Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரசு செயலாளர் பதவியைத் துறந்தார் துரைராஜசிங்கம்; சம்பந்தன், மாவைக்கு கடித மூலம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு செயலாளர் பதவியைத் துறந்தார் துரைராஜசிங்கம்; சம்பந்தன், மாவைக்கு கடித மூலம் அறிவிப்பு

BharatiSeptember 11, 2020


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளேன். எனது செயற்பாடுகளுக்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இந்நிலையில், என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இப்பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதுள்ளேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்வதோடு, நான் இப்பதவியை இன்றிலிருந்து துறக்கின்றேன் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.

 

எனவே, எனது இப்பதவி துறப்பை ஏற்றுக் கொண்டு இது தொடர்பான ஏனைய விடயங்களை உரியவாறு கையாளுமாறு தங்களை மிக அன்புடன் வேண்டுகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்படாது அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது தொடர்பில் துரைராஜசிங்கம் மீது நம்பிக்கையிலா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு மாவையின் ஆதரவாளர்கள் முயற்சி செய்திருந்த நிலையில் துரைராஜசிங்கம் தற்போது பதவி விலகியுள்ளது தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் மோதல்கள் அதிகரித்து வருவதை காட்டுகின்றது.

 

http://thinakkural.lk/article/67673

 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200911-145810.jpgநல்ல தமிழ் தெரிஞ்ச புலவரை பலிகடா ஆக்கி போட்டினம் ..😢.

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்!

   by : Vithushagan

http://athavannews.com/wp-content/uploads/2020/09/100823284_132124565139886_6197255843801464832_n-720x450.jpg

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்  தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர்  பதவியை இராஜினாமா செய்வதாக  அறிவித்துள்ளார்.

அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு  நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளேன். எனது செயற்பாடுகளுக்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில், என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இப்பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதுள்ளேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்வதோடு, நான் இப்பதவியை இன்றிலிருந்து துறக்கின்றேன் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.

எனவே, எனது இப்பதவி துறப்பை ஏற்றுக் கொண்டு இது தொடர்பான ஏனைய விடயங்களை உரியவாறு கையாளுமாறு தங்களை மிக அன்புடன் வேண்டுகின்றேன்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/பதவியை-இராஜினாமா-செய்தா-5/

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து யார் செயலாளர்?

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த செயலாளரும் அவர்தான் பிரதேசவாதம் அது இது எனக்கூறி கூடியவிரைவில் அவரது விலகலை திரும்பபெறுவார்கள்.

நாங்கள் எல்லாம் யாரு.

கதையோட கதையாக,

ஒரு பாராளுமன்ற உருப்பினர் அதுவும் தடிச்ச சிங்களவர் அவர் கூறுகிறார் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு படிப்பறிவு இல்லை நாகரீகம் தெரியாதவர்கள்  காட்டுமிராண்டிகள் என.

உண்மைதானே

ஐ பி சி தொலைக்காட்சியில் ஒரு தென்னிலங்கயில் படிக்கும் தமிழ் மாணவன் கூறுகிறான்

நானும் ஒரு மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிங்களப் பகுதியிலிருக்கும் எல்லாக் கிராமங்களுக்கும் பயணப்பட்டிருக்கிறன். கூடவே கண்டி கம்பாந்தோட்டை காலி இவை போன்ற பிரதேசங்களில் பயணப்பட்டிருக்கிறேன்.

காலாகாலமாக இலங்கைத்தீவின் அதிகூடிய அரசியல் பதவிகளில் கண்டியியைப் பூர்வீகமாகக்கொண்ட அரசியல் தலைவர்களும் இறுதிப் பத்துவருடங்களாக காலி கம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைக் கொண்ட அரசியல் தலைவர்களும் நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னமும் அப்பிரதேசங்கள் அடிப்படை வசதிகளையே பூர்த்திசெய்யாத பகுதியாகத்தானே இருக்கின்றன என. ஒரு பாராளுமன்றக்க்காலத்தில் அபிவிருத்தி அடைந்துவிடும் அதுவும் சிங்களத்தலைமைகள் தமிழருக்குப் பாலாறும் தேனாறும் ஓடவிடும் என மனப்பால் குடிக்கும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என சிங்களவன் கூறுவதில் என்ன தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

அடுத்த செயலாளரும் அவர்தான் பிரதேசவாதம் அது இது எனக்கூறி கூடியவிரைவில் அவரது விலகலை திரும்பபெறுவார்கள்.

நாங்கள் எல்லாம் யாரு.

கதையோட கதையாக,

ஒரு பாராளுமன்ற உருப்பினர் அதுவும் தடிச்ச சிங்களவர் அவர் கூறுகிறார் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு படிப்பறிவு இல்லை நாகரீகம் தெரியாதவர்கள்  காட்டுமிராண்டிகள் என.

உண்மைதானே

ஐ பி சி தொலைக்காட்சியில் ஒரு தென்னிலங்கயில் படிக்கும் தமிழ் மாணவன் கூறுகிறான்

நானும் ஒரு மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிங்களப் பகுதியிலிருக்கும் எல்லாக் கிராமங்களுக்கும் பயணப்பட்டிருக்கிறன். கூடவே கண்டி கம்பாந்தோட்டை காலி இவை போன்ற பிரதேசங்களில் பயணப்பட்டிருக்கிறேன்.

காலாகாலமாக இலங்கைத்தீவின் அதிகூடிய அரசியல் பதவிகளில் கண்டியியைப் பூர்வீகமாகக்கொண்ட அரசியல் தலைவர்களும் இறுதிப் பத்துவருடங்களாக காலி கம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைக் கொண்ட அரசியல் தலைவர்களும் நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னமும் அப்பிரதேசங்கள் அடிப்படை வசதிகளையே பூர்த்திசெய்யாத பகுதியாகத்தானே இருக்கின்றன என. ஒரு பாராளுமன்றக்க்காலத்தில் அபிவிருத்தி அடைந்துவிடும் அதுவும் சிங்களத்தலைமைகள் தமிழருக்குப் பாலாறும் தேனாறும் ஓடவிடும் என மனப்பால் குடிக்கும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என சிங்களவன் கூறுவதில் என்ன தவறு.

உத விடுங்கோ,

ஒரு மாரி உங்கட 2ம் கஜன் ஒரு வழியா அம்பாறை பஸ்ச பிடிச்சிட்டர் போல.

அங்க போய் ஒபிஸ் திறந்து வேலை செய்யச் சொல்லுங்கோ.

பிரதேசவாத எதிர்ப்பு சொல்லில் மட்டும் அல்ல செயலிலும் வேணும்.

பிகு: எனக்கு உந்த பாலாறு, தேனாறு ஒண்டும் வேண்டாம்.

#எறும்புத் தொல்லை 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.