Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான அரிய புத்தகத் தொகுப்புகளை ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பல நாடுகளில், 45இற்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய பொலிஸார் இறுதியாக ருமேனியாவில் கிராமப்புறத்தில் ஒரு வீட்டின் பாதாள அறையில் புத்தகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 200 புத்தகங்களில் வானியலாளர் கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஓவியர் பிரான்சிஸ்கோ கோயா ஆகியோரின் படைப்புகளும் உள்ளடங்குகின்றன.

இந்தப் புத்தகங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் மேற்கு லண்டனின் ஃபெல்டாமில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டதுடன் லாஸ் வேகாஸுக்கு ஏலத்திற்கு அனுப்புவதற்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்வுடைவர்கள் ருமேனிய மாஃபியா குழுவான கிளாம்பருவின் ஒரு பிரிவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் இங்கிலாந்து முழுவதும் இடம்பெற்ற சுரங்க கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொள்ளைச் சம்பவங்களை திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இங்கிலாந்தில்-திருடப்பட/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோதாரி விழுவாரால தான் பிரித்தானியா, ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து வெளியே வந்தது.

கிழக்கு ஜரோப்பிய கிரிமினல் கம்பனியள் எல்லாம் உங்க வந்திருக்குதுகள்.. 🤨

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

இந்த கோதாரி விழுவாரால தான் பிரித்தானியா, ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து வெளியே வந்தது.

கிழக்கு ஜரோப்பிய கிரிமினல் கம்பனியள் எல்லாம் உங்க வந்திருக்குதுகள்.. 🤨

வந்த குரூப்புகள் இன்னமும் திரும்பி போகவில்லை அநேகமானவர்கள் 15 வயதுதான்  என்பார்கள் இங்கிலாந்தில் 15வயதுக்கு கொடுக்கப்படும் உதவி திட்ட்த்தில் உள்ள ஓட்டையை நன்றாக பயன்படுத்துகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ரூமேனியாவில் தான் gypsy என்ற சனக்கூட்டம் இருக்கிறது.

இவர்கள் செப்படி  வித்தைகளில் திறமையானவர்கள்.

கொரானா இதற் முதல் ஓர் திருட்டு வித்தை நடைபெற்றது. ஒரு பெண், நகைகள் அணிந்த  மற்றும் வசதியான வெளித்தோற்றம் கொண்ட பெண்களை அணுகி, மனதுக்கு மிகவும் ரம்மியமான முத்து மாலையை காட்டி, இதை அணிந்து பார்க்கவும் என்று, தானே அந்த நகைகள் அணிந்த  மற்றும் வசதியான வெளித்தோற்றம் கொண்ட பெண்ணுக்கு மாலையை அணிவிப்பார், அணிவித்த பெண்ணே பின்பு மாலையை கழட்டுவார், வாங்கினால் என்ன வங்கத்து விட்டால் என்ன. வாங்கினால் அதை உரிய பெட்டியில் பொதி பண்ணி  தருவார்.

மாலையை காட்டிய பெண் தனது அலுவல் முடிந்தவுடன் சென்றி விடுவார், சிறிது நேரத்தின் பின் அந்த (வசதியான) பெண் தன்னிடம் இருந்து நகை (சங்கிலி) அல்லது purse தொலைந்து விட்டு இருப்பதாய் அவதானிப்பார்.   
 
 இவை அனைத்தும் நாடாகும் பொது  பொது, எவராலும் ஓர் மறுக்கமுடியாத நிலையில் தாங்கள் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கின்றனர். மாலையை  கொண்டு வந்த பெண்ணிடம் கட்டுடைந்த நிலையில் இருந்ததாக.        

இந்த செப்படி விதை இவர்களுக்கு இயற்றக்கையாகவே வந்ததாக ஓர் கதை உண்டு. அதாவது, வரலாற்றில் மிகவும் கழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அழிக்கப்பட்ட  சமூகம் தப்புவதற்கு, இயல்பாகவே அவர்களிடம் கூர்ப்படைந்ததாதாக.

இன்னுமொரு கதையும் சொல்லப்படுகிறது, இவர்களுக்கும் (gypsies), mysterious leprechaun இன் தொன்மையானா சந்ததிக்கும் உயிரியல் தொடர்பு உண்டு என்று.           

பிரித்தானியர், gypsies ஐ  2ம் உலக யுத்த களங்களில் உளவுக்கு பயன்படுத்தினர் என்பது உண்மை.    காரணம், சுரங்க வழிகளை இலகுவாக அமைக்கும் திறமையும் அதை அமிப்பதத்திற்கேற்றப உள்ள புவியமைப்பை கண்டராவதில் அவர்களுக்கு உள்ள தனிக் கலையையும் அவதானித்து உணர்நத பின்பும், அவர்களிடம் உள்ள  (இலகுவாக மறையும்) செப்படி வித்தையையும் கண்ணால் கண்டு என்பது கொடுக்கப்படும் விளக்கமாகும்.  

மற்றது, இப்பொது gypsies  உம ரோமானிய மாபியாவில் ஓர் பகுதியாக உள்ளனர் என்பதும் உண்மை.

EU ஆல் இந்த gypsies உம், UK இற்குள் வந்து விட்டனர். 

சுரங்கம் எனும் பொது தான் எனக்கு நான் கேள்விப்பட்டது பொறிதட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

விம்பிள்டன்லை வீடு தட்டி, திறந்த ஜேர்மன் கார பேராசிரியரை தள்ளி விழுத்தி, காசை தா எண்டு, நாலு கிரிமினல் அடி, அடியெண்டு அடிக்க, மேல ரூமுக்கல இருந்த மகள் போலீஸைக்கூப்பிட வந்த போலிஸ்... கையும், மெய்யுமா பிடிச்சிற்றுது.

மூஞ்ச, முகரை எல்லாம் பெயர்ந்த அந்த மனிசன்... ஆஸ்பத்திரில இரண்டு மாதம் கிடந்து... வந்து, சிறையில இருந்த இவங்களை தேடிப் போய், களவெடுக்க வந்தனியள் என்ன கோதாரிக்கப்பா என்னை இப்படி அடிச்சனியள் என்று கேட்டு, மன்னித்து விட்டேன் போங்கோ என்று சொல்ல, அவயள் கண்ணீர் வடிக்க....

விசயத்துக்கு கிடைச்ச பப்பிளிசிட்டியும் பிரக்சிட்டை நியாயமாக்கவும் ஒரு காரணமாகியது.

இது போலாந்து கிரிமினல் கும்பல். 🤨

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

இந்த கோதாரி விழுவாரால தான் பிரித்தானியா, ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து வெளியே வந்தது.

கிழக்கு ஜரோப்பிய கிரிமினல் கம்பனியள் எல்லாம் உங்க வந்திருக்குதுகள்.. 🤨

முன்பை விட... இப்போ, களவுகள்... அதிகரித்துள்ளது.
அதுகும் பட்டப் பகலில்.. வீட்டில் சமையல் அறைக்குள், 
அல்லது குளியலறைக்குள் ஆட்கள் நிற்கும் போதே...  
வரவேற்பறையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை...
கண்ணிமைக்கும் நேரத்தில்...  எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.