Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது - சம்பந்தர்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது - சம்பந்தர்.!

f6b0bb3c-r.-sambanthan-1_850x460_acf_cro

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும்,அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ஒருபோதும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.”

இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையும் இந்தியாவும் ஒருமித்துச் செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். பல துறைகளில் ஒருமித்துச் செயற்படுவதற்கு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதமும் தெரிவித்திருக்கின்றார்கள். இதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.

விசேடமாக இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குப் பல வசதிகளை இரு நாட்டு அரசுகளும் செய்துள்ளன. அதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில்

நீதியின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் – கௌரவத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில்,

பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும் வலியுறுத்தலாகவும் உள்ளது.

இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய பாரதப் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் தற்போதைய அரசும் முன்னாள் அரசுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன.

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்.

அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான – உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. இதைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார்.

அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/85965/

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது

இலங்கை 1987ல் இருந்து தொடர்ந்தது தப்பித்துகொண்டுவந்ததின் விளைவால் தான் நீங்கள் இப்படியொரு கருத்தை இன்று முன்வைக்க வேண்டியிருக்கு.

இப்படியான கருத்துக்கள் உண்மையில் உங்களை நீங்களே மயக்கத்தில் வைத்திருக்க செய்யும் ஒதலே  தவிர நடைமுறையில் நடப்பவை இன்றுவரை இந்தியாவால் பெரிதாக முன்னோக்கி விடயங்களை நகர்த்தும் ஆற்றல் இல்லை என்பதை தான் மீண்டும் மீண்டும் உறுதிசெய்கிறது. இதுவரை இந்தியாவால் நிலைமையை ஒரு தொய்வு நிலையில் (stalemate) வைத்திருக்க முடிந்திருக்கின்றதே தவிர ஒரு தீர்வு நோக்கி காத்திரமான முன்னெடுப்புகளை (sustained efforts towards a final solution) எடுக்க அதனால் முடியவில்லை. இனிவரும் காலங்களில் இன்றைய பூகோள நிலைமையில் இந்தியாவால் முடியும் என்று கருதமுடியாது. இலங்கை உண்மையில் இந்தியாவின் ராஜதந்திரம் ஒரு அளவுக்கு மேல் போகாமல் (checkmate) தடுத்துள்ளது. இந்த விடயத்தில் இரு பேரினவாத கட்சிகளும்  பங்கக்களிப்பை செய்துள்ளன 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி என்ன சொன்னார் எண்டு நினைவு இல்லை எண்டு மகிந்தா சொல்லிப்போட்டார்.... இவரு வேற காமெடி பண்ணிக்கொண்டு... ஐயோ... அய்யோ... 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

""இந்தியாவின் அழுங்குப் பிடி""

சிரித்தே இறந்துவிடுவேன் போலுள்ளது. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை எப்படி கையாளுவது(பேக்காட்டுவது) என்பது சிங்கள அரசுக்கு கை வந்த கலை. சம்பந்தரின் கனவுக்கும் ஒரு அளவு  உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பேச்சுக்கு மோடி ரியாக்சன்👇

large.86BF3EFD-9410-41EE-A130-DDC1244D2061.jpeg.5fe420837f271674069663d3361918f8.jpeg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.