, IB programme, Cambridge Assessment international and AQA

Access the below link

http://bit.ly/CXCTextbooks
 
 

how to download 

 

use https://calameodownload.com/

if you want to download the books as PDF

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2020 at 07:00, பிரபா சிதம்பரநாதன் said:

விரும்புவர்கள் மாத்திரம் பரீட்சை எடுப்பதா?   இது மேலும் பிரச்சனைகளை கொண்டு வராதா? 

ஏற்கனவே ஆசிரியர்களின் ஊகத்தில் கொடுத்த முடிவுகள் என்பதால் எல்லோருமே பரீட்சை எடுத்தால்தான் பாராபட்சமின்றி இருக்கும்.. ?

புள்ளிகள் குறைய எடுத்தவர்கள் தானே திரும்ப எழுத முனைவார்கள்.
புள்ளிகள் கூட எடுத்தவர்கள் இது காணும் என்று இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாதவர்களிடம் சொல்லிவிடுங்கள், இப்போது GCSE (எமது GCE Ordinary Level போன்றது) பெறுபேறுகளும்  முக்கியம் பல்கலை கழக அனுமதிக்கு.

இது அநேகமானவர்களுக்கு வெளியில் தெரிவதில்லை. பல்கலை கழகங்கள் இப்போது GSCE, GCE Advanced Level இல் consistency ஐயும் ஓர் சுட்டியாக கணிக்கின்றன.
  
எனவே எதிர்பார்த்த GCSE கிடைக்கவில்லை ஆயின், வரும் November அல்லது அடுத்த May-June இல் (இதை சரிபார்க்கவும்) GSCE எடுக்கலாம் என்று. 

விஞ்ஞான பாடங்கள் (biology, chemistry, physics), சமூக விஞ்ஞான பாடங்கள் (psychology, politics, Law, economics, geography, history) போன்றவை UK இல் ஆழமானதும், பரந்துபட்ட பாடங்கள். கணிதம் பரந்துபட்டது ஆனால் ஆழம் குறைவு என்றே பார்க்க தெரிககிறது, ஆனால் Further Maths (GCSE இல் )  ஆழமானதும், பரந்துபட்ட பாடம்.

எனவே, அவற்றில் consistency அவசியம், பல்கலை கழக அனுமதிக்கு தேவை என்றால். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்.

GCSE இல் ஆங்கில மொழிக்கு 5 அல்லது அதற்கு குறைவாக கிடைத்திருப்பின், GCSE  ஆங்கில மொழி பரீட்சை மூலம் அந்த பெறுபேற்றை முன்னேற்றலாமா என்றும் முயற்சி செய்து பார்க்கவும் இது உகந்த சந்தர்ப்பம்.

ஏனெனில், GSCE   ஆங்கில மொழி பெறுபேறும், பல்கலை கழக அனுமதிக்கு முக்கியமானது. 5 உம் அதற்கு குறைவானதும், பல்கலை கழக அனுமதியில் மாணவரின் தகைமையை பின்தள்ளி விடக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்க கூடியது.   

இதையும் தெரியாதோரிடம் சொல்லி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2020 at 12:38, Nathamuni said:

கட்டாயமில்லை. ஆகையால் மாணவர்கள் தவிர்க்க முணைவர்.

GCSE ஐ பற்றி நான் குறிப்பிட்டதை தெரியப்படுத்துங்கள். மாணவர்களுக்கு ஊக்கம் இல்லா விட்டாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

புள்ளிகள் குறைய எடுத்தவர்கள் தானே திரும்ப எழுத முனைவார்கள்.
புள்ளிகள் கூட எடுத்தவர்கள் இது காணும் என்று இருப்பர்.


COVIDவினால்தான் இன்னொரு முறை பரீட்சை வைக்கிறார்கள் என நினைத்தேன்.. அப்படியில்லாமல் சாதரானமாகவே புள்ளி குறைந்தவர்கள் எடுக்கலாம் என்பது தெரியாது ..

இங்கே O/L இல்லை அதேபோல HSCயில் நல்லபெறுபேறுகள் கிடைக்காமல் போனால் திரும்பவும் HSC எடுக்கமுடியாது... அப்படியானவர்கள் Technical and Further Educationல் சேர்ந்து படிப்பார்கள் இல்லாவிடில் workforceல் இணைவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:


COVIDவினால்தான் இன்னொரு முறை பரீட்சை வைக்கிறார்கள் என நினைத்தேன்.. அப்படியில்லாமல் சாதரானமாகவே புள்ளி குறைந்தவர்கள் எடுக்கலாம் என்பது தெரியாது ..

இங்கே O/L இல்லை அதேபோல HSCயில் நல்லபெறுபேறுகள் கிடைக்காமல் போனால் திரும்பவும் HSC எடுக்கமுடியாது... அப்படியானவர்கள் Technical and Further Educationல் சேர்ந்து படிப்பார்கள் இல்லாவிடில் workforceல் இணைவார்கள். 

இங்கும் அப்படியான நிலைக்கு தான் போகிறது.

முன்னர் வருசத்துக்கு இரண்டு பரீட்சைகள். இப்போது ஒன்று மட்டுமே.

திருப்பவும் எடுக்க அனுமதிப்பது, நீங்கள் சொன்ன workforce போக விரும்புவர்களுக்கு தேவையான பெறுபேறுகள் கணிதம், ஆங்கிலத்தில் இல்லாவிடில் எடுத்துக் கொடுக்க..

  • கருத்துக்கள உறவுகள்

]

2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

COVIDவினால்தான் இன்னொரு முறை பரீட்சை வைக்கிறார்கள் என நினைத்தேன்.. அப்படியில்லாமல் சாதரானமாகவே புள்ளி குறைந்தவர்கள் எடுக்கலாம் என்பது தெரியாது ..

covid-19 ஆல் பரீட்சையே நடக்கவில்லை. எனவே 2020 பரீட்சையை பொறுத்தவரை, இதுவே முதல் தடவை மாணவர்கள் எடுப்பது, அதாவது  எடுக்க விரும்பினால். 

covid-19 ஆல் பரீட்சையே நடக்கவில்லை. எனவே 2020 பரீட்சையை பொறுத்தவரை, இதுவே முதல் தடவை மாணவர்கள் எடுப்பது, அதாவது  எடுக்க விரும்பினால்.   

GSCE ஐ பொறுத்தவரை consistency (towards GCE Advanced Level & University degree subject choice ) என்பதும் 

GSCE ஆங்கில மொழி 5 க்கு மேல் ) எவ்வளவு கூட எடுக்கமுடியும் எனபதும் University entrance qualification இல் மிகவும் முக்கியமானவை.

GCE  Advanced Level, சொல்லத் தேவை இல்லை, இயலுமானவரை அதி கூடிய பெறுபேறை பெறுவது.   

இப்படி பரீட்சை  நடப்பது, ஓர்  no risk வாய்ப்பு. 

ஏனெனில், ஏற்கனவே தரப்பட்ட பெறுபேறு, மற்றும் பரீட்சை பெறுபேறுகளில், மிகவும் கூடியதே இறுதி பெறுபேறாக கணிக்கப்படும்.    

மாணவகளையும், பெற்றோரையும், மற்றவர் என்ன நினைப்பார்கள் என்பதை பொருட்படுத்தாமல், smart ஆக சிந்தித்து முடிவு எடுக்க சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.