Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பரந்தன் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அதை அண்டி வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பரந்தன் குமரபுரம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

 

குறித்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துரைக்கும் போது- எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த தொழிற்சாலைகள் அழைக்கப்பட்டால் அதை நாம் எதிர்ப்போம் எனவும், கடந்த அரசாங்கத்திற்கு எம்மால் ஒரு திட்ட முன்மொழிவு கொடுக்கப்பட்டது. பரந்தன் பகுதியில் வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பது தொடர்பில் கொடுக்கப்பட்டது. அவ்வாறு அமையப் பெற்றால் நாம் அந்த திட்டத்தை வரவேற்போம் எனவும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பிரதேச சபையின் உறுப்பினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

https://www.pagetamil.com/145745/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

ஏற்கனவே  தெருவுக்கு தெரு காரணமில்லா புற்று நோய்  தாக்கம் வடகிழக்கில்.

இது கண்ணை வித்து  அரண்மனையை வேண்டுவது போன்றதுக்கு ஒப்பானது . 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு. இதேபோல்.. காங்கேசந்துறை.. சீமெந்து தொழிற்சாலையும் எமக்கு வேண்டாம். எமது கனிமத்தை திருடுவது மட்டுன்றி எமது மண்ணின் பாதுகாப்புக்குரிய இயற்கை அரணான முருகைக்கற் பாறைகள் சிதைக்கப்படுவது நீண்ட கால ஒழுங்கில் எமக்குப் பாதகமே.

அல்லைப்பிட்டி அலுமினியத் தொழிற்சாலை வரவின் பின் அப்பகுதி விளை நிலங்கள்.. தரிசானதும்.. காற்றில் நச்சுத் துகள்கள் பரவி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே.. மக்கள் நெருக்கமுள்ள.. புழக்கமுள்ள.. விளை நிலங்களுள்ள.. இயற்கைக்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில்.. அமையக்  கூடிய... எந்த தொழிற்சாலைக்கும் இடமளிக்கக் கூடாது.

அப்படி மக்கள் நெருமற்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால்.. அவையும் இயற்கைக்கு பாதகமற்ற முறையில்.. சூழல் மாசு உண்டுபண்ணாத வகையில்.. அமைப்படுவதை உறுதி செய்து கொள்வது மிக மிக மிக அவசியம். 

இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

இப்போதான் இது மூடியிருக்கு. இது இயங்கியபொழுது எத்தனை பரந்தன் வாழ் அல்லது அதனை அண்டிய ஊர்களில் உள்ள மக்களுக்கு வேலை வழங்கப்பட்டது. 0 
பெயர்தான் பரந்தன்இரசாயனம். ஆனால் வேலையாட்களெல்லாம் வெளி ஊர்தான்.

சூழலுக்கு பாதகமெனில் அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்றல்லவா பார்க்க வேண்டும்.

9 hours ago, Ellam Theringjavar said:

 

சூழலுக்கு பாதகமெனில் அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்றல்லவா பார்க்க வேண்டும்.

பூட்டி வைக்க வேண்டியதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.