Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம்

ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம்

 

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்புபட்டமைக்கான சாட்சிகள் இல்லாமையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி ரியாஜ் பதியுதினின் விடுதலை தொடர்பில் வினவிய போதே சமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுவிக்கப்பட்டதன் மூலம் நிரபராதி என கருத முடியாது எனவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ரியாஜ் பதியுதின் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு புத்தளம் பகுதியில் வைத்து கைதான ரியாஜ் பதியுதின் 5 மாத கால விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

பணம் தான் காரணம்...தீவிரவாதிகளோடு தொடர்பு இருந்தும், இவரது தம்பியார் வெளியில வந்த பிரச்சனை திசை திருப்ப தான் இலங்கையில் மீண்டும் கொரோனா பரவுது என்று கதை கட்டி விட்டு இருக்குது என்று சிலர் சொல்லினம்...உண்மை /பொய் மகிந்தா சகோதரர்களுக்கும், ஊரில் இருப்பவர்களுக்கும் தான் வெளிச்சம் 

ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர் அதிரடி அறிவிப்பு

AG.jpgரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரியாஜ் பதியூதீன் மீதான விசாரணை ஆவணங்களை இதன்போது அவர் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான நிறுத்தப்பட்ட விசாரணைகளில் காணப்பட்ட குறைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/79163

 

என்னை மீண்டும் கைதுசெய்யவேண்டுமென அரசியல் மத ரீதியிலான காரணங்களுக்காக சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்- ரிசாத்தின் சகோதரர் ஜனாதிபதிக்கு கடிதம்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ்பதியுதீன் தான் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

தன்னை தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என சிஐடியினர் கருதியதன் காரணமாகவும், கொழும்பு கோட்டை நீதவானின் தீர்ப்பின் அடிப்படையிலும் தான் விடுதலை செய்யப்பட்டதாக அவர் ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

riyaz-leteer-300x200.jpg
இன்சாவ் அஹமட் என்பவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே புத்தளத்தில் வைத்து ஏப்பிரல் 14 ம் திகதி சிஐடியினர் தன்னை கைதுசெய்தனர் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் நான் தடுத்து வைக்கப்பட்டேன் ஐந்தரை மாதங்களாக சிஐடியினர் என்னை தீவிரவிசாரணைக்கு உட்படுத்தினார்கள் என ஜனாதிபதிக்கான கடிதத்தில் ரியாஜ் தெரிவித்துள்ளார்.
என்னை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற முடிவிற்கு சிஐடியினர் வந்தனர் என குறிப்பிட்டுள்ள ரியாஜ் பதியுதீன் இன்சாவ் அகமட்டுடனான தனது தொடர்புகளில் எந்த சந்தேகமும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

gota-00-300x200.jpg
சிஐடி சாத்தியமான அனைத்து வழிகளிலும்; விசாரணையை மேற்கொண்ட பின்னரே நான் விடுதலை செய்யப்பட்டேன் என ரியாஜ் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
என்னை பற்றி முழுமையாக திருப்பதியடைந்த பின்னர் 29ம் திகதி சிஐடியினர் என்னை விடுதலை செய்தனர், நீதவான் முன்னிலையில் என்னை ஆஜர் படுத்தாமல் சிஐடியினர் என்னை விடுதலைசெய்துள்ளனர் என உள்நோக்கம் கொண்ட சில தரப்பினர் தெரிவிப்பது போன்று எனது விடுதலையில் எந்த தீயநோக்கமும் இல்லைஎனவும் ரியாஜ்;பதியுதீன தெரிவித்துள்ளார்.
சிஐடியினர் நபர் ஒருவரை தொடர்ந்தும் தடுத்துவைக்கவேண்டிய தேவையில்லை என கருதினால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை விடுதலை செய்யலாம் என நீதவான் முன்னர் உத்தரவிட்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் இனரீதியான உள்நோக்கம் கொண்ட சில தரப்பினர் சிஐடியினரின் நடவடிக்கையை சந்தேகத்துக்கு இடமானதாக சித்தரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ரியாஜ்;பதியுதீன் தெரிவித்துள்ளார்.
எந்தஆதாரமும் இல்லாமல் என்னை பயங்கரவாதியாக சித்தரிக்க அவர்கள் முயல்கின்றனர்
என்னை மீண்டும் கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்கள் அரசியல் மற்றும் மதரீதியிலான நோக்கங்களுக்காக எழுந்துள்ளன எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/79208

ரிசாத்தை கைதுசெய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

rishad-1-300x168.jpg
பொதுநிதியை முறைகேடு செய்ததது மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களைமீறியமை தொடர்பிலேயே முன்னாள் அமைச்சரைகைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/79253

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாடை கைது செய்ய CID முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

ரிஷாடை கைது செய்ய CID முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இருவரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் மக்களை கூட்டி எதிர்ப்பு கூட்டங்களை அமைக்காமல் இருப்பதற்காகவே கொரோனாவை துணைக்கு அழைத்திருப்பதோடு தமிழர் சிங்களவரை கோபப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கண்டதெல்லாம் ஊளையிடுவதும் என்று நான் நினைக்கிறேன். றிஸாத்தின் பிரச்சனையையும் அதற்கு பாவிக்கலாம் முஸ்லீம்களின் ஆதரவை பெறுவதற்காக. ஊழல் நிறைந்த நாட்டில் எதுக்கு எது நிகழ்கிறது என்று சொல்ல முடியாது. 

கொழும்பு இல்லத்தில் ரிஷாட் இல்லையாம்; மன்னாருக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் விரைந்தன

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அமைந்துள்ள இல்லங்களுக்குப் பொலிஸார் சென்றுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

எனினும் கொழும்பிலுள்ள வீட்டில் நேற்றிரவு பொலிஸ் குழுக்கள் சென்ற போது ரிஷாட் இருக்கவில்லை. இதனையடுத்து இரண்டு பொலிஸ் குழுக்கள் மன்னாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பெறுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய செயற்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதிவானிடம் நேற்றுப் பிற்பகல் பிடியாணை கோரி விண்ணப்பம் செய்தனர். இதன்போது, பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் நபர் ஒருவரைக் கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்த நீதிவான், இது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

இந்தநிலையிலேயே ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அமைந்துள்ள இல்லங்களுக்கு 6 பொலிஸ் குழுக்கள் சென்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்றிருந்தார் என்று ரிஷாத் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/79457

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியூதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைப்பு | Athavan News

ரிஷாட் பதியூதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்ய 6 பொலிஸ் (சீ.ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கே இவ்வாறு 6 பொலிஸ்  (சீ.ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் நேற்று(செவ்வாய்கிழமை) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பொதுநிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நேற்று நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

மேலும் அவரை பிடியானை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் எனவும் கோட்டை நீதவான் தெரிவித்திருந்தாரை்.

இந்தநிலையிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ் (சீ.ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பேருந்துகளைப் பயன்படுத்தி, ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீன், 9.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அமைச்சின் பணத்தை செலவிட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ரிஷாட்-பதியூதீனை-கைது-செ/

ரிஷாட் எங்கே? கொழும்பு, மன்னார் வீடுகளில் சல்லடை போட்டுத் தேடிய பொலிஸ்

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு கொழும்பிலும், மன்னாரிலும் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இரண்டு இடங்களிலும் அவர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இதுவரையில் அவர் கைதாகவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

https://thinakkural.lk/article/79609

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.