Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூரையைப் பிரித்து சிறுமியை வன்புணர்ந்தவருக்கு 20 வருட கடூழிய சிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா - சூரங்கள் பகுதியில், வீட்டொன்றின் கூரையைப் பிரித்து நுழைந்து, 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 53 வயது நருக்கு, 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (14) தீர்ப்பளித்தார்.

சூரங்கள் பகுதியில், 2012ஆம் ஆண்டில், வீடொன்றின் கூரையைப் பிறித்து நுழைந்த குறித்த நபர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமிக்கு 13 வயதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, குறித்த சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையப் பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், குறித்த நபருக்கு எதிராக குற்றப் பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முன்னெடுக்கப்ட்டன.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கடந்த சில வழக்கு தவணைகளுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்காமையால், எதிரி இன்றி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இன்றைய தினமும் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காதமையால் அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,200,000 ரூபாய் நட்டஈடாக வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் மேலதிகமாக 3 வருட கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், அரச செலவாக 3 குற்றச்சாட்டுக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் 75,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக 18 மாத கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/கரயப-பரதத-சறமய-வனபணரநதவரகக-20-வரட-கடழய-சற/75-256837

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் பிடிபட இல்லை போல இருக்குது...🤦‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Nathamuni said:

ஆள் பிடிபட இல்லை போல இருக்குது...🤦‍♂️

சார் எத வைச்சு சொல்லுறீங்க? tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சார் எத வைச்சு சொல்லுறீங்க? tw_glasses:

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கடந்த சில வழக்கு தவணைகளுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்காமையால், எதிரி இன்றி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இன்றைய தினமும் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காதமையால் அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கடந்த சில வழக்கு தவணைகளுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்காமையால், எதிரி இன்றி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இன்றைய தினமும் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காதமையால் அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி....😎

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நன்றி....😎

உங்கை வெம்பிளி பக்கம், ஆங்கிலோ ஏசியன் கடைக்கு பக்கத்தில், ஒருத்தர் சலூன் வைத்திருந்தவர். 

இவர் ஊருக்கு போட்டு வாறன்.... அம்மாவை பார்த்து கனகாலம் எண்டு 2012ல் கிளம்பிப் போனார்.

ஆள் வரேல்ல.... கடை ஓனர், ஆள் வரும், வரும் எண்டு பார்த்துக் கொண்டிருந்து பின்னர், வேற ஆளுக்கு கடையை கொடுத்து விட்டார்.

இரண்டு வருசத்துக்கு பின்னர்.... திரும்பவும் வந்து வேறு ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

என்னப்பா நடந்தது என்று கேட்க, வெள்ளவத்தையில் இருக்கும் போது, ஒரு பிரச்னை.... பெயில் எடுத்து.... பிரான்ஸ் வந்து அப்படியே ஜேர்மன் போய்.... இங்கே வந்தனான்...

என்ன.... கணகாலம்... 15 வருசம் ஆகி விட்டது. இதெல்லாம் பதிவில இருக்குமோ எண்டு தான் போனேன்.

அநியாயப்படுவார், (🤦‍♂️ ) ஏர்போட்டிலையிலே அமத்திப் பிடிச்சிடாங்கள்... அந்த வழக்கிலை தண்டம் 10,000 கட்டு, பெயில் பாஞ்சத்துக்கு இரண்டு வருசம் எண்டு தீட்டி விட்டார்களாம். 

ஐயா இரண்டு வருசத்துக்கு பதிலா... தெண்டம் அடியுங்கோ எண்டு கேட்டாராம்...

ஜட்ஜ் ஐயா மாட்டன் எண்டு போட்டாராம்.... கடைசீல அம்மாவை பார்த்தியலோ எண்டு கேட்டன்.... ஓமோம் வந்து பரத்தவோ.... நீர்கொழும்பிலை தான் உள்ள இருந்தான் என்றார்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.