Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின்னர் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன், அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் செயற்குழு கூட்டத்தின் போது 20ஆவது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது வாசிப்பின்போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன், அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/20-ஆவது-திருத்தச்-சட்டமூலம/

20வது திருத்தத்தினால் அரசாங்கத்துக்குள் பிளவு- ருவான்

20வது திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்குள் பிளவு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்துள்ளார்
பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் தேவையற்றது என தெரிவித்துள்ள ருவான் விஜயவர்த்தன நாங்கள் நாட்டில் ஜனநாயகத்தை மீள நிலைநாட்டவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை எடுத்து நாடாளுமன்றத்தின் கரங்களில் கொடுப்பதற்காகவும் 19வது திருத்தத்தை அறிமுகப்படுத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 20வது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை நோக்கி மீண்டும் செல்வதன் காரணமாக முழு விடயத்தையும் பின்னோக்கிநகர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது சரியான விடயம் என நான் கருதவில்லை அரசாங்கத்துக்குள்ளேயே 20வது திருத்தம் தொடர்பில் பிளவுஏற்பட்டுள்ளது என நான்கருதுகின்றேன் எனவும் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தை கொண்டுவருவதற்;கான சரியான தருணமிது என நான் கருதவில்லை ,ஒரு நபரை அடிப்படையாக வைத்து நிறைவேற்று அதிகாரத்தை கொண்டுவருவதற்கான பொருத்தமான தருணமிது எனவும் நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


என்னுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தீர்மானிக்கவேண்டியது ஐக்கியமக்கள் சக்தியே எனவும் தெரிவித்துள்ள ருவான் விஜயவர்த்தன நான் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராகயிருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளைமேற்கொண்டு வருகின்றேன், அவர்கள் நாங்கள் ஒரு கட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என கருதுகின்றனர் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.
எவரும் தனிநபர் குறித்து சிந்திக்ககூடாது , நாங்கள் தற்போது நாட்டின் நிலை குறித்து சிந்திக்கவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/70441

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவின் 20 ஆவது திருத்தத்தை மஹிந்த ராஜபக்‌ஷ ‘வீட்டோ’ செய்வாரா?

 

ஜனாதிபதிக்கான அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றது. குறிப்பாக ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதனையிட்டு ஆராய்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விஷேட குழு ஒன்றை அமைத்தது இந்த நெருக்கடிகளின் தீவிரத் தன்மையை வெளிப்படுத்தியது.

பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாகத்தான் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முழு வீச்சில் ஆரம்பித்தது. இதற்காகத் தயாரிக்கப்பட்ட வரைபுக்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், அமைச்சரவையும் அதனை ஏற்றுக்கொண்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, இதனை விரைவில் நிறைவேற்றிவிடுவதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பு துரிதமாக வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றது.

ஜனநாயகத்தைப் பலப்படுத்திய ’19’

சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு திருத்தம் என 20 ஆவது திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் என்னதான் போராட்டங்களை நடத்தினாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த ஆசனங்களைப் பெற்றுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் முன்னால் வைத்துள்ள கால்களைப் பின்னால் எடுக்கப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிவிட்டது.

20ஆவது திருத்தம் என்பது அடிப்படையில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வரையறையற்ற முறையில் வழங்குகின்றது. 2015இற்கு முன்னர் அவ்வாறான ஒரு நிலைதான் இருந்தது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறையற்றதாக இருந்ததுடன், பாராளுமன்றம் அமைச்சரவை என்பன  வெறும் ‘பொம்மை’யாக இருந்தன. 18ஆவது திருத்தத்தின் மூலம் தனது அதிகாரங்களை அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஷ மேலும் அதிகரித்திருந்தார். அது சர்வாதிகார ஆட்சி ஒன்றை உருவாக்கியிருந்த நிலையில்தான், 2015இல் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்களின் பிரதான கோஷமாக இருந்தது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவது என்பதுதான். 2015இல் உருவாகிய ‘நல்லாட்சி’ என்ற பெயரிலான மைத்திரி – ரணில் அரசாங்கம் அதனுடைய முதலாவது செயற்பாடாக 19ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்தது. பாராளுமன்றமும் அமைச்சரவையும் இதன் மூலம் பலம்வாய்ந்தவையாக மாற்றப்பட்டன. சுயாதீன ஆணைக் குழுக்களை ஜனாதிபதியினாலோ அரசாங்கத்தினாலோ கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. ஜனாதிபதியால் ஒருவருடத்திலேயே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது.

உண்மையில் 19ஆவது திருத்தத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, அது நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தியது.

சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் ’20’

இப்போது, ஆகஸ்ட்டில் நடைபெற்ற தேர்தலில் பொது ஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றது. தமக்கு ஏற்றவாறு அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு கிடைத்துள்ள சுதந்திரமாகவே அவர்கள் இந்த வெற்றியை எடுத்துக்கொள்கின்றார்கள். அதனால், அவர்களுக்கு உடனடித் தேவையாகவுள்ளவைகளை 20ஆம் திருத்தத்தின் மூலமாகப் பெறப்போகின்றார்கள். இரண்டாம் கட்டமாக புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சியிலும் அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். அதற்காக நிபுணர்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் திகதி 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஒக்ரோபர் மாதத்தில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதும், அதன் பின்னர் அடுத்த வருட முற்பகுதியில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதும்தான் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்ததாக தமது ஆசனங்கள் இருப்பதால், இதனைத் தம்மால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. ஒரு – சில எம்.பி.க்களை வாங்கிவிட முடியும் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள். அதில் அவர்களுக்குத் தேவையான அனுபவம் உள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உட்பட எதிரணி தரப்பில் உள்ள சிலர் அரசுடன் இணைவதற்கான பேரங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் தகவல்கள் கசிந்துகொண்டுள்ளன.

ஆளும் கட்சியில் 150 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதிலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 19ஆவது திருத்தம் வந்தபோது அதனையும் ஆரரித்தவர்கள்தான். 2015 முற்பகுதியில் 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்பட்ட போது, ஒரேயொரு உறுப்பினர் மட்டும்தான் அதற்கு எதிராக வாக்களித்தார். தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள், குறிப்பாக மைத்திரி தரப்பில் இருப்பவர்கள் ’19’ ஐ ஆதரித்தார்கள். அதனை இல்லாமல் செய்யும் வகையில் தற்போது கொண்டுவரப்படவுள்ள ’20’ ஐ ஆதரிக்கவும் அவர்கள் தயாராகத்தான் உள்ளார்கள்.

பிரஜாவுரிமையும் பசில் ராஜபக்‌ஷவும்

இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளவர்களைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்து அமைச்சராக்குவதும், ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் – பிரதமர், அமைச்சரவை, பாராளுமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவற்றை ‘பொம்மைகள்’ ஆக்குவதும்தான் இந்த 20 ஆவது திருத்தத்தின் உடனடி நோக்கம். இரட்டைப் பிரஜாவுரிமை என்னும் போது, பசில் ராஜபக்‌ஷ அமெரிக்க பிரஜாவுரிமையையும் கொண்டிருக்கின்றார். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக்குதற்காகத்தான் இந்தத் திருத்தம் அவசரமாகக் கொண்டுவரப்படுவதாகவும் ஒரு தகவல் உள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாகக் கொண்டுவருவதற்கான வியூகத்தை வகுத்துச் செயற்பட்ட ‘வியத்மக’ என்ற அமைப்புத்தான் 20ஆவது திருத்தத்தைத் தயாரித்ததாகச் சொல்லப்படுகின்றது. சிங்கள தேசியவாதத்தை இலக்காகக் கொண்ட தொழில்சார் வல்லுனர்கள், புத்திஜீவிகளால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாவை பலப்படுத்துவது அவர்களுடைய நோக்கம். அதற்காகத்தான் 20ஆவது திருத்தத்தை அவசரமாக அவர்கள் கொண்டுவந்தார்கள்.

ஜனாதிபதியைப் பலப்படுத்தும் அதேவேளையில், அதன் மறுபக்கத்தில் பிரதமரை வெற்றுப் பொம்மையாக்குவது இந்த 20 ஆவது திருத்தத்தின் இலக்குகளில் ஒன்று. பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தற்போது இதனால் குழப்பமடைந்தவராகக் காணப்படுகின்றார். மகிந்த வெற்றுப்பொம்மையாக இருந்துவிடக்கூடிய ஒருவரல்ல. அதனால்தான், 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை அவர் நியமித்தார். அந்தக் குழு திருத்தத்துக்கு மேலும் சில திருத்தங்களை முன்வைத்திருக்கின்றது. மகிந்தவுக்கு ஆதரவான அமைச்சர்கள் “20” க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியிருப்பதையும் காணமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டு வருடங்களுக்குள் ஓய்வு பெறுவார் எனவும், அவரது மற்றொரு சகோதரர் பிரதமராகப் பதவியேற்பார் எனவும் கொழும்பு ‘டெயிலி மிரர்’ சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. மஹிந்தவின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவரும் நிலையில்தான்  இந்தச் செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியான மறுதினம் மஹிந்த ராஜபக்‌ஷ அதனைத் திட்டவட்டமாக மறுத்திருந்தார். 20 நடைமுறைக்கு வருகின்றதோ இல்லையோ, அரசின் உயர் மட்டத்தில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை – அதிகாரப் போட்டியை வெளிப்படுத்தியிருக்கின்றது.

அகிலன்

http://www.ilakku.org/mahinda-rajapaksa-gotabaya-rajapaksa-20th-amendment-sri-lanka-akilan/

 

20 hours ago, தமிழ் சிறி said:

அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

எங்கடை சட்ட (சத்த) வல்லுநர்கள், சர்வதேச கரிசனையை பெற்றுள்ள இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்த தயாராகிவிடார்களா?. அடுத்தது இவ்வாறான ஒரு நீண்டகால விளைவை தரக்கூடிய விவகாரம் பற்றி 21 நாள் வரம்பு விதிப்பது நீதிமன்றம் செல்வதை மட்டுப்படுத்தும் ஒரு செயல் . 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்றில் குழப்பம் – Live

 

 

http://thinakkural.lk/article/70804

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைகள் அமைதியாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.😆

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்தான், மிளகாய் தூளை தடை செய்து விட்டார்களா 🤣

14 minutes ago, nunavilan said:

கதிரைகள் அமைதியாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.😆

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.