Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘விஜய் சேதுபதி அண்ணா மன்னித்து விடுங்கள்’: பாலியல் மிரட்டல் விடுத்த நபர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘விஜய் சேதுபதி அண்ணா மன்னித்து விடுங்கள்’: பாலியல் மிரட்டல் விடுத்த நபர்!

spacer.png

 

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் 800 என்ற தலைப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே விஜய்சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இந்நிலையில் முத்தையா முரளிதரன், படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகிக் கொண்டார். இந்த சூழலில் விஜய்சேதுபதி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ரித்திக் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு, அதில் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து மிக மிக வக்கிரமான வார்த்தைகளுடன் பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பதிவுக்கு, இயக்குநர் அமீர், திமுக எம்பி கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பெண்கள் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுபோன்ற வக்கிர எண்ணத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்தை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்த நிலையில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அந்த நபர் மீது சைபர் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. எனவே, அவரை இன்டர்போல் உதவியுடன் பிடிக்க தமிழக போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

 

இந்த சூழலில், இலங்கையை சேர்ந்த ஐபிசி தமிழ் ஊடகம் அந்த நபரை பேட்டி எடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட வீடியோவில் அந்த நபர், “விஜய்சேதுபதி பற்றியும் அவரது மகள் பற்றியும் தவறாக பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை பிரஜை நான்தான். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று எனக்கு தெரியும். சின்ன குழந்தையை பற்றி தவறாக பேசிவிட்டேன். வாழ்நாளில் யாரையும் அப்படி பேசியது இல்லை. நான் ஏன் அப்படி பேசினேன் என்றால், கொரோனா காரணமாக எனக்கு வேலை போய் விட்டது. அதுமட்டுமின்றி இலங்கையில் நடந்த போரை பற்றி அவருக்கு எல்லாம் தெரிந்தும் அவர் நடிக்க ஒத்துக் கொண்டதாலே அப்படி ஒரு ட்வீட்டை போட்டுவிட்டேன். இதுபோன்ற தவறை இனி செய்ய மாட்டேன். இதற்காக நான் உலகில் வாழும் அனைத்து தமிழர்களிடமும், விஜய் சேதுபதி அண்ணனிடமும், அவரது மகள் என் தங்கை மாதிரி அவரிடமும், விஜய் சேதுபதி மனைவியிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தம்பியாக நினைத்து என்னை மன்னித்து விடுங்கள். வேலை கிடைக்காத ஒரு விரக்தியில் இவ்வாறு செய்து விட்டேன். எனக்கு, அப்பா, அம்மா. தம்பி என ஒரு குடும்பமே உள்ளது. வெளியில் எனது முகம் பெயர் தெரிந்தால் என் வாழ்க்கையே வீணாகப் போய்விடும். எனவே தயவு செய்து மன்னித்து விடுங்கள் விஜய் சேதுபதி அண்ணா” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

https://minnambalam.com/entertainment/2020/10/26/61/actor-vijaysethupathy-daughter-threat-apology

 

கண்டிப்பாக சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாகவும் தண்டனை வழங்கப்பட வேண்டியவர். இவரது டுவிட்டர் கணக்கு அழிக்கப்படும் முன் இவரால் மற்றவர்களுக்கு போட்ட ருவீட்டுகளிலும் மிக மோசமான வக்கிரமும் படு ஆபாசமும் நிறைந்து இருந்தன.

குழந்தைகள் மீதான வக்கிரப் பார்வை கொண்டு தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் மட்டும் சரியாகி விடாது - அதுவும் மாட்டுப்பட்ட பின்.

  • கருத்துக்கள உறவுகள்

பெத்த தாயையே தகாத வார்த்தைகளால் பேசி.. பாடல்பாடி ரசிக்கும்.. மேற்கு நாடுகளில் வாழும் நம்மவர்கள்.. இவனை தண்டிக்கக் கேட்பது மிக அபந்தம்.

இந்த இளைஞன் தன் இனத்திற்கு எதிராக செயற்படுகிறார் என்ற செய்தி அறிந்து தனது செயலின் தாக்கம் புரியாமல் செய்த தவறுக்கு இன்ரர்போல் அளவுக்கு போய் தேட வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் ஒரு கொலையை செய்துவிட்டு இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்கிளசை கூட பிடிக்க இப்படி ஒரு முஸ்தீபு எடுக்கவில்லை.

அதுபோக.. ஈழத்தில் இத்தனை ஆயிரம் குழந்தைகளைக் கொன்றவர்கள் எல்லாம் சர்வ சுதந்திரமாக நடமாட அவர்களுக்காக அறிக்கை விட்டு காப்பாற்றும் முரளிதரன் போன்றவர்களுக்கு நிழல் வடிவம் கொடுப்பது எவ்வளவு தவறு என்பதையும்.. இந்த இளைஞனின் செயற்பாடு மறைமுகமாக நிச்சயம் விஜய் சேதுபதிக்கு உணர்த்தி இருக்கலாம்.

எதுஎப்படியோ.. எச்சரிப்பது தவறு தான். ஆனால்.. கொலைகாரர்களை எல்லாம் தப்பிக்க வகை செய்யும் நபர்களை விட.. இந்த இளைஞனின் செயல் சிறுகுற்றமே. தன் இனத்தின் மேலான பற்றுதலில் உந்துதலால் விளைந்த ஒரு குற்றம். அவன் தன் தவறுணர்ந்து திருந்த ஒரு சந்தர்ப்பம் அளிப்பது சிறப்பு. கட்டாயம் அல்ல.

சிந்திக்க விஜய் சேதுபதி. பல்லாயிரம் தமிழ் சிறுவர் சிறுமிகளை வேட்டையாடிய ஒரு இனப்படுகொலைக்கு ஒத்தூதும் முரளிதரனுக்கு நிழல் வடிவம் கொடுக்க நினைத்தது எவ்வளவு தவறு என்பதையும் இந்த வேளையிம் இன்ரர்போல் கொண்டு இந்த இளைஞனை தேடுபவர்களும் சிந்தித்துப் பார்ப்பது மிக அவசியம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் மீதான தமிழ் ஊடக வெளிச்சத்தினை திசை திருப்ப, நடந்த வேலை.

போலீசார் நெருங்க போவதில்லை. நெருங்கினாலும், இவர் தான் அந்த பதிவின் சொந்தக்காரர் என்றும் உறுதியாகப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்லைனில் மிரட்டல் விட்டவர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், குற்றம் செய்ததாக கண்டறியப்பட்டால் தண்டிக்கப்படவேண்டும்.

ஐ.பி.சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்றும் கண்டறியப்பட வேண்டும்.

நீதித்துறை, காவல்துறையை தற்போது ஐ.பி.சி தனது கையில் எடுத்துள்ளதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.